சமீபத்திய பதிவுகள்

சோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்

>> Wednesday, December 9, 2009

 

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட முடியும் என்றாலும், பல இல்லங்களில் சிறுவர்கள் கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேஷன்கள் என்னும் சாதனத்தைப் பயன்படுத்துவதனைக் காணலாம். இவற்றிற்கான கேம்ஸ் தயாரிப்பில் சோனி நிறுவனம் அண்மையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளது. தமிழில் நம் நாட்டிற்கேற்ற கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்துள்ளது. இதற்கென சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன் மென்ட் மற்றும் கேம் சாஸ்திரா சொல்யூசன்ஸ் இணைந்து பல கேம்ஸ்களைத் தமிழில் உருவாக்கித் தந்துள்ளன. பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் பி.எஸ்.2 (ரூ.499) மற்றும் பி.எஸ்.பி. (ரூ.999) ஆகியவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இவை ஒரு கதை போல் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பிறந்தது முதல் வெளிநாடுகளில் வசித்த ஒருவன், தன் மூதாதையர் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அந்த கிராம விளையாட்டுக்களில் பங்கு பெறுகிறான். ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கிறான். இதில் 1. பசிசி எனப்படும் தாயக்கட்டம், 2. ஆடு புலி ஆட்டம், 3. காற்றாடி விடுதல், 4.கபடி,5.கிட்டி எனப்படும் கில்லி தண்டா மற்றும் 6. நடன விளையாட்டு என கேம்ஸ்கள் தரப்பட்டு, நாம் முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடும் வகையில் இயங்குகின்றன. கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் மறைந்து வரும் நாட்களில், சோனி நிறுவனம் முயற்சி எடுத்து இவற்றை பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் கொண்டு வந்துள்ளது, நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.




சிறு துளிகள்
எந்த மொழியிலும் டைப் செய்திட இன்டர்நெட்டில் எந்த மொழியிலும் நீங்கள் விரும்பும் சொற்களை டைப் செய்திட கூகுள் தளம் உதவுகிறது. http://www.google.com /transliterate/indic/Tamil என்ற முகவரியில் உள்ள கூகுள் லேப்ஸ் என்ற தளம் செல்லவும். இங்கு சென்றால் கிடைக்கும் கட்டத்தில், நீங்கள் தமிழில் காண விரும்பும் சொல்லை, அதன் ஒலி உச்சரிப்பிற்கேற்ப ஆங்கிலத்தில் அமைக்கவும். எடுத்துக்காட்டாக Dinamalar  என்று டைப் செய்து ஸ்பேஸ் பாரைத் தட்டினால் "தினமலர்' என்று கிடைக்கும். இதில் தமிழுக்கு மட்டுமின்றி வேறு மொழிகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது மொழிகளிலும் இதே போல, ஒலியின் அடிப்படையில் சொற்களை அமைத்து ஸ்பேஸ் பாரைத் தட்டி, நாம் விரும்பும் மொழியில் பெறலாம்.



யு.எஸ்.பி. 3 பென் டிரைவ் வெளியானது
அமெரிக்காவில் பிளாஷ் மற்றும் டி.டி.ஆர். ஸ்டோரேஜ் சாதனங்களை அதிக அளவில் தயாரித்துவரும் சூப்பர் டேலன்ட் டெக்னாலஜி என்ற நிறுவனம், சூப்பர் யு.எஸ்.பி. 3 வகை டிரைவ் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதன் டேட்டா ட்ரான்ஸ்பர் வேகம்,யு.எஸ்.பி. 2 வகையைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக இருக்கும். இந்த டிரைவ் 32, 64 மற்றும் 128 ஜிபி கொள்ளளவுகளில் வெளியாகியுள்ளது. இவற்றை யு.எஸ்.பி. 2 வகை போர்ட்களிலும் பயன்படுத்தலாம். வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாடுகளிலும் இது விற்பனைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் முன் இன்னும் சில நிறுவனங்கள் யு.எஸ்.பி. 3 வகை மாடல்களைத் தயாரித்து வழங்கலாம்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு

செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு

 

 

Swine Flu 

பெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களைக் கெடுக்கும் செக்ஸ் வெப்சைட்களை காட்டிக் கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,000 பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இன்டர்நெட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இளைஞர்கள், மாணவ &மாணவிகள் சைபர் கபேக்களிலும், செல்போன்களிலும் அதிக நேரம் இன்டர்நெட் பார்க்கின்றனர். அவற்றில் பெரும்பாலோர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பதாக தெரிய வந்தது.எனவே, செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் இளைஞர்கள் மூலமாகவே அந்த சைட்களை தடை செய்ய திட்டமிட்டனர். வெப்சைட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.7,000 முதல் ரூ.68,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் 500 போன் அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்காவின் அந்தர் பல்டியும் கைவிடப்பட்ட ஈழத் தமிழர்களும்

 

தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! இலங்கை அரசின் உறவை நாம் இழக்க விரும்பவில்லை! இலங்கை அரசு ஒரு இறைமையுள்ளது! தற்போது அமெரிக்க அரசியல் வாதிகளின் வாயில் இருந்து வரும் சொற்கள் இதுவாகும். எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் மாற்றம் என அனைத்துத் தமிழர்களும் வியந்து நிற்கின்றனர். நாங்கள் மாறியிருந்தால் தானே, அப்பவும் எப்போதும் நாம் ஒரே மாதிரித் தானே இருந்தோம் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது அமெரிக்கா. 

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளை, தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தனர். பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் அகதிகளை மீட்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை மூன்றாவது நாடு ஒன்றிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின, இருப்பினும் பின்னர் இறுதி நேரம் அமெரிக்கா கையை விரித்தது. 

பின்னர் சட்டலைட்டில் படங்களைப் பிடித்து மனிதப் புதைகுழிகள், ஆட்டிலறித் தாக்குதல் நடைபெற்ற இடங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஏதோ மனித உரிமை காக்கப்படவேண்டும் எனக் கொக்கரித்தது அமெரிக்கா. அத்துடன் நிறுத்தாமல், சர்வதேச நாணய நிதியம் வழங்க இருந்த கடன்தொகையை நிறுத்துவதுபோல நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் ச.நா. நிதியம் கொடுக்க இருந்த தொகையைவிட மேலதிகமாகக் கொடுக்க உதவியது. 

அவ்வப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் மனிதப் பேரவலம், யுத்தக் குற்றம் போன்ற அறிக்கைகளை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அனுப்ப அதனை வாங்கி குப்பைத் தொட்டியில் இட்டது ஒபாமா அரசு. தற்போது முதற்பெண்மணி, மற்றும் அவரது முதல் நாய் என்பன அந்த அறிக்கை பேப்பரில் பந்துசெய்து விளையாடுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, முதலில் கிலாரி கிளின்ரனுக்கும், பின்னர் அவர் வெற்றியடையமாட்டார் எனத் தெரியவர ஓபாமாவிற்கும் தமிழர்கள் பெரும் தொகைப் பணத்தை வாரி இறைத்தனர். தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும் அதை அமெரிக்கா பெற்றுத் தரும் என நம்பி இருந்தனர்.

எவரையும் நம்பாமல், தம்மையே நம்பி சிறிய படைகளுடன் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இறுதியில் பெரும் படையுடன் இருந்தாலும் ஒரு வெளிநாட்டை நம்பி பல பின்னடைவுகளைச் சந்தித்தனர். அது வேறு எந்த நாடும் அல்ல சாட்ஷாத் அமெரிக்காவே தான். இத்தனை நடந்த பின்னரும் ஏதோ தமிழர்களுக்கு உதவுவதுபோல நடந்து பல தமிழ் ஆதரவாளர்களையும், புத்திஜீவிகளையும் நம்பவைத்து, அவர்களிடம் இருந்து தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்ற பின்னர், தற்போது தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.

தமிழர்களாகிய நாம் ஒன்றை புரிந்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் "ரோ" அமைப்பும் எதை விருப்புகிறதோ அதுவே நடக்கும். அதே போல ஓபாமா ஆட்சிக்கு வந்தாலும் அங்கு FBI மற்றும் CIA போன்ற உளவு நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அவையே இறுதி முடிவும் ஆகும், இதில் நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் நடக்காது எமது விடயம். இதுவே யதார்த்தமாகும். விடுதலைப் புலிகளின் வளர்ச்சிகண்டு உலகமே அச்சம் கொண்டிருக்கவேண்டும். அதுவும் அமெரிக்கா மிகுந்த கவலை அடைந்திருக்கவேண்டும் அதனால் தான் புலிகளை அழிக்க பல நீண்ட திட்டங்களை அமைத்துக் கொடுத்துள்ளது. ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அமெரிக்க கைப்பொம்மையான பான் கீ மூன் இன்று என்ன செய்கிறார்? ஏன் பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்த விவாதம் நடைபெறும் போது சீனா எதிர்த்தது. ரஷ்யா இலங்கைக்கு ஏன் ஆதரவு வழங்கியது? அப்போது ஏன் அமெரிக்கா அதில் தலையிடவில்லை? இவை எல்லாம் மறைக்கப்பட்ட விடயங்கள். பல உலக நாடுகள் தமிழன் காதில் பூ வைத்திருக்கின்றன ஆனால் அமெரிக்கா தற்போது வைத்துள்ளதுதான் பெரிய பூ. 

உலகத் தமிழர்கள் ஒன்றை நன்கு புரிந்து வைத்திருக்கவேண்டும். போராடாத இனம் வென்றதாகச் சரித்திரம் இல்லை. எமது போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் உலக நாடுகளை நாம் எதிரியாய்ப் பார்க்கவேண்டியது இல்லை, அவர்களை நம்பாமல் செயல்படுவதே நல்லது. பல உலக நாடுகளிடம் நாம் சென்று உதவுமாறு கோரிக்கை விடுப்பதை விட நாமே போராடி ஜெயிப்பதே நல்லது. எமது ஒற்றுமை எமது போராட்ட பங்களிப்பு என்பன புதுவேகத்துடன் ஆரம்பிக்கப்படவேண்டும். 33,000 மாவீரர்கள் இறந்ததும், அவர்கள் கனவுகளும், போராட்டங்களும் அமெரிக்காவுக்குப் புரியுமா? அவர்களையும் பயங்கரவாதிகளாக அல்லவா பார்க்கும் அமெரிக்கா, மாவீரரின் உன்னதம் தமிழனுக்குத் தானே தெரியும், இதில் நாம் ஏன் வேறு நாடுகளிடம் சென்று மடிப்பிச்சை கேட்கவேண்டும்?

உலக நாடுகளை எமது குறிக்கோளை அடைய ஒரு கருவியாகப் பாவிக்கலாமே ஒழிய அவர்களை நம்பி அதில் ஏறிப் பயணிக்க முடியாது என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும், இது இந்தியா தான் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்று அலையும் ஒரு சிறு கூட்டத்தினருக்கும் பொருத்தமாகும்


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஏய் தமிழினமே - புதிய பாடல்


ஏய் தமிழினமே - புதிய பாடல்


StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டரைத் தாக்கும் வைரஸ் வந்துவிட்டதா?

 
 

நாள்தோறும் ஏதேனும் வைரஸ் வந்து நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வைரஸ் பாதிக்காத கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும், எங்கே வைரஸ் வந்துவிட்டதோ என்ற பயத்தில் கம்ப்யூட்டரை இயக்குகின்றனர். அப்படியானால் எந்த சூழ்நிலையில் வைரஸ் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும்; அப்படி ஒரு வைரஸ் வந்துவிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம். நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறந்ததாகவும், அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதாகவும் இருந்தால், வைரஸ் பாதித்த பைல்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கையில் அல்லது வைரஸ் பாதித்த பைல்கள் உள்ள சிடி அல்லது பிளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரால் படிக்கப்படுகையில், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எச்சரிக்கைக் கட்டத்தைக் காட்டி இந்த பைலில் இந்த வைரஸ் இருந்தது. உடனே அது அழிக்கப்பட்டுவிட்டது; அல்லது வைரஸ் உள்ள பைல் இது, இதனை அழித்தால் பைலும் சேர்ந்து அழிந்துவிடும்; என்ன செய்யலாம் என்று கேட்டு ஒரு பாப் அப் மெசேஜ் கட்டம் கிடைக்கும்.



இதெல்லாம் முன்னரே கண்டறியப்பட்டு, வகை பிரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் வகையில் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு உருவாக்கப்பட்டிருந்தால் இந்த எச்சரிக்கை கிடைக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கண்டறிய முடியாத புதியதாக உருவாக்கப்பட்ட வைரஸ் வந்தால் அது ஜம்மென்று நம் கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, அதன் அழிவு அல்லது நாச வேலையைத் தொடங்கிவிடும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலும், வைரஸ்கள் கம்ப்யூட்டருக்குள் வருவது எளிதாகிவிடும். 
அப்படியானால் இது போல புதிய அல்லது ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் கண்காணிப்பிற்குத் தப்பித்து வரும் வைரஸ் அல்லது ஸ்பை புரோகிராம்களான வைரஸ்களை எப்படிக் கண்டறிவது? நம் கம்ப்யூட்டர் செயல்படும் விதத்திலிருந்துதான் கண்டறிய முடியும். அந்த செயல்பாடுகள் எப்படிப் பட்டவையாக இருக்கும் எனப் பார்ப்போம்.
திடீர் திடீர் என நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் மூடப்படுகிறதா? அல்லது திறக்கவே முடியவில்லையா? அப்ளிகேஷன் புரோகிராம்களின் இ.எக்ஸ்.இ. பைல்கள் ஒன்றுக்கு இரண்டாக பல டிரைவ்களில் இடம் பிடித்து எதுவும் திறக்க மறுக்கிறதா? சூப்பர் பாஸ்ட் வேகத்தில் செயல்பட்ட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், பாசஞ்சர் வேகத்தைக் காட்டிலும் மெதுவாக இயங்குகின்றனவா? இந்த செயல்பாடுகள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அனுமதியின்றி வந்து தங்கிவிட்ட மால்வேர் அல்லது வைரஸ்களை அடையாளம் காட்டுவன ஆகும்.
இதுவரை உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு ஒழுங்காக அச்சிட்டுக் கொடுத்த பிரிண்டர் என்ன கட்டளை கொடுத்தாலும் இயங்க மறுக்கிறதா? நிச்சயமாய் அது வைரஸ் வேலைதான்.
சில டிரைவ்களை நீங்கள் அணுக முடியாது. பைல்களைத் திறக்க முடியாது எனச் சிறிய கட்டங்களில் பாப் அப் மெசேஜ் கிடைக்கிறதா? ஏதோ வைரஸ் பிரச்னை என்றுதான் பொருள்.
ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த, சின்ன சின்ன அளவில் உருவாக்கி வைத்திருந்த பைல்களில் சில, பெரிய அளவிலான பைல்களாக உருவாகி, டிஸ்க் இடத்தை விழுங்கி நிற்கின்றனவா? நிச்சயமாய் இது வைரஸ் வேலைதான்.
திடீரென உங்கள் இமெயில் முகவரியிலிருந்தே உங்களுக்கு இமெயில் வருகிறதா? அதில் இணைப்பு பைல் ஒன்று திறக்கச் சொல்லி அன்புக் கட்டளை வருகிறதா? அதே நேரத்தில் உங்கள் நண்பர்கள் பலரிடம் இருந்து என்னப்பா ஒரு பைலை அனுப்பி உள்ளாய்; திறந்து பார்க்கலாமா? என்று உஷாரான நண்பர்கள் இமெயில் அனுப்பி உள்ளார்களா? இதுவும் ஒரு மால்வேர் புரோகிராம் வேலைதான். 
மேலே சொல்லப்பட்ட விளைவுகள் நிச்சயமாய் உங்கள் கம்ப்யூட்டரின் வேண்டாத விருந்தாளியை அடையாளம் காட்டும் செயல்களாகும். வைரஸ் அல்லது அது போன்ற புரோகிராம் ஒன்று உங்கள் கம்ப்யூட்டருக்குள், எப்படியோ அனைத்து பாதுகாப்பு வழிகளையும் மீறி வந்துவிட்டது என்று பொருள்.
அப்படியானால் என்ன செய்வது? பதட்டமடைய வேண்டாம். இதற்கு முன் பல முறை கம்ப்யூட்டர் மலரில் இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்திட வேண்டும் என எழுதி உள்ளோம். அந்த வழிகளைப் பின்பற்றவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழீழம் நோக்கி புதிய படை!

 

pulam_bernதமிழீழம் நோக்கி புதிய படை! மலர்ந்தது நோர்வே தமிழீழ மக்களவை!
தமிழீழ வரலாற்றின் நெடும் பயணத்தில், தமிழர்கள் சிங்கள இனவெறி ஆதிக்கவர்க்கத்தின் பிடியில் சிக்குண்டு சிதறி, ஓயாத அலைகளாய் மீண்டு எழுந்து தமிழர்களின் வரலாற்றையும் வீரத்தையும் மீட்டெடுத்தே வந்துள்ளனர்.

தமிழர்களின் வாழ்வோடு கலந்திருக்கும் வீரத்தின் சாட்சியாய் தமிழீழ மக்கள் ஓய்ந்ததும் இல்லை, தமிழர்களின் நிலம் வன்னியும் எந்த எதிரிக்கும் அடங்கியதும் இல்லை. ஓயாத நெருப்பு அலைகளாய் துடித்தெழும் ஆற்றல் தமிழ் குலத்திற்கே உரிய பண்பு. குறுகிய நிலமாய் சிதறுண்ட சோழர் நிலத்தை பெரும் வள நாடாக மாற்ற வேண்டும் என்ற பார்த்தீப சோழனின் கனவு, விக்கிரம சோழன், சுந்தர சோழன்இ கரிகால சோழன், அருள்மொழி வர்மன் (ராச ராச சோழன்), குலோத்துங்க சோழன் போன்றோரால் வலிமை பெற்று வெற்றியும் பெற்றது. காவிரி நிலத்தின் ஓரத்தில் கட்டுண்ட சோழர் நிலம், கடல் கடந்து கடாரம் வரை விரிந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீப சோழன் கண்ட கனவு எங்ஙனம் பலித்ததோ, அவ்வாறே பார்த்தீபன் என்கிற திலீபன் கண்ட கனவும் நிச்சயம் ஓர் நாள் பலிக்கும்.

உலகிற்கு ஆயுத பலத்தின் மூலம் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய புலிப் படையில், அறவழி போராட்டத்தை முன்னின்று நடத்தி காந்திய போராட்டத்தின் வலிமையை உணர்த்தினான் அண்ணன் திலீபன். தமிழீழ கனவு நிறைவேறும் வரை தனது ஆத்மாவும் ஓயாது என்று உரைத்தான். வன்னி மண் எவ்வாறு எதிரிகளுக்கு அடங்கியதில்லையோ, வன்னித் தலைவனின் பிள்ளைகளும் விடியல் வரை ஓயமாட்டார்கள். முப்பது ஆண்டுகளாய் தமிழர்க்காய் போரிட்ட தலைவனுக்கு முடி சூட்டும் காலம் வரை போராட்டத்தை முன்னெடுப்பார்கள். ஆம்! அதற்கான அடித்தளம்தான் நோர்வே தமிழீழ மக்களவை. முள்ளிவாய்க்கால் நிலத்தில், தமிழர்களின் இரத்தத்தை பல வல்லரசுகளின் துணையோடு குடிக்க காத்திருந்த சிங்கள இன வெறி இராணுவத்திற்கெதிரான சண்டையில் புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனித்தார்கள்.

எந்த ஆயுதம் தம் இனத்தை காக்கும் என்று நம்பினார்களோ (நம்புகிறார்களோ) அவ்வாயுதத்தை மௌனித்து உலகின் மன சாட்சியின் கதவைத் தட்டத்தொடங்கினார்கள். புலிகள் ஆயுதத்தை மௌனித்தாலும், உலகின் மௌனம் களைய புலிகளின் பிள்ளைகள் புதிய வகை அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிவிட்டார்கள். இலங்கைக்கு விடுதலை கிடைத்த 1948 ஆண்டு முதல் 1976 வரை பல்வேறு வழிகளில் உரிமைக்காக போராடி தோல்வியுற்ற நிலையில், வட்டுகோட்டையில் கூடிய தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, "தமிழீழமே" தீர்வு என முன் வைத்து 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட, தமிழர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றியும் பெற்றது. அதன் பிறகு நியாயமான முறையில் தேர்தல் நடக்காத நிலையில் தமிழர்கள் தங்களது அரசியல் மற்றும் வாழ்வுரிமை தொடர்பான எக்கருத்தையும் சனநாயக முறையில் வெளியிட முடியாமல் போனது.

காலம் சுழன்று, ஆயுத வழி போராட்டம், திலீபனின் அறவழி போராட்டம், பேச்சுவார்த்தைகள் என பலகட்டமாக நடந்த போராட்டத்தை உலகம் புரிந்துகொள்ளவே மறுத்துவந்தது. 2009 ஆண்டு சித்திரை நிறைவில் போர் உச்சக்கட்ட நிலையை அடைந்துக்கொண்டிருந்த நிலையிலும், தமிழர்களின் உடல்கள் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலும், நியாயத்தை உணர மறுத்துவந்த உலகத்திற்கு நோர்வே வாழ் தமிழர்கள், தங்களது எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் ஒன்றை நடத்தி அரசியல் போராட்டத்தின் களத்தை திறந்து வைத்தனர். வட்டுகோட்டை பிரகடனத்தை மீளுறுதிப் படுத்தும் தேர்தல் என்று பெயரிடப்பட்ட தேர்தலை நோர்வே நாட்டில் இயங்கும் யுத்ரூப் என்னும் பத்திரிக்கையின் மேற்பார்வையிலும், தேர்தல் நடைமுறைகள் நோர்வே நாட்டவர்களின் கண்காணிப்பிலும் நடத்தப்பட்டது.

நோர்வே வாழ் தமிழர்களில் 80ம சதவிகித மக்கள் கலந்து கொண்ட அத்தேர்தலில், 99 சதவிகித மக்கள் தமிழீழத்தை ஆதரித்து வாக்களித்தனர். எந்த நோர்வேயில் வருடாவருடம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறதோ, எந்த நோர்வே புலிகள் மற்றும் இலங்கை அரசின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவனாக செயல்பட்டதோ, அதே நோர்வேயில் தமிழர்கள் அரசியல் ரீதியிலான தங்களது விருப்பங்களைத் தெரிவித்தனர். சிங்களவருடன் சேர்ந்து வாழவே முடியாது என்கிற சூழலும்இ பூர்வீக நிலத்தில் உரிமையுடன் வாழ வேண்டும் என்ற ஆவலும் தமிழர்களை தனித் தமிழீழம் நோக்கி வேகமாக முன்னேற வைக்கிறது. 1977 ல் புதிய களமொன்றை திறந்து வைத்த வட்டுக்கோட்டை பிரகடனம்இ 2009 ல் நோர்வேயில் மீண்டும் ஒரு புதிய பரிணாமத்தை தொடங்கிவைத்திருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போராட்டம் நோர்வேயில் புத்துயிர் பெற்று வீறுகொண்டு எழத்தொடங்கி இருக்கிறது. வட்டுக்கோட்டை பிரகடனத்தை மீளுருதிப் படுத்திய நோர்வே வாழ் தமிழர்கள் இப்பொழுது நோர்வே தமிழீழ மக்களவை என்னும் அரசியல் அமைப்பைத் தொடங்கி சுயநிர்ணயஇ சுதந்திர தமிழீழக் கோரிக்கைக்காக குரல் கொடுக்க களம் புகுந்துள்ளனர். நோர்வே தமிழீழ மக்களவை உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை பற்றி இனி பார்ப்போம். நோர்வே மக்களவையின் உருவாக்கம் கீழ்கண்ட குறிக்கோளின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்க, நோர்வே வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்க மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிட.

இது போன்ற சனநாயக வழிப் போராட்டங்களை ஆதரித்த புலிகள் அமைப்பும், புலம் பெயர் நாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய போராட்டக் களங்களாக மூன்று வகை அரசியல் போராட்டத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையின் சுருக்கம் கீழே வருமாறு:"

ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் பேசும் மக்கள் ஓய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுத தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தை தொடர்ச்சியாக தலைமையேற்று நடத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்து தமிழ் பேசும் மக்களிடமும்இ குறிப்பாக புலம் பெயர் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக் கூறி நியாயமானதும் ஈழத்தமிழரின் நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்ப்பார்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன.

ஆகவே, இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையையும் கொண்ட தமிழீழத்திற்கான விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கு ஆணித்தரமாக சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் இன்றைய வரலாற்றுக் கடமையாகிறது."இவ்வாறு குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் அறிக்கையில், புலம் பெயர் தமிழர்கள் மூன்று வகையான அரசியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்று, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப் படுத்தி இவ்வுலகிற்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக் கூறுதல்இ இரண்டு சனநாயக வழியில் நாடு தழுவிய கட்டமைப்பை உருவாக்கி தமிழர்களின் ஓர் அரசியல் தளத்தில் வைத்திருத்தல் மூன்றாவது நாடு கடந்த தமிழீழ அரசை கட்டியமைத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் அது போராட்டத்தின் தன்மையை பாதிக்கும் எனவும் புலிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அவ்வகையில் நோர்வே வாழ் தமிழ் மக்கள் தங்களது அரசியல் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றே கூறலாம். நோர்வே தமிழீழ மக்களவைக்கான உருவாக்க செயல்பாடுகள் தொடங்கிய காலம் முதல் தேர்தல் நடைபெற்று பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்பட்டக் காலம் வரை நோர்வே தமிழர்கள் பலர் அல்லும் பகலுமாக உழைத்து தாயக விடுதலைக்கான வித்தை இட்டுள்ளனர் . நோர்வே மக்களவையையின் பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களைப் பார்ப்போம்.:

" 15.11.09 அன்று நோர்வேயில்இ தமிழீழ மக்களைவைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அமைதியான முறையிலும் மக்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தமிழீழ கோட்பாட்டை உறுதியாக கடைபிடிக்கும் தமிழின மக்களின் மனதை பிரதிபலித்தது. நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகளுடன் நடைபெற்ற தேர்தலில் 2767 தமிழீழ வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை வழங்கினர். வட்டுகோட்டை பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலில் கலந்துக் கொண்ட மக்களில் 50மூ சதவிகித மக்கள் இத்தேர்தலில் பங்குபெற்றனர். நோர்வே முழுவதும் ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுஇ தமிழ் மக்களின் தொகைக்கேற்ப மக்கள் பிரிதிநிதிகளின் எண்ணிக்கைப் பிரிக்கப்பட்டது.

கிழக்கு பிராந்தியத்திலிருந்து தேசிய அளவிலான செயல்பாட்டிற்கு ஆறு பிரதிநிதிகளும்இ ஏனைய பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என மொத்தம் பத்து பேர் தேர்வாகினர். அதுமட்டுமல்லாது, தேசிய பட்டியலுக்கு என நேரடியாக போட்டியிட்டி மொத்தம் ஐவர் நோர்வே தமிழீழ மக்களவைக்கான தேசிய பிரதிநிகளாகதேர்வாகினர். தேசிய அளவில் போட்டியிட்டவர்களில் நோர்வே நாட்டைச் சேர்ந்தவரான பியானார் மொக்ஸ்னஸ் (ஆச. டீதøயெச ஆழஒநௌ ) அதிக வாக்கு பெற்று தேர்வாகியுள்ளார்.

தேசிய அளவில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களுள் மொத்தம் ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோர்வே தமிழீழ மக்களவையானது தேசிய அளவில் தேந்தெடுக்கப்பட்ட பதினைந்து பிரிதிநிதிகளுடன் தமது பணிகளைத் தொடங்க இருக்கிறது. தமிழர்களின் புதிய சனநாயக வழிப் போராட்டத்தின் பின் அணிதிரண்டு தேசியத்தை கட்டியமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் .நோர்வே தமிழீழ மக்களவைக்காக பிராந்திய அளவில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேசிய பட்டியலுக்கு நுழைந்த பிரதிநிதிகள் விவரம் வருமாறு:

1) திரு சிவகணேஸ் வடிவேலு (கராட்டி சிவா)

2) திரு இராஜேந்திரம் பொன்னுத்துரை (NTHO ராஜன்)

3) திரு சிவராஜா வல்லிபுரம்

4) திரு கண்ணன் நாகேந்திரம்

5) திருமதி மேரி புளோறிடா யூடின் பிரான்சிஸ்

6) திரு இராசரத்தினம் வேலுப்பிள்ளை

7) திரு றெஜி டேவிட்ராஜூ (Ph.D)

8) திரு விஜய்சங்கர் அசோகன்

9) செல்வன் ரூபன் ஐயாத்துரை

10) திரு இராசகுமார் குமாரசாமி (பாபு)

தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில், ஒருவர் நோர்வே நாட்டை சேர்ந்தவர் (பியானார் மொக்ஸ்னஸ் – Mr. Bjønar Moxnes ) என்பதும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்(விஜய்சங்கர் அசோகன்) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளோடு நோர்வேயில்செயல்படும் தமிழ் நிறுவனங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து பிரதிநிதிகள், தெரிவவை உறுப்பினர்களாய் செயல்படுவார்கள்." இவ்வாறு தேர்தல் மூலம் நோர்வே தமிழீழ மக்களவை தனது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழர்களின் தாயக நிலத்தை மீண்டும் தமிழர்களே ஆட்சி செய்ய, தமிழர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் விளங்கும் இதுபோன்ற மக்கள் கட்டமைப்புகளை அனைத்து தமிழர்களும் ஆதரித்து, மாவீரகளின் கனவை பலித்திட வைக்க உறுதி ஏற்பான். "மாண்ட வீரர் காவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்"காலம் விரைவினில் வரும். வருடாவருடம் மாவீரர் நாள் நடக்கும் தருவாயில் பாடப் பெரும் பாடலான "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே" பாடல் இவ்வருடமும் ஒலிக்கும். தாயக கனவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவு அனைத்து தமிழர்களையும் வழிநடத்தி உன்னதமான நாட்டினை படைக்க துணை நிற்கும்.

ஒன்றை இழக்காமல் எதனையும் பெற முடியாது. தமிழர்களாய் அனைத்தையும் இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், பெறுவதற்கு நாடுண்டு. மாவீரர்களை நோக்கி பாடப் பெரும் பாடல் வரியான, " எந்த நிலை வரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்" என்பதை நோர்வே வாழ் தமிழர்கள் பறைசாற்றியுள்ளதாகவே படுகிறது. தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தங்களால் ஆனா முயற்சியினை மேற்கொண்டு, மாவீரர்களின் துணையோடு நிமிர்ந்து, புலிகளின் (தமிழர்களின்) தாகம் தமிழீழத் தாயகத்தை பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடம்பெறுவோம்.

"நம்புங்கள் தமிழீழம் நாளைப் பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்"

- தமிழ்செல்வன்


source:tamilspy


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழர் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றில் தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா

 

ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபாவில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ்.

 

நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். பாஜக, மதிமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக சாடின. 

குறிப்பாக பாஜக மூத்த உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். தனது பேச்சின்போது தமிழிலும் அவர் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது. 

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ஈழத் தமிழர் பிரச்சினை இந்தியாவின் தமிழ் மக்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒட்டுமொத்த நாட்டின் இதயத்துடன் நெருங்கிய விஷயம். 

இன்னொரு உயிருக்காக இரங்கக் கூடிய மனிதத் தன்மை ஒருவனிடம் இல்லாவிட்டால் அவனது ஆன்மா செத்துப் போய் விட்டது என்கிறார் பாரதியார். நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

உண்மையில் அவை முகாம்கள் அல்ல, மாறாக முள்வேலி சிறைச்சாலைகள் (இதைத் தமிழிலேயே சுஷ்மா சொன்னார்). 

இலங்கையில் பெரும் அவலத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இந்த அரசு செய்யப் போகும் நிவாரண நடவடிக்கைகள் என்ன என்பதை மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்ல வேண்டும் (இந்தக் கேள்வியை தமிழிலேயே கேட்டார் சுஷ்மா). 

சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றாரே. அது ஏன். இதை அவர் விளக்க வேண்டும். 

கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் போரின் போது இடம் பெயர்ந்து வந்தனர். அவர்களின் கதி என்ன, நிலை என்ன என்பதை இலங்கையிடம் கேட்டு இந்தியா விளக்க வேண்டும். 

தமிழர்கள் மிகப் பெரிய அவல நிலையில் உள்ளன என்று ஐ.நா. கூறுகிறது. இந்த நிலையில் இலங்கை முகாம்களின் நிலை குறித்து அறிய அங்கு போன இந்தியக் குழு ( தமிழகத்திலிருந்து போன திமுக தலைமையிலான ஆளுங்கட்சிக் கூட்டணிக் குழு) தாக்கல் செய்த அறிக்கை என்ன. அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது. 

நிதியுதவி அளிப்பதோடு இந்தியாவின் கடமை முடிந்து போய் விடவில்லை. ஆனால் இடம் பெயர்ந்த மக்கள் அங்கு எந்த நிலையில் வாழுகின்றனர் என்பதையும் இந்தியா கவனித்து வர வேண்டும். 

இலங்கைக்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய எம்.பிக்கள் குழுவை அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பிக்களை மட்டும், தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதால் என்ன புண்ணியம். ஏன் அப்படி ஒரு குழுவை அனுப்பினீர்கள். இந்தப் பிரச்சினை ஒட்டுமொத்த இந்தியா சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில் தேசிய அளவிலான குழுவைத்தானே அனுப்பியிருக்க வேண்டும். 

வெறும் தமிழர்களை மட்டும் அனுப்பி வைப்பதன் மூலம், மத்திய அரசு மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு இந்த அரசு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்புமா (இந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணவைப் பார்த்துக் கேட்டார் சுஷ்மா - அவர் அமைதியாக இருந்தார்) என்றார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட சுஷ்மா சுவராஜ். 

சுஷ்மா சுவராஜின் பேச்சைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர். 

மேலும் இல‌ங்​‌கை​யி‌ல் ஒரு அ‌ப்​பாவி நப‌ரை ‌பொலி​ஸா‌ர் அடி‌த்து உ‌தை‌த்து கட​லி‌ல் மூ‌ழ்​க​டி‌த்​தது ‌தொட‌ர்​பாக ஸ்வராஜ் குறி‌ப்​பி‌ட்டு ‌பேசி​னார்.

இதையடுத்து பாஜக-கா‌ங்​கி​ர‌ஸ் உறு‌ப்​னர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



source:tamilwin

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP