சமீபத்திய பதிவுகள்

யூரோ கா‌ல்ப‌ந்து போ‌ட்டி: கா‌லிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்

>> Sunday, June 15, 2008

யூரோ கா‌ல்ப‌ந்து போ‌ட்டி: கா‌லிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் `டி' ‌பி‌ரி‌வி‌ல் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஸ்பெயின்.

ஆட்டம் தொடங்கிய 15 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டோர்ரல் முதல் கோல் அடித்தார். 34 வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் இப்ராகிமோவிச் பதில் கோல் திருப்பி சமனுக்கு கொண்டு வந்தார்.

இதன் பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா கோல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பரபரப்பாக நட‌ந்த இ‌ந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில், தனது 2 -வது வெற்றியை பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
 
(மூலம் - வெப்துனியா)

 

 

StumbleUpon.com Read more...

டென்மார்க்கை தாக்க அல் - காய்தா திட்டம்

டென்மார்க்கை தாக்க அல் - காய்தா திட்டம்
கோபென்ஹேகன் (டென்மார்க்), சனிக்கிழமை, 14 ஜூன் 2008   ( 17:45 IST )
டென்மார்க்கில் தாக்குதல் தாக்குதல் நடத்த அல் - காய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் புலனாய்வு துறை எச்சரித்துள்ளது.

டென்மார்க்கில் தாக்குதல் நடத்துவதற்கான இலக்குடன் அது தொடர்பான பயிற்சி மற்றும் திட்டங்களை அல் - காய்தா இயக்கம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் புலனாய்வு துறை தலைவரான ஜேக்கப், பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இஸ்லாமாபாத்திலுள்ள டென்மார்க் தூதரகத்தில் அல் - காய்தா தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் 2 பாகிஸ்தானியர்கள் உட்பட 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மூலம் - வெப்துனியா)
 

StumbleUpon.com Read more...

நாத்திக பிரச்சாரத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது

நாத்திக பிரசாரத்தை அனுமதிக்க கூடாது: பா.ஜனதா வலியுறுத்தல்
நாத்திக பிரச்சாரத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என பா.ஜனதா கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது :

எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்துகின்ற வகையில் பேசுவதோ எழுதுவதோ சைகை காட்டுவதோ கூடாது என சட்டம் தெளிவாக சொல்லியிருக்கின்ற போதிலும் தொடர்ந்து இந்து மத உணர்வு பகிரங்கமாக பொது இடங்களில் புண்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நாத்திக விழா என்ற பெயரில் தீமிதித்தல் போன்ற இந்து மத பழக்கங்களை விமர்சனம் செய்வதற்கு முனைந்துள்ளனர்.

காவல் துறையும் அவர் களது பொது கூட்டத்திற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. அரசாங்கமே தடை செய்ய வேண்டிய ஒரு நிகழ்ச்சியை அரசாங்கமே அனுமதி கொடுத்த காரணத்தால், மக் களது உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையில் இந்து முன்னணி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தியது.

இதில் பா.ஜனதா கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் குமார வேலு, தென் சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் மற்றும் ஏனைய பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காவல் துறை கைது செய்துள்ளது.

நாத்திக பிரசாரம் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நடை பெற்றாலும், ஆதரவு பெற வில்லை.தோல்வியே கண்டிருக்கிறது. இத்தகைய முயற்சிக்கு துணை போவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
http://in.tamil.yahoo.com/News/Regional/0806/15/1080615011_1.htm

StumbleUpon.com Read more...

தினமலருக்கு கிடைத்த அல்வா துண்டு செய்தி

>



http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/10/007/10_06_2008_007_001.jpg

StumbleUpon.com Read more...

மரண தண்டனை அளியுங்கள்

>




http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/10/018/10_06_2008_018_010.jpg

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP