சமீபத்திய பதிவுகள்

வலைபதிவர் அடித்துக் கொலை

>> Saturday, September 26, 2009

முப்பத்தி மூன்று தொழிலாளர்களின் வேலைநீக்க உத்தரவில் கையெªழுத்திடப்போய், கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார், பிரபல 'பிரிக்கால்' நிறுவனத்தின் மனிதவளத்துறை துணைத் தலைவரான ராய் ஜார்ஜ்!


னித வள மேம்பாட்டுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்டவர் ராய் ஜார்ஜ். கொல்கத்தாவில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் படித்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் மனிதவளத் துறைக்கான 2006-ம் ஆண்டு விருது பெற்றவர். பல கம்பெனிகள் இவரை மனிதவள துறைத் தலைவராக பணி யாற்றச் சொல்லித் தேடிவந்தன. காரணம், நிர்வாகம்-தொழிலாளர் இடையே இவர் கடைப்பிடிக்கும் மென்மையான அணுகுமுறை. ராய் ஜார்ஜுக்கு மனதில் தோன்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதற்காக http://royjgeorge.blogspot.comஎன்ற பிளாக் ஆரம்பித்து எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் தொடர்புடைய முழுத் தகவலும் அந்த பிளாக்கில் இருக்கிறது. அவர் கடைசியாக செப்டம்பர் ஆறாம் தேதி பதிவு செய்த கருத்தின் தலைப் புகள்.... இவை: 'வாழ்க்கையின் நோக்கம்!', 'திடீர் தீவிரவாதத்தால் எந்தப் பயனும் இல்லை!'

கொலை செய்யப்பட்ட ராய் ஜார்ஜ் சில மாதங்களுக்கு முன்புதான் பிரிக்கால் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க் படித்தவர். கேரளாவில் டிரேட் யூனியனிசம்தான் தொழில்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கொதிக்கும் இளைஞர்களில் ஒருவராக வளர்ந்தார் ராய் ஜார்ஜ். படித்து விட்டு சத்யம் தியேட்டர்ஸ், ஐ ஸ்டீல் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்தார். 'பிரிக்காலில் இருக்கும் சிக்கலான நிலைமை எனக்கு ஒரு சவால். அதில் ஜெயித்துக் காட்டுகிறேன்' என்று சொடக்கு போட்டுவிட்டுத்தான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டாராம். நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசுவாராம் ராய் ஜார்ஜ். இதற்கு முன்பு ஹெச்.ஆர். பொறுப்பில் இருந்த கர்னல், தொழிலாளர் பிரச்னையை சரிசெய்ய முடியாமல் வேலையை விட்டுப் போய்விட, புதிதாக வந்தவரோ நிர்வாகத்தின் ஈகோவுக்கும் தொழிலாளர்களின் உணர்ச்சிவேகத்துக்கும் நடுவே மாட்டி பலிகடா ஆனதுதான் மிச்சம்.

 
source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சுறாமீன் இறகுகளில் இருந்து சூப்பர் போதை

சுறாமீன் இறகுகளில் இருந்து சூப்பர் போதை : வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் கொள்ளை லாபம்
 

கொச்சி : சுறா மீன் இறகுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதிலிருந்து போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. கடலில் காணப்படும் சுறா மீன், பெரிய வகை மீன் இனத்தைச் சேர்ந்தது. பொதுவாக இதைப் பிடித்து, சிலர் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். சுறா மீன்களின் இறகுகளை அறுத்து காயவைத்து, அவற்றை வெளிநாட்டுக்கு அனுப்புவதும் உண்டு.



கேரள மாநிலம், கொச்சியில், வைப்பின், முனம்பம், மட்டாஞ்சேரி பகுதிகளில், சுறா மீன் இறகுகளை மீன் வியாபாரிகள் வெட்டி எடுத்து அவற்றிற்கு பிரத்யேக விலை நிர்ணயித்து விற்கின்றனர். ஒரு கிலோவுக்கு ஐந்தாயிரம் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் சுறா மீன் இறகுகள், தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு, சென்னை வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு, அவை புற்றுநோய், கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டன. மேலும், அறுவை சிகிச்சைக்கு பின், காயமடைந்த பகுதியில் கட்டப் பயன்படும் துணியில், சுறா மீன் இறகில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை திரவம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதி விரைவாக குணமடையும். இவ்வாறு, பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுறா மீன் இறகுகள், தற்போது, போதைப் பொருள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.



சுறா மீன் இறகில் இருந்து, சமீப காலமாகத் தயாரிக்கப்படும் போதைப் பொருள், கிழக்காசிய நாடுகளில், தற்போது பிரபலமடைந்து வருகிறது. கஞ்சாவை போன்ற ஒருவகை செடியின் இலைகளில் இருந்து கிடைக்கும் சாறு மற்றும் சுறா மீன் இறகில் இருந்து எடுக்கப்படும் திரவம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து, இப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு, கெட்டியாக தயாரிக்கப்படும் போதைப் பொருள், ஒரு லிட்டர் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. சுறா மீன்களை பிடிக்கக்கூடாது என, ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகள் தடை விதித்துள்ளன. அதுபோன்ற தடை ஏதும் இந்தியக் கடல் பகுதியில் இல்லை என்பதால், சுறா மீன்களைப் பிடித்து, அதன் இறகுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பல் மகிழ்ச்சியில் உள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை விமர்சித்த ஒலிநாடா மூலம் மாட்டிக்கொண்ட மகிந்தா



அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை மகிந்த ராஜபக்~ விமர்சித்த ஒலிநாடாவை தூதரங்களுக்கு வழங்கியவர்கள் குறித்து இலங்கை புலன் விசாரணை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் பு~;, தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்~, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் அடங்கிய ஒலிநாடாக்களை வெளிநாட்டு தூதரங்களுக்கு வழங்கியவர்கள் யார் என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அலரிமாளிகையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தின் போது மேற்குலநாடுகளின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க தலைவர்களை விமர்;சித்து, அவர்களுக்கு 



அசௌகரியங்களை ஏற்படும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ நீண்ட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜோர்ஜ் பு~; ஆட்சியிலிருந்த காலத்தில் பின்லாடன் இருக்கும் இடத்தைக்கூட அறியமுடியாமல் போனதாகவும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பெரிதாக பேசிக்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இரண்டு வருடம் என்ற குறுகிய காலத்தில் உலகில் மிகவும் பயங்கரமான அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் உள்ளிட்டவர்களை கொலை செய்தமை விடயங்கள் பற்றி கூட்டத்தில் விளக்கியுள்ள ஜனாதிபதி, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட தமக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆலோசனைகள் அவசியமற்றது எனவும் அமெரிக்காவுக்கும் மேற்குல நாடுகளுக்கும் ஏற்றவாறு செயற்பட தான் தயாரில்லை எனவும் கூறியுள்ளார். 

அமெரிக்கத் தலைவர்களையும், அந்த நாட்டின் கொள்கைகளையும் கடுமையாக விமர்ச்சித்து ஜனாதிபதி உரையாற்றிய பின்னர், அங்கு சென்றுள்ள ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், ஜனாதிபதியின் உரையடங்கிய ஒளி- ஒலி நாடாக்களை தம்வசம் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இந்த உரையின் விடயங்களை எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களின் ஒலி - ஒளிநாடாக்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் கைப்பற்றிய பின்னரும், அதன் உரையடங்கிய ஒலிநாடா தூதரகங்களுக்கு கிடைத்தமையானது பாரதூரமான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எவ்வாறு அந்த ஒலிநாடா தூதரகங்களுக்கு கிடைத்தது என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே முன்னாள் ஜனாதிபதியின் கீழ் அவரது ஊடகப் பிரிவில் பணியாற்றிய ஒருவரினால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகமும் தற்போது ஏற்பட்டுள்ளதாக அலரிமாளிகைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

source:tamilmurasam

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP