சமீபத்திய பதிவுகள்

ஈழத்தை அங்கீகரிக்கும் உலகநாடுகள்! -பேசுகிறார் பிரபாகரன்!

>> Tuesday, August 4, 2009

காலம்வரும். தியாகத்தின் விதைகள் துளிர்விடும். பாலைவனத்தில் லீலி மலர்கள் பூப்பது போலவும் பாறை முகடுகளில் நீரூற்றுகள் பீறிடுவது போலும். ஈழம் மலரும். அதுவரை உண்மையின் முடிவிலா தன்மையை நம்புவோம். நீதியின் அடங்காத உயிர் துடிப்பை நம்புவோம்.

காங்கிரசோடும் உரையாட வேண்டும் என எழுதியதில் உணர்வாளர்கள் சிலருக்கு வருத்தம். இன அழித்தலை நடத்தியதே அக்கட்சியல்லவா, அவர்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக் கிறது என சிலர் கேட்டனர். ஐயமுறும் அன்பர்கள் அனைவருக்கும்: ""அர்த்தமுள்ள உரையாடல் உண் மைக்கு அப்பாற்பட்டதாய் இருக்க முடியாது. உரை யாடலின் அடிப்படையே உண்மையை தேடுவதும் நிலைநிறுத்துவதும்தான்". அதற்கும் மேலாய் உரையாடல் போற்றுதற்குரிய ஜனநாயக வழிமுறை, பண்பான மனித நெறிமுறை.

ஈழத்தமிழ் மக்களின் நீண்ட அரசியல் உரிமைப் போராட்டத்தில் இந்தியா தொடர்பான முக்கிய உண்மைகள் இவை: 1970-களின் இறுதி யிலும், 1980-களிலும் இந்தியப் பெருங்கடல் பகுதி யில் அமெரிக்க மேலாண்மையை கட்டுப்படுத்தும் நோக்குடனும் அமெரிக்காவின் வாலாக செயற்பட்ட இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்த னேவுக்கு தலைவலி தர வேண்டியுமாய் இந்தியா ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங் களும் வழங்கியது. ஒரு குழுவென்றால் ஒருவேளை எதிர்காலத்தில் தங்கள் சொல் கேட்கும் எடுபிடி களாய் இருக்க மறுப்பார்கள் என்று கருதி பல போராளிக்குழுக்களை உருவாக்கி ஊக்குவித்து சகோதர யுத்தத்தில் களமிறக்கியது. தங்கள் சொற்படி நடக்காமல் தமிழீழக் கனவில் உறுதியாய் நின்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தை எரிச்சலூட்டும் தொந்தரவாகக் கருதியது. அவர்களை அழிக்க வேண்டி இந்திய ராணுவத்தை தமிழீழப் பகுதிகளுக்கு அனுப்பி சுமார் 15,000 அப்பாவித் தமிழ்மக்களின் படுகொலைக்கும் போராட்டம் பலவீனமடைதலுக்கும் காரணமாகி சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றாகிய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கும் வழிவகுத்தது. அது முதல் இன்றுவரை இலங்கை அரசுகள் நடத்திய மூர்க்கத்தனமான தமிழ் இன அழிப்பு யுத்தத்திற்கு ராணுவ உதவிகள் மட்டு மல்லாது முழுமையான ராஜதந்திர உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கியது. வேறெந்த நாடும் தமிழரின் உதவிக்கு வந்து விடாதபடி தடுத்ததும் இந்தியாதான். தமிழருக்கு நடந்த இனஅழித்தல் உண்மை வெளியே வந்துவிடாதபடி உலக அரங்குகளில் தடுத்து நிறுத்த உதவிக் கொண்டிருப்பதும் இந்தியாதான். சுருங்கக்கூறின் ஈழத்தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலில் இலங்கைக்கு எந்தளவு பங்கு உண்டோ அதனிலும் அதிகமாய் இந்தியாவுக்கு உண்டு. இதனை எடுத்துரைத்து கொள்கை மாற்றம் கொணர்வதுதான் உரையாடலின் அடிப்படையே.

ஆதலால், இந்தியாவுடன், ஆளும் காங்கிரஸ் அரசுடன், அக்கட்சியுடன் உரையாடித்தான் வேண்டும். இன அழித்தலுக்குத் துணை நின்ற உயர் ஜாதியினரா லும், கேரள மாநிலத்தவர்களாலும் நிரப்பப்பட்ட புதுடில்லி அதிகார அமைப்பினை கேள்விக்குள்ளாக்கி அதன் ஆத் மாவினை மீட்கத்தான் வேண்டும். அம்முயற்சி வெறும் முழக்கங்களால் மட்டுமே ஆகக் கூடியதல்ல. பன்முனை உத்திகள் வேண்டும். மிக முக்கியமாக அரசியல் ரீதியாக தமிழகத்தின் ஒன்றிணைந்த குரல் வேண்டும்.

sweetdreams1இந்தியாவின் சுமார் எட்டு சத மக்கள் தமிழர்கள். இம்மண்ணின் தனித்துவமான மொழி-பண்பாட்டு வர லாற்றுக்குச் சொந்தமானவர்கள். நமது உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட வழங்காத, அதுவும் இன அழித்தலுக்கே துணை நிற்கும் வெளியுறவுக் கொள்கை எதிர்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கும் துறைகளில் குறிப்பிட்ட ஜாதியினர், மொழி யினர் குவிந்திருப்பதும் கேள்வி கேட்கப்பட்டு கூட் டாட்சித்தன்மையை பிரதிபலிக்கும் ஏற்பாடுகள் செய் யப்பட்டே ஆக வேண்டும். குறுகிய மொழி-இன-மாநில வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அப்பால் நின்று பொறுப் புணர்வுடன் இது செய்யப்பட வேண்டும். இவற்றில் தமிழகத்தின் ஒன்றிணைந்த நிலைப்பாடும், அதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுகிற மாற்றமுமே தமிழீழத்திற்கான முதற்படி.

இலங்கை ராணுவத்தளபதி, சரத் பொன்சேகா தமிழகத் தலைவர்களை "அரசியற் கோமாளிகள்' என்றார். அவர் வெளிப்படையாகச் சொன்னார். புது டில்லியோ சொல்லாமல் அவ்வாறு நடத்தியது. உண்மை யில் இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான இந்தியா வின் கொள்கை வகுப்பில் தமிழகத்தின் எந்த அரசியற் கட்சியையும், தலைவர்களையும் புதுடில்லி அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட மாட்டார்களென்பதும், இப்பிரச்சனையை வைத்து ஒருவரையொருவர் வீழ்த்தலாமா என்றுதான் பார்ப்பார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் நடந்ததும் அதுதான். எல்லாம் முடிந்து போகிற நேரம் நெருங்கிவிட்டது. தெரிந்தும் கூட அதை வைத்து தேர்தல் வெற்றி தோல்வியை மடை மாற்ற முடியுமா என்றுதான் நம் தலைவர்கள் இங்கு கணக்கிட்டார்கள். தம் பழி பாவத்திலிருந்து தம்மை கழுவிக்கொள்ள வேனும் அனைவரும் ஈழப் பிரச்சனையில் ஒரு குரலாய் முழங்க வேண்டும்.

காங்கிரசாரோடு உரையாடவேண்டுமெனக் கூறுவதற்கு காரணங் கள் இரண்டு. ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் மனது வைத்தால் ஒரு நாளில் வெளியுறவுக் கொள்கை மாறும், அப்படியே உலகக் கருத்தும் மாறும். இந்தக் கொள்கை மாற்றத்தை கொணர்வதில் தமிழக காங்கிரஸார் அமைதியான- தீர்க்கமான பங்காற்ற முடியும். ஈழத்தமிழ் மக்கள் அழிய வேண்டுமென விரும்புகிறவர்களுமல்ல அவர்கள். நீதியான தீர்வு அம்மக்களுக்கு வேண்டுமென மாநில காங்கிரஸ் தம் தலைமைக்கு உறுதியான வேண்டுகோள் வைத்தால் அதை முற்றாக தலைமை நிராகரிக்குமென நாம் நினைக்கவில்லை.

ஆதலால்தான் தமிழீழத்திற்கு ஆதரவான ஒத்த கருத்தினை தமிழகத்தில் உருவாக்குவது முதற்படி என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இரண்டாவது, இன அழித்தல் புரிந்த இலங்கையை உலக அரங்கில் தீண்டத்தகாத நாடாக ஆக்க வேண்டும். போரில் புலிகளை வீழ்த்தியதை விட இலங்கை அரசு பெற்றுவரும் பெருவெற்றி என்னவென்றால் இன அழித்தல் உண்மைகள் இன்றுவரை உலகின் கவனத்திற்கு வர முடியாதபடி தடுத்திருப்பதும், இன அழித்தல் குற்றங்களை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை பேரளவு அழிப்பதில், அகற்றுவதில் பெற்றிருக்கும் வெற்றியும்தான். கொடுமை நடந்த முல்லைத்தீவு பகுதிக்கு இன்றுவரை உலக அமைப்பு எதையும் இலங்கை அனுமதிக்கவில்லை. மூன்று லட்சம் மக்கள் உயிர்வாழும் திறந்த வெளி கொலை முகாம்களுக்குக் கூட உலக அமைப்புகளை தங்குதடையின்றி இன்னும் அனுமதிக்கவில்லை. பெரும் கொடுமை, உலக அளவிலான நீதி விசாரணை நடத்த ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட சிறு முயற்சியினை முறியடிப்பதில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயற்பட்டு வெற்றிகண்டன. ஆனால் இவற்றை யெல்லாம் மீறி நாம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இன அழித்தல் (ஏங்ய்ர்ஸ்ரீண்க்ங்) என்பது வெறும் ஈழத்தமிழர் பிரச்சனையோ, துன்பமோ அல்ல. அது பொது மானுடம் சந்திக்கும் சவால். இருளுக்கும் ஒளிக்குமான பெரும் போர். இதில் நாம் தோற்றுப் போக முடியாது, கூடாது.

எல்லா தடைகளையும் கடந்து இன அழித்தல் கொடுமைகளை சட்ட விஞ்ஞான முறைகளின்படி பதிவு செய்ய டமஈக போன்ற அமைப்புகள், தமிழுணர்வும் மனிதநேயமும் கொண்ட பத்திரி கையாளர்கள், கற்றறிந்த தமிழ் அறிஞர்கள் ஒருங்கிணைந்து யூதர் களைப் போல் இயங்க வேண்டும். இன்றும்கூட ஹிட்லர் என்ற பெயரைச் சொல்லவே ஜெர்மானியர் கள் கூச்சப்படுகின்றனர். ஏனென்றால் ஹிட்லரின் கொடுமைகளை எழுத்து, ஒலி, ஒளி வடிவங்களில் பதிவு செய்து பொது மானுடத்தின் மனசாட்சி தளத்தில் மறுக்க முடியாதபடி பதிவு செய்ததில் யூத அறிஞர்கள் வெற்றி பெற்றார்கள். இங்கோவென்றால் சென்னையின் பெரிய மனிதர்களெல்லாம் இலங்கை தூதரகத்திற்கு மது விருந்து கொடுத்து பாராட்டு நன்றி விழாவெல்லாம் நடத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டுமென்றால் இனஅழித்தலின் கொடூர உண்மைகளை தமிழுலகிற்கும் பொது உலகிற்கும் முழுமையாகப் பதிவு செய்ய வேண் டும். இன அழித்தலுக்கு பூரண துணையாளர்களாய் நின்ற சாமிகளும், ஞானிகளும் ராமர்களும் எவ்வளவு கேவலமானவர்கள், எப்படி தமிழ் இன அழித்தலின் பங்காளிகள் என்பது அப்போது வெளிப்படும். உண்மையில் இந்தியாவில் புதியதொரு கருத்துருவாக்க பாசிசத்தின் கருவிகளாய் மேலாதிக்க சக்திகள் கட்டுப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள் மாறி, சமூக-மனித நீதிக்கு பெரும் அச்சுறுத்தலாய் நிற்கின்றன. தமிழர் இன அழித்தலை நிரூபிப்பதன் மூலம் இவர்களின் அசிங்கமான முகங்களை தமிழ் வரலாற்றிற்கு, மனித குல வரலாற்றிற்குப் பதிவு செய்ய வேண்டும். இன அழித்தல் குற்றம் நிரூபிக்கப்படும் போதுதான் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படும். இப்போதைக்கு இலங்கையை காப்பாற்றி வருவது இந்தியா, சீனா மற்றும் இந்தியா வின் ஆங்கில ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை மாறினால் பெரிதாக சீனா ஒன்றும் செய்துவிட முடியாது. இங்குள்ள ஆங்கில ஊடக மோசடிப் பேர்வழி களை தோலுரிக்கிற வேலையை நாமே செய் வோம்.

மூன்றாவதாய் பொருளாதார ரீதியாக இலங்கை பலவீனப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு திமோரை தன் காலடிக்குள் மிக நீண்ட காலம் இந்தோனேஷியா நசுக்கி வைத்திருந்தது. ஆனால் அதன் பொருளாதாரம் சிதைந்து நெருக்கடிக்குள்ளான காலத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகள் கிழக்கு திமோர் சுதந்திரத்தை உறுதி செய்தன. லட்சக்கணக்கான ராணுவத்தினருக்குத் தீனி போடும் இலங்கை பொருளாதாரம் வெளிநாடுகளின் உதவியின்றி இயங்க முடியாது. இனஅழித்தல் குற்றத்தை அடிப்படையாக வைத்து இலங்கையின் தேயிலை மற்றும் பிற உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் பேரியக்கத்தை முற்போக்கு தொழிற்சங்கங்களின் துணையோடு உலக அளவில் தமிழர் கள் நடத்த வேண்டும். ராஜபக்சே அரசின் குற்றத்திற்கு சாமான்ய சிங்கள மக்களை தண்டிக்கலாமா என சிலர் கேட்கலாம். இன அழித்தல் என்பது சாதாரண குற்ற மல்ல. மனித குலத்திற்கெதிரான குற்றம். நீதி செய்யப் படவில்லையெனில் நாட்டு மக்கள் யாவருமே தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும். இனஅழித்தலுக் கான நீதியும், நீதியான அரசியல் தீர்வும் உறுதி செய்யப்படும் வரை இந்தியா கூட எல்லா நிதி உதவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பொருளாதாரத்தில் என்று இலங்கை தடுமாறுகிறதோ அப் போதுதான் அது அரசியல் ரீதியாக அடிபணியும்.

வேலுப்பிள்ளை அவர்களுடனான உரையாடலில் ஒரு கட்டத்தில் ""நான்கு உலக நாடுகள் தனி ஈழத்தை அங்கீகரிப் போம் என வாக்களித்துள்ளார்கள். நாங்கள் யாழ்ப்பாணத் தை மீண்டும் கைப்பற்றும் போது அது நடக்கும்" என்றார். அவை எந்த நாடுகள் என்று அவரிடம் நான் கேட்கத் துணிய வில்லை. ஆனால், அரசியல், பொருளாதார சூழல்கள் அமைந்து வருமெனில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீரிக்க உலகின் பல நாடுகள் முன்வரும் என நாம் உறுதியாக நம்பலாம்.

இன்னொன்றும் நடக்க வேண்டும். என்ன அது?

(நினைவுகள் சுழலும்)

StumbleUpon.com Read more...

உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி அது பிரபாகரன்

Miniyaanராஜீவ்கொலைக்கு பழிவாங்கியாக வேண்டிய தேவையும் நினைவும் சோனியா குடும்பத்திற்கு இருந்திருக்கலாம். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்து மகாச்சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கு, ரஷ்யாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே ஒரு ஐக்கியம் ஏற்பட்டு அது தனது பிராந்திய நலனில் பேரிடியாக மாறும் கவலைகள் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக மோசமான முறையில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உபகரணங்களை வழங்கி வந்திருக்கிறது.

கடந்த வருடம் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வன் படுகொலை செய்யப் பட்ட போது. நீண்ட நேரம் போராடி மண்ணுக்குள் புதைந்திருந்த அவரது உடலைத் தோண்டி எடுத்ததாக தகவல்கள் வந்த போது மிக மோசமான க்ளஸ்டர் குண்டு வீசப்பட்டதான செய்திகளை இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. க்ளஸ்டர், பாஸ்பரஸ், கொத்துக் குண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என பேரழிவு ஆயுதங்களோடு மக்களைத் துரத்தும் துணிச்சலும் தைரியமும் இலங்கைக்கு இந்தியா கொடுத்தது.

விளைவு பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து முள்ளியவாய்க்காலில் ஒரு நரவேட்டையை நடத்தி முடித்து விட்டது. இன்று இலங்கையில் புதிய சந்தை ஒன்றை உருவாக்கி விட்டது இந்தியா.

ஒரு மாபெரும் இரத்தக் குளியலின் பின் இந்திய முதலாளிகளுக்கு அந்தச் சந்தையை பரிசளிக்கப் போகிறது இந்தியா. மீள்கட்டுமானம், புனர்நிர்மாணம் என்கிற பல பெயர்களால் இவர்கள் இதை அழைத்துக் கொண்டாலும் டி.வி.எஸ் நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள், ரிலை-யன்ஸ், எல்.என்.டி போன்ற நிறு-வன-ங்கள் அங்கே முதலீட்-டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

வடக்கில் தேர்தலை நடத்தி டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்ற துரோகிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் இது மட்டுமே இப்போது ஈழத்தில் இன்னும் எஞ்சியிருக்கிறது.

ஆனால் இது இந்தியாவோ இலங்கையோ நினைப்பது போலல்ல, இந்தப் பிரச்சனையை புதிய தலைமுறை கையிலெடுத்துள்ளது. புலத்திலும் தமிழகத்திலும் மாற்றங்கள் வரும். இந்தியா மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் ஒரு கடும்போக்கு ஈழத்திற்கான அரசியல் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

இந்நிலையில்தான் இதுவரை ஈழம் பற்றி வாயே திறக்காத சிலர். அல்லது அங்கு இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று பேசியும் எழுதியும் வந்த சிலர். எல்லாம் முடிந்து விட்டது. இருபதாயிரம் போராளிகளை இழந்து ஒரு இலட்சம் மக்களை இழந்து, மூன்று லட்சம் மக்களை அகதி முகாமுக்குள் முடக்கி விட்டு முப்பதாண்டுகளுக்குப் பிறகு நாம் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறோம் என்கிறார்கள் சிலர்.

ஈழப் போராட்டம் தொடங்கிய இடத்திற்கா வந்திருக்-கிறது, ஐம்பதுகளில் ஈழப் போராட்டம் ஈழத்தைத் தாண்டு வேறு எங்கும் பேசப்பட்டதில்லை. இன்று ஈழப் போராட்டம் பல்வேறு விதங்களில் விவாதிக்கப்படுகிறது. தமிழகம் தழுவிய பிரச்சனையாக ஓரளவுக்கேனும் மாறியிருக்கிறது. புலத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு ஈழத்தை சர்வதேச சமூகம் பேசும் ஒரு பிரச்சனையாக மாற்றியிருக்கிறது. தொடங்கிய இடம் என்பது இதுவல்ல. அப்போது நாம் ஒப்பீட்டளவில் உயிர்களை இழக்கவில்லை. அதே நேரம் அது ஒரு இந்தியாவின் பிராந்திய நலனுக்கான சீட்டு விளையாட்டுப் பிரச்சனையாக இருந்தது. இன்றும் அப்படித்தான் ஆனால் இனி இந்தியா விரும்பியது போல இந்தப் பிரச்சனையை நீண்டகாலத்திற்கு நீட்டித்துச் செல்ல முடியாது.

ஆசியாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழப் பிரச்சனை முன்னிலும் பார்க்க இந்து மகாச்சமுத்திரப் பிராந்திய அரசியலை பதட்டப்படுத்தும் ஒரு பிரச்சனையாக இருக்கும் என நம்பலாம். ஆனால் இந்த நிலைக்கு வந்து சேர ஈழ மக்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். வடுக்களும் அதிகம். முடமாக்கப்பட்ட அம்மக்களிடம் இனி போராடக் கேட்பதே அபத்தமான விஷயமாகப் படுகிறது. ஆனால் அதே சமயம் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கைக்கு வெளியில் உள்ள பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் கைகளில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழர்களிடமே உண்டு. தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாகச் செயல் படும் தலைவர்கள் இனியாவது இந்தப் பிரச்சனையை தீவீரமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்களின் கிளார்ச்சியிலேயே ஈழ மக்களின் வாழ்வுரிமை அடங்கியிருக்கிறது.

இன்று ஈழம் மூன்று கழுகுகளிடம் சிக்கியிருக்கிறது ஒன்று பேரினவாதப் பாசிச இலங்கை அரசு. இன்னொன்று இந்தியப் பேரினவாத அரசு, மூன்றாமவர்கள் மேற்குலகினர். இந்தப் பிரச்சனையை மனிதாபிமானப் பிரச்சனையாகப் பேசும் எல்லா நாடுகளுமே லாபம் கருதியே அங்கு தலையிடக் கோருகின்றன. உண்மையில் இந்த நாடுகள் இந்தப் போரை நிறுத்த நினைத்திருந்தால் இந்தியாவின் விருப்பத்தையும் மீறி இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தங்களின் தன்னார்வக் குழுக்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதைத்தான். அதாவது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வக் குழுக்களை அனுப்ப வேண்டும் என்பதுதான். இயற்கைப் பேரிடர் நேரும் போதும் யுத்த அழிவு ஏற்படும் போது தன்னார்வக் குழுக்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஆனாலும் அம்மக்களுக்கு உண்ண உணவோ உடையோ கிடைக்கும் என்பதால் நாம் இதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

ஐநாவோ, பான்கிமூனோ, விஜய்நம்பியாரோ எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் கண்கூடாக இலங்கையில் பார்த்தோம். ''பெருந்தொகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட அதை அமைதியான முறையில் ஐநாவின் கழுத்தறுத்து விட்டார் பான்கிமூன்'' இன்னர் சிட்டி பிரஸ் கண்டித்தது இங்கே நினைவில் நிறுத்தலாம். சேனல் 4, டைம்ஸ், லே மாண்டோ ஆகிய இதழ்கள் வெளியிட்ட ஆவணங்கள் மட்டுமே நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியாக இருக்கிறது. இந்தியாவின் செல்லப் பிள்ளையாக ஐநா அவையில் இருக்கும் விஜய்நம்பியார் இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சென்ற போது அங்கு சென்று விட்டு அவர் நேராக டில்லி வந்து விட்டு ஐநா அவைக்குப் போனார். அங்கே தனது இலங்கைப் பயணம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க மறுத்திவிட்டார். புலிகளின் தலைமை துரோகத்தனமாக அழிக்கப்பட்ட அதே நாட்களில் இலங்கைக்குச் சென்ற விஜய்நம்பியார் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அப்படியே திரும்பி நியூயார்க்கிற்குப் போனார். எல்லாம் முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் இருந்து போர்ப் பகுதியைப் பார்த்து விட்டு மௌனமாக இன்று வரை விஜயநம்பியார் இருக்க பான்கிமூனோ அங்கே கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்றார். ஆனால் பான்கிமூன் இலங்கை செல்வதற்கு முன் டில்லிக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து விட்டுச் சென்றதாக செய்திகள் கசிந்தது.

ஆனால் இந்தியாவின் இத்தகைய போர் வெறியும் பிராந்திய அடாவடித்தனமும்தான் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. போர் முடிந்துவிட்டச் சூழலில் இந்தியா கண்டெடுத்த 13&வது சட்டத்திருத்தம் குறித்துக் கூட இந்திய, இலங்கை அரசுகள் பேச மறுக்கின்றன. 13&வது சட்டத் திருத்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை பிரித்த போது அது செல்லாமல் ஆகி விட்ட சூழலில் தமிழ் மக்களுக்கான உருப்படியான அரசியல் தீர்வை வைக்காமல் இலங்கை நிம்மதியாக இருக்க முடியாதபடி தமிழ் மக்கள் நெருக்கடிகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே தமிழ் மக்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்கு சொல்ல வேண்டிய செய்தி.

வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு 180 நாட்களுக்குள் அனுப்புவதாகச் சொன்னதாக வும் இந்தியாவுக்கு உறுதி மொழி கொடுத்ததாகவும் இந்தியத் தரப்புத் தெரிவித்தது. ஆனால்

இன்னும் மூன்றாண்டுகளுக்காவது அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்தால் மட்டுமே வன்னியின் மீதான இராணுவ ஆதிக்கம் சாத்தியம். அதுவரை வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உளவியல் ரீதியிலும் உடல் ரீதியிலும் ஊனமாக்கி வெறும் நடை பிணங்களாக பாரம்பரீய பிரதேசங்களுக்கு அனுப்பினால் இனி தமிழீழம் என்றோ தமிழர் உரிமை என்றோ பேச சாத்தியம் இல்லை.

முப்பதாண்டுகளாய் ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்குள் வாழ்ந்த மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்ததை விட இராணுவத்தின் கீழ வாழ்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது. எப்படி இன்று உலகெங்கிலும் விடுதலைப் புலிகளுக்கு புதிய எழுச்சியும் ஆதரவும் கிடைத்துள்ளதோ அது போல வன்னியில் மீண்டும் புலிகள் அரசியல் எழுச்சியைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிரபாகரன் தேவையில்லை.

இன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி உண்டென்றால் அது பிரபாகரன்தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போராட்டக் குறியீடாக முன்னை விட இப்பொழுது அதிக அளவில் முதன்மைபடுத்துவது மிக எளிதாக முடியும்.

உலகம் முழுவதும் அது இலகுவாக நடந்து வருகிறது. தடைகளும் கட்டுப்பாடுகளும் எதனையும் தடுத்துவிட இயலவில்லை.

ஆனால் தமிழகத்திலோ வழக்கம் போல எவ்வித அரசியல் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சிங்கள ராணுவம் செய்தி பரப்பிய அன்று அதனை மிகப் பெரிய எழுச்சியாக மக்களிடம் மாற்றி இருக்க முடியும். அந்த எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தி அதனை போராட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும். பிரபாகரன் இறந்துவிட்டார், இறக்கவில்லை என்பதைத் தாண்டி அந்த மரணச் செய்தியை அரசியலாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் தலைவர்கள் அதற்குத் தயார் இல்லை. அல்லது அவர்களால் முடியவில்லை. இல்லை அவர்களுக்குத் தெரியவில்லை.

விளைவு லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்களின் மரணம், தமிழ்நாட்டில் தீக்குளித்த போராளிகளின் மரணங்கள் எவ்வாறு அரசியலாக்கப்படவில்லையோ அதைப் போல பிரபாகரன் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டதும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சவமாய்க் கிடந்தது தமிழகம்.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் எக்காலத்திலும் ஈழ ஆதரவு அலையை மக்களிடம் உருவாக்க முடியாது. எழுச்சி மிக்க செயல்பாடு மட்டுமே அதனை உருவாக்க முடியும்.

இப்பொழுது உருவாகியுள்ள புதிய தலைமுறை இதனை முன்னெடுத்துச் செல்லும். செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.

பொன்னிலா

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP