சமீபத்திய பதிவுகள்

காஸ்' சிலிண்டரை எடைபோட்டு வாங்குகிறீர்களா?

>> Saturday, April 17, 2010

 
 


- கே.ராம்குமார்
''காஸ் சிலிண்டரை எடை போட்டு காண்பித்து, டெலிவரி செய்ய வேண்டியது காஸ் ஏஜென்சியின் கடமை. அதை எடை போட்டு வாங்குவது நமது உரிமை' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த தயானந்தன்.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் இவர்.
'சிலிண்டரை எடை போட்டுக் கொடுத் தால்தான் வாங்குவேன்; இல்லாவிட்டால், அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று சொல்லிப் பாருங்கள். சில மணி நேரத்திலேயே எடை போடும் கருவியோடு டெலிவரி செய்வர்' என்கிறார்.
இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோர், எடை போட்ட பிறகே சிலிண்டரை பெறுகின்றனர். பில் தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட கூடுதலாக கொடுப்பதும் இல்லை.
'பொதுவாக சிலிண்டர் எடை 15 கிலோ முதல் 16 கிலோ வரை இருக்கும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் எடை மாறுபடும். அதன் அளவு கைப்பிடி வளையத்தை தாங்கும் பட்டையில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.
காஸ் எடை 14.2 கிலோ இருக்கும். இது 200 கிராம் வரை எடை கூடவும் செய்யும்; குறையவும் செய்யும். சிலிண்டர் எடை, காஸ் எடை சேர்ந்து மொத்தம் 30 கிலோ இருக்கும். இதை கணக்கிட்டாலே காசின் எடை குறைவாக உள்ளதா, இல்லையா என எளிதாக கண்டறிய முடியும்' என்கிறார் தயானந்தன்.
ஏஜென்சி நிறுவனங்கள் சார்பில் பேசிய, மதுரை கூடல்நகர் விக்னேஸ்வர் ஏஜென்சி உரிமையாளர் பழனிராஜன், காஸ் பயன்படுத்தும் மகளிருக்கு தரும் டிப்ஸ்....
'சிலிண்டர் கொண்டு வந்ததும் அதில் வால்வு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின், 'லீக்' ஆகிறதா என, ஸ்டவ்வை எரியவிட்டு பார்க்க வேண்டும். ஒருவேளை, 'லீக்' ஆனால், உடனடியாக வால்வு பகுதியை மூடிவிட்டு, திறந்தவெளியில் சிலிண்டரை வைக்க வேண்டும். இடைபட்ட நேரத்தில் எந்த சுவிட்சையும் அழுத்தக்கூடாது. ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்' என்கிறார். விற்கிற விலையில், காசை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; பொருளாதார சிக்கனமும் கூட என்பதை நாம் உணர வேண்டும்.
 
***


source:dinamalar


--
www.thamilislam.blogspot.com

StumbleUpon.com Read more...

பெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வெடிப்பு

பெரும் சேதம் இல்லை; ஐ.பி.எல்., போட்டி துவங்கியது

 

Top world news stories and headlines detail 

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கவிருந்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் வாசற்பகுதியில் 2 முறை பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் 10 பேர் காயமுற்று விட்டதாக கூறப்படுகிறது. சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்ததால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. ஐ.பி.எல்., டுவென்டி -20 போட்டி இன்று மாலை இந்த ஸ்டேடியத்தில் நடக்கவிருந்தது.பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன் அணி மோதுகிறது. மாலை 4 மணி அளவில் துவங்குவதாகயிருந்தது.


சரியாக 3 மணி 20 நிமிடம் அளவில் இந்த ஸ்டேடியத்தின் 12 ம் நம்பர் கேட் நுழைவு பகுதியில் பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. தீப்பிழம்பு கிளம்பியது. அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதில் 10 பேர் காயமுற்றனர். இதில் 3 பேர் போலீசார் ஆவர். இதனையடுத்து இங்கு ஆடத் தயாராக இருந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஓய்வு அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


இந்த வெடிப்பு சம்பவத்தால் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. வெடி விபத்தா அல்லது பயங்கரவாதிகள் யாரும் நடத்திய சதி வேலையா என இன்னும் போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. ஐ.பி.எல்., போட்டி நடக்கும் இடங்களில் குண்டு வைப்போம் என பயங்கரவாதிகள் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் இங்கு இருந்த ஜெனரேட்டர் அறை அருகே இருந்த சுவரில் இருந்து இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரோ திட்டமிட்டு இந்த சதித்திட்டத்தை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


டாஸ் வென்றது பெங்களூரு அணி : இன்று நடந்த பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் முடிந்தது. நாட்டு வெடி குண்டாக இருக்குமோ என்று தெரிய வருகிறது. குண்டு குறைந்த சக்தி கொண்டதால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்து விட்டதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.


இதற்கிடையில் 4 மணி அளவில் துவங்க வேண்டிய போட்டி முக்கால் மணி நேரம் தாமதமாக துவங்கியது. 4. 45 மணி அளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்ததது. போட்டி தாமதமாக துவங்கியதால் 20 ஓவர் 15 ஓவராக குறைக்கப்பட்டது.



source:dinamaalr

--
www.thamilislam.blogspot.com

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்

 
 

மினி எம்பி3 பிளேயர்
கம்ப்யூட்டரில் பாடல்களைக் கேட்க பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவது விண் ஆம்ப் பிளேயர். அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது விண்டோஸ் மீடியா பிளேயர். இருப்பினும் இன்னும் பல தர்ட் பார்ட்டி பிளேயர் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிகவும் எளியதாகவும், சிறப்பாகவும் இயங்கும் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர் எஸ்.டி. பி. பிளேயர் (STPSystem Tray Player).இது 200 கேபி அளவிலான சிறிய எக்ஸ்கியூட் டபிள் பிளேயராகக் கிடைக்கிறது. சிறிய அளவிலான பைலைக் கொண்டிருந்தாலும், இதில் உங்கள் பாடல் பைல்கள் அனைத்தையும் கையாள முடியும். கம்ப்யூட்டரில் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இசையை, பாடலைக் கேட்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இயங்குகிறது. 
இந்த பைல் இணையத்தில் இருந்து ஒரு ஸிப் பைலாக இறங்குகிறது. சிறிய பைலாக இருப்பதால், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவில் எந்த இடத்திலும் பதிந்து வைத்து இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், அதன் ஐகான் சிஸ்டம் ட்ரேயில் வந்து அமர்ந்து கொள்கிறது. இதனுடைய செட்டிங்ஸ் அனைத்தும் STP.INI என்ற பைலில் இது தேக்கி வைத்துக் கொள்கிறது. சிஸ் ட்ரே ஐகானைக் கிளிக் செய்து, இதன் அமைப்பை சிறிய பாராக வைத்துக் கொள்ளலாம். அதனை மானிட்டர் ஸ்கிரீனில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கலாம். இதில் ஒரு மியூசிக் பிளேயரில் வழக்கமாகக் காணப்படும் Play, Pause, Stop, Forward மற்றும் Backward பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேலும் பிளே லிஸ்ட், ஈக்குவலைசர், எம்பி3 தகவல்கள், ஆல்பம் தர எனத் தனித் தனி பட்டன்கள் உள்ளன. இவை தவிர சில செயல்பாடுகளுக்கு நாமும் ஹாட் கீகளை செட் செய்து கொள்ளலாம். இதற்கென ஹாட் கீ ஒன்று கீழாகத் தரப்பட்டுள்ளது. 
இந்த எஸ்.டி.பி. எம்பி3 பிளேயரைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://stp.byteact.com/


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP