சமீபத்திய பதிவுகள்

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர் - Messiah the PeaceMaker

>> Sunday, January 4, 2009

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர் - Messiah the PeaceMaker

 

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர்

Messiah the PeaceMaker

 

ரோலண்ட் கிளார்க் (Roland Clarke)

 
 
"பூமியிலே சமாதானமும் மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாவதாக"(லூக்கா 2:14). இந்த வார்த்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு மேசியாவின்(மஸீஹாவின்) பிறப்புப் பற்றி தேவ தூதர்கள் சொன்ன வார்த்தைகளாகும். நாம் இன்று உலகத்தின் நிகழ்வுகளைக் காணும் போது, இவ்வுலகத்தின் மிகப்பெரிய தேவை "சமாதானம் - Peace" என்பதை நாம் அறியலாம், இது மனதிற்கு வலியை உண்டாக்குகிறது.

 
 
நம்முடைய இந்த உலகம் எயிட்ஸ் போன்ற குணமாக்க முடியாத வியாதிகளால் வருத்தத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. உலகத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மதத்தை அடிப்படையாகக் கொண்டு இறைவனின் பெயரில் சில அடிப்படைவாதிகள் மற்றவர்களை கொல்வதை மிகவும் கவுரவமான செயல் என்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆம், நமக்கு அமைதியும் சமாதானமும் தேவை.

 
 
2008ம் ஆண்டு, மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஜெயந்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஐக்கிய நாடுகளின் சபை "சமாதான கலாச்சாரம் பற்றிய மேல்பட்ட கூடுகை(High-Level Meeting on the Culture of Peace)" என்ற ஒரு கூட்டத்தை கூட்டியது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பன்கிமோன், ஒரு அவசர கோரிக்கையை முன்வைத்தார், "மதங்களின் இடையில் உரையாடலும், கலாச்சார நாகரீகங்களின் இடையில் உரையாடலும் என்றும் இல்லாத அளவிற்கு இவைகளின் தேவை இப்போது அதிகமாக உள்ளது" என்றார். இந்த மேல்மட்ட கூட்டத்தை "உரையாடல் மகாநாடு(Dialog Conference)" என்றும் அழைத்தனர்.

 
 
ஐ.நா சபையின் அதிகார சாஸனத்தில் "அமைதியை நிலை நாட்டவேண்டும்" என்பது மூலைக்கல்லாக இருக்கிறது. பைபிளின் ஒரு வசனப்பகுதி ஐ.நா சபையின் அதிகார சாஸனத்தில் இடம் பெற்று இருக்கிறது என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா? "அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்;" - இவ்வாசகம் மேசியாவின் சமாதானம் நிறைந்த‌ அமைதியான ஆட்சியில் நடக்கும் ஒரு தீர்க்கதரிசனமாகும்.

 
 
மதங்களின் இடையே நடக்கவிருக்கும் உரையாடலில், எல்லா நம்பிக்கையாளர்களும் மேசியாவாக‌ நம்பும், சமாதானத்தை உருவாக்கும் தன்னிகரில்லா நாயகனான‌ இயேசுக் கிறிஸ்துவை கருத்தில் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

 
 
இயேசு சமாதானம் தருபவர் என்று நம்புகிறவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்ல. இஸ்லாமியர்களும் இயேசுக் கிறிஸ்து மறுபடியும் கடைசிக் காலங்களில் வருவார் என்றும் மற்றும் அவர் தீமையை வென்று, உலகமனைத்திற்கும் சமாதானத்தை தருவார் என்றும் நம்புகிறார்கள். ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் ஒரு இஸ்லாமிய சஞ்ஜிகையில் "நிச்சயமாக அல் மஸீஹா(இயேசு) ஜிஹாதை அழிப்பார்;" என்று குறிப்பிடுகிறார். அல்லாவின் ரசூல் சொன்னதாக, சய்யதினா சலாமா பின் நுஃபைல் கூறும் போது, "ஜிஹாத் (பற்றிய கட்டளை), ஈஸா இபின் மர்யம் இறங்கி வரும் வரை நிறுத்தப்படாது("Sayyidina Salamah bin Nufayl has said that the messenger of Allah said, 'The (command of) Jihad will not be abolished until the descent of Isa Ibn Maryam.')" என்கிறார் (Seerat al-Mughlata', Musnad Ahmad).2

 
 
நாம் மேலே குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்களுக்கும், மேசியாவைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை நாம் காணலாம். அதாவது, சமாதான பிரபுவாகிய மேசியா "ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை…. அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்;" "will settle international disputes. They will hammer swords into ploughshares... Nation will no longer fight against nation nor train for war anymore.... Your king will bring peace to the nations." (ஏசாயா 2:4, சகரியா 9:10).

 
 
மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இதர ஹதீஸ்கள் கூடச் சொல்கின்றன, 1) ஓணாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக வாழும், 2) மேசியாவின் ஆட்சி காலத்தில் உலகளாவிய‌ அமைதி/சமாதானம் நிலவும் போன்றவைகளைச் சொல்லலாம்.[3]

 
 
அனேக இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இப்போது உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் நிகழ்வுகளைக் கண்டு, இக்காலம் கடைசிக் காலம் என்றுச் சொல்கிறார்கள். ஆகையால், இந்த நேரத்தில் இயேசுக் கிறிஸ்துவின் அமைதி மற்றும் சமாதானம் தரும் செயல்களைப் பற்றி சிறிது சிந்திப்பது, இந்த தடுமாறும் உலகில் நன்மை பயக்கும். அதே நேரத்தில் கிறிஸ்துவின் முதல் வருகையின் போது, பூமியில் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த அவரது அனேக செயல்கள், அவர் ஒரு அமைதி மன்னன் என்பதை காட்டுகின்றன.
 
 

மஸீஹாவின் முதல் வருகை

 
Messiah's first coming
 
 
இயேசு பிறப்பதற்கு முன்பாக அவரைப் பற்றி "நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்துவார்(லூக்கா 1:79)" என்று கூறப்பட்டது. இயேசுவின் போத‌க‌த்திலும் "ச‌மாதான‌ம் த‌ருவ‌து" மிக‌வும் முக்கிய‌ அம்ச‌மாக‌ இருந்த‌து, "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்"(ம‌த்தேயு 5:9).

 
 
ஒரு பெண்ணின் தீவிர வியாதியை இயேசு குணமாக்கிவிட்டு, அவளுக்கு சமாதானத்தைக் கூறி அனுப்புகிறார். இயேசு அவளைப் பார்த்து: "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 8:48). இயேசு "சமாதானத்தோடே போ" என்ற வார்த்தைகளைச் சொன்ன இன்னொரு சூழ்நிலையும் உள்ளது. இந்த இடத்தில் அந்தப் பெண் ஒரு தீய செயல்கள் செய்பவளாக இருந்தாள். அந்த பெண்ணின் பாவங்களை மன்னித்துவிட்டு, இயேசு அவளைப்பார்த்து "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 7:50).

 
 
இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் கடைசியிலும் ஒரு சந்தோஷமான வார்த்தைகளைக் கொண்டு இயேசு முடிக்கிறார். இயேசு தன் உலக வாழ்க்கையின் கடைசி காலத்தில் இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக இரண்டு சமாதானம் கூறுகிறார். லூக்கா 19ம் அதிகாரத்தில் இயேசுவை பின்பற்றினவர்கள் உரத்த சத்தமாக இவ்வாறு கூறினார்கள்: "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக".

 
 
மக்களின் இந்த வார்த்தைகளால் யூத தலைவர்கள் இடரல் அடைந்தார்கள், மற்றும் இப்படி மக்கள் சொல்வதை நிறுத்தும்படி இயேசுவிடம் முறையிட்டார்கள். ஆனால், இயேசு மறுத்துவிட்டார். பிறகு இயேசு இவ்விதமாக கூறினார்: "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்"(லூக்கா 19:38-44).

 
 
பைபிளுக்கு உரை எழுதியவகளின் கூற்றுப்படி, "கி.பி. 70ல் நடந்த ஜெருசலேமின் அழிவு, மேசியா அவர்களை சந்திக்க‌, தங்களிடம் வந்த போது, அவரை அங்கீகரிக்காமல், அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் விட்டதின் தேவ நியாயத்தீர்ப்புத் தான் அந்த அழிவு" என்றனர்(ஜான் மெக்கார்தர்). இஸ்லாமியர்கள் இயேசு தான் மேசியா(மஸீஹா) என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், இஸ்லாம் கூட இயேசு மேசியா என்பதை அங்கீகரிக்கிறது("அல்-மஸீஹ்" என்ற பெயர் குர்‍ஆனில் 11 முறை வருகிறது).

 
 
கிறிஸ்துவின் தீர்க்கதரிசனம் தான் தேவனின் நியாயத்தீர்ப்பாக யூதர்கள் மீது வந்தது என்றாலும், இதற்காக, யூதர்கள் மீது கசப்பு வெறுப்புணர்ச்சிக் கொள்ள யாருக்கும் அனுமதியில்லை. இதே போல, கிறிஸ்துவை அங்கீகரிக்காத அவர்களின் நிலை ஒரு மிகப்பெரிய குற்றமாக கருதிக்கொண்டு, யூதர்களின் நாட்டை உலக வரைப்படத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என்றுச் சொல்வதும் சரியானதல்ல(இப்படி இஸ்ரவேல் நாட்டை வரைப்படத்திலிருந்தே நீக்கிவிடவேண்டும் என்று சில இஸ்லாமியர்கள் எண்ணுகின்றார்கள்). இஸ்ரவேலில் மீதியாக இருந்தவர்களை தேவன் ஒரு நாள் ஒன்று கூட்டுவார் என்று வேதம் சொல்கிறது. இதோடு நின்றுவிடாமல், அவர்களை சீர்படுத்த, தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பின் விளைவுகளை அவர்கள் தாங்கிக்கொண்டு இன்றளவும் உலகத்தில் இருக்கிறார்கள், மற்றும் இவர்களே தேவனால் இரட்சிக்கப்பட்டு, உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் ஆசீர்வாதமாக மாறுவார்கள். வேதம் சொல்கிறது, "தேவன் அவர்களுக்கு காணாதிருக்கிற கண்களை கொடுத்தார் ..." பல இஸ்ரவேல் மக்கள் இன்னும் கடின இருதயமுள்ளவர்களாக இருக்கிறார்கள், இந்த நிலை எதுவரைக்கு நீடிக்குமென்றால், இஸ்ரவேலர் அல்லாத அந்நிய ஜனங்கள் அனைவரும் கிறிஸ்துவிடம் வரும் வரையிலும் இப்படி இருக்கும்.(ரோமர் 11:8,15,25, சகரியா 12:10, யோவேல் 2:28-32).

 
 
உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து தேவன் தன் மக்களை கூட்டிச் சேர்ப்பார். அவர் கீழ் கண்டவாறு வாக்கு கொடுத்துள்ளார், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்...மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 54:8-10).

 
 
இந்த "சமாதானத்தின் உடன்படிக்கை" என்றால் என்ன? பழங்காலத்தில், உடன்படிக்கைகள் ஒரு பலியை செலுத்தி உறுதிப்படுத்துவார்கள். மேலே நாம் கண்ட வாக்குத்தத்தம் சொல்லப்பட்ட வசனத்தின் முந்தைய பாகத்தில் ஏசாயா 53ம் அதிகாரத்தில், "மேசியா எப்படி பாவத்தை போக்கும் பலியாக உள்ளார்" என்பதை விளக்குகிறது: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது"(ஏசாயா 53:5).

 
 
"சமாதானத்தின் நகரம்" என்று பொருள்படும் ஜெருசலேமில், மேசியாவாகிய இயேசு தன் சிறப்பான சமாதான ஊழியத்தை நிறைவேற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இயேசு கிறிஸ்து ஜெருசலேம் என்ற நகரத்தில் கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று அவரே முன்னறிவித்தார். இந்த ஜெருசலேம் என்ற பட்டண‌த்தில் தான், மனுஷ குமாரன் பற்றி முன்னறிவித்த அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் இடம் என்று இயேசு குறிப்பிட்டார்(லூக்கா 18:31-33). இன்னும் வேதம் சொல்கிறது, "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று"(கொலோ 1:20).

 
 
இயேசுவின் சீடர்களில் ஒருவரான பேதுரு "ஒப்புரவாக்குதலும் மற்றும் சமாதானமும் கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நிறைவேறும்" என்று உறுதிப்படுத்துகிறார். அவர் கூறும் போது:"எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. … யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். …. அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்." (அப்போஸ்தலர் 10:35-43, ஜெருசலேம் என்பது மிகவும் முக்கியமான இடமாகும், இங்கு தான் மனிதன் தேவனோடு சமாதானமானான்).
 
 
ச‌மாதான‌ம் த‌ருவ‌த‌ற்கும், பாவ‌த்திற்கும், ம‌ன்னிப்பிற்கும் இடையேயுள்ள‌ ஒற்றுமையை ஆராய்த‌ல்

Exploring the connection between peacemaking, sin and forgiveness
 
 
இதற்கு முன்பு நாம் கண்ட நிகழ்ச்சியை நீங்கள் நியாபகத்திற்கு கொண்டு வரமுடியுமா? அதாவது பாவ வாழ்க்கையில் இருந்த‌ ஒரு பெண்ணை இயேசு மன்னித்து அனுப்பிய நிகழ்ச்சியை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்பெண் செய்துக்கொண்டு இருந்த அவ்வளவு பெரிய பாவத்தை எப்படி இயேசுவினால் மன்னிக்க முடிந்தது? "இயேசுவின் பெயர் மூலமாக பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று பேதுரு சொல்வது மிகவும் முக்கியமானது. இயேசுவின் தாய் மரியாள், தேவன் தெரிந்தெடுத்த பெயரையே தன் அற்புத குழந்தைக்கு இட்டதாக, குர்‍ஆனும் பைபிளும் நமக்கு போதிக்கின்றன. வேதம் இப்படிச் சொல்கிறது, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."(மத்தேயு 1:21).

 
 
முஹம்மத் ஐ. எ. உஸ்மான், என்ற மதிப்பிற்குரிய மஃப்டி (இஸ்லாமிய சட்ட நிபுனர்) அவரது "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில் "இயேசு" என்ற பெயருக்கு, "இறைவனே இரட்சிப்பு" என்ற பொருள் என்றுக் கூறுகிறார். இந்த பொருள் மற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுகளோடு ஒத்துப்போகிறது.

இப்போது நீங்களே முடிவு எடுங்கள்,

"இயேசு தான் மேசியா என்பதையும், சமாதான பிரபு என்றும் நான் நம்புகிறேனா? இயேசு தேவனின் இரட்சிப்பை கொண்டுவந்தார் என்பதையும், அவர் ஒருவர் மூலமாகத் தான் என் பாவங்கள் மன்னிக்கபபடுகிறது என்றும் நான் நம்புகிறேனா?"
Do I believe that Jesus is the Messiah, the Prince of Peace? Am I willing to accept that Jesus brought God's salvation and that he alone is able to forgive my sins?

 
மேசியாவின் "சமாதானம் உருவாக்கும் வேலையைப்" பற்றி கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது. முதல் கட்டுரை மிகவும் சிறியது, தமிழில் படிக்கவும், "சொர்க்கத்தின் வழிகாட்டி - Signposts to Paradise" மற்றும் இரண்டாவது கட்டுரை படிக்கவும் "Converging Destinies: Jerusalem, Peace and the Messiah".

 
இன்னும் அதிக விவரங்களுக்கு என்னோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.

பின்குறிப்புக்கள்
1 Quoted by Mufti Mohammad Shafi in 'Signs of Qiyamah and the Arrival of the Maseeh', p. 109
2 Ibid. pp. 38,78, quoting Abu Dawood and Ibn Majah, Hadith #13

Source: http://www.answering-islam.org/authors/clarke/peace_on_earth.html


ரோலண்ட் கிளார்க் அவர்களின் கட்டுரைக‌ள்
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
 

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?

 

 

முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்பாது எழுப்பப்படும் மிகப் பெரும் கள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான பாரில் படையினர் தொடர்ந்தும் பரிழப்புகளை ந்தித்து வந்த போது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்திவந்த போது, முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெ டுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர்.

இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கிளிநொச்சிக்கான போர் உண்மையிலேயே படையினரின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இருந்தது. பூநகரி நாக்கிய முன்நகர்வு போலவே கிளிநொச்சிக்கான பாருமிருக்குமெனப் படைத்தரப்பு கருதியிருந்தது. ஆனால் நிலைமை தலைகீழாக இருந்ததை கிளிநொச்சிக்கான சமரின் போது படையினர் நன்குணர்த்திருந்தனர். "ஏ9′ வீதியை முழுமையாகக் கைப்பற்றினால் மட்டுமே பூநகரியை கைப்பற்றியதற்கான பலன் கிடைக்குமென்பதை படையினர் பூநகரிக்கு வந்த பின்னர உணர்ந்தனர்.

 

பூநகரியை படையினர் கைப்பற்றி மூன்று மாதங்களுக்கு மலாகி விட்ட நிலையிலும் சங்குப்பிட்டி கோரதீவு ஊடான கடல் பாதையை படையினரால் இன்று வரை திறக்க முடியவில்லை. பரந்தனுக்கு வடக்க ஆனையிறவு முதல் கிளாலி வரையான பகுதிகள் புலிகள் வம் இருக்கும் வரை பூநகரி ஊடாக சங்குப்பிட்டி கோரதீவு கடல் பாதையை திறக்க முடியாதென்பதை படையினர் உணர்ந்தனர். இதனால்தான் பூநகரிக்கான மரை விட பரந்தன் மற்றும் கிளிநொச்சிக்கான மரில் புலிகள் மிகுந்த அக்கறை காட்டினர். ஆனால் பூநகரியை கைப்பற்றியும் அதனால் பிரயானம் எதுவும ஏற்படாத போதும் பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம படையினரால் பரந்தனுக்கு வர முடிந்தது.

 

பூநகரி பரந்தன் வீதியூடாக முன்நகர்ந்த படையினர் பரந்தன் ந்தியை வந்தடைந்ததாலேயே படையினரால் இன்று கிளிநொச்சியைக் கைப்பற்ற முடிந்தது. இதனால்தான் கிளிநொச்சிக்கான போரில் படையினர் பரிழப்புகளைச் சந்தித்த போது பரந்தனைக் கைப்பற்றும் முயற்சியை படைத்தரப்பு தீவிரப்படுத்தியிருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக நேரடிச் சமரில் ஈடுபடுவது பேரிழப்புகளை ஏற்படுத்தி வந்ததால் கிளிநொச்சி முற்றுகையை சற்று தளர்த்திய படைத்தரப்பு பூநகரி பரந்தன் வீதியூடான முன்நகர்வு முயற்சியை தீவிரப்படுத்தியிருந்தது. கிளிநொச்சிக்கான முற்றுகைப் பாரில் படையினர் கிளிநொச்சியின் தென்பகுதியிலிருந்தும் கிளிநொச்சியின் மற்குப் புறத்திலிருந்தும் கடும் தாக்குதலைத் தொடுத்து வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றுவது படையினருக்கு பெரும் கௌரவப் பிரச்சினை யாகவும் அதேநேரம் கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டால் அது புலிகளுக்கெதிரான பிராரப் பாரை முன்னெடுக்க மிகவும் உதவுமெனவும் அரசு கருதியது.

 

ஆனால் கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை புலிகள் மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தனர்.சில நகரங்கள் விடுதலைப் போராட்டத்தினைத் தீர்மானிப்பதில்லையென்றாலும��� கிளிநொச்சியை இழப்பதென்பது புலிகளுக்கும் கௌரவப் பிரச்சினையாக இருந்ததுடன், வன்னிப்போர் இரு பிரதான நகரங்களை மையமாக வைத்த மேற்கொள்ளப்பட்டு வந்ததால் கிளிநொச்சி நகரின் வீழ்ச்சியுடன் போர் முனையும் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து விடுமென்பதால் கிளிநொச்சியை இழப்பதென்பது முல்லைத்தீவுக்கான போர் முனையை திறப்பதாயிருக்குமென்பதையும��� புலிகளும் நன்குணர்ந்திருந்தனர். இதனால் தான் கிளிநொச்சியின் வீழ்ச்சியுடன், இதுவரை "ஏ9′ வீதியின் மற்குப் புறம் நடைபெற்ற யுத்தம் இனி "ஏ9′ வீதியின் கிழக்குப் புறத்திற்கு மாற்றம் பெற்றுள்ளது. கிளிநொச்சிக்கான பாரில் எதிர்பாரா தளவிற்கு படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தனர் பல நூற்றுக்கணக்கான படையினர் குறிப்பிட்ட சில நாட்களில் கொல்லப்பட்டனர். மிகப்பெருந்தொகையான படையினர் படுகாயமடைய ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட நாட்களில் களமுனைகளிலிருந்த அப்புறப்படுத்தப்பட்டனர்.

 

இது படையினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கிளிநொச்சி மற்றும் பரந்தனை நோக்கி மேலும் மேலும் முன்னேற முற்பட்டபோது இழப்புகள் கூடினவே தவிர முன்னற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து புலிகளின் கவனத்தை பெருமளவில் திசை திருப்ப வேண்டிய அவர தவை படையினருக்கு ஏற்பட்டது. வன்னிப் போரில் ஆரம்பம் முதலே மணலாறு களமுனை மிகவும் மந்தமாகவயிருந்தது. "ஏ9′ வீதியின் மற்குப் புறத்திலய படையினரின் முழுக் கவனமும் இருந்ததால் முல்லைத்தீவு முனையில் புலிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படவில்லை.

 

ஆனால் கிளிநொச்சிப் போரில் படையினருக்கு பெரும் நெருக்கடி ஏற்படவ முல்லைத்தீவு நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தி புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க படைத் தரப்பு தீர்மானித்தது. இந்த நிலையில், கிளிநொச்சியைவிட புலிகளுக்கு முல்லைத்தீவு முனையில் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த வண்டிய அவர மற்றும் அவசிய தேவையுமிருந்தது. அளம்பில் பகுதியினூடாக படையினர் முள்ளியவளையை அடைந்ததுடன் மாங்குளம் முல்லைத்தீவு வீதியை முழுமையாகக் கைப்பற்றும் தீவிர முயற்சியிலும் படையினர் இறங்கினர். அதேZநேரம் முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்றிலிருந்து முல்லைத்தீவு நாக்கிய பாரிய நகர்வுகளை மேற் கொண்ட போது புலிகள் கடும் பதிலடி கொடுக்கவே படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன.

 

இதையடுத்து முல்லைத்தீவு நோக்கிய நகர்வைவிட முள்ளியவளையிலிருந்து நேர வடக்காக முன்நகர்ந்து அடர்ந்த காடுகளினூடாக புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வுக்கு படையினர் முற்பட்டனர். புதுக்குடியிருப்புக்குச் சென்ற பின்னர் கிழக்கே திரும்பி கரையோரத்தை நோக்கி நகர்ந்தால் முல்லைத்தீவை மோதல் எதுவுமின்றி கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

 

அதநரம் புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தும் போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து தங்கள் கவனத்தை முல்லைத்தீவு நோக்கி திசை திருப்புவரெனவும் படைத்தரப்பு கருதியது. இந்த நிலையிலய கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளிலிருந்து விலக புலிகள் தீர்மானித்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இதனால்தான், படையினர் பரிழப்புகளை ந்தித்து வந்த கிளிநொச்சி மற்றும் பரந்தன் களமுனைகளை கைவிட்டு புலிகள் "ஏ9′ வீதிக்கு கிழக்க தங்கள் முழுக் கவனத்தையும் திரை திரும்பியிருக்கலாமெனக் கருதப்படுகிறது.

 

புலிகளின் இந்தப் பின் நகர்வு படையினருக்குபெரும் வாய்ப்பாகிவிட்டது. கிளிநொச்சிக்கான போரில் தொடர்ந்தும் படையினர் பலத்த இழப்புகளைச் ந்தித்து வந்த போது வன்னிச் சமர் குறித்து தெற்கில் பல்வறு கேள்விகள் எழுந்தன. கிளிநொச்சி சமர், இதுவரை வன்னியில் நடைபெற்ற சமர்களை விட படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகள் அண்மையில் ஆயுதக் கப்பல்களில் பெருமளவு பார்த் தளபாடங்களை தரையிறக்கியிருந்தனர். படையினரும் அதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். கிளிநொச்சி மற்றும் பரந்தன் சமர்க் களத்திலும் புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மாட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழிந்து படையினருக்கு பரிழப்புகளை ஏற்படுத்திய போது, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் முல்லைத்தீவு கடற்பரப்புக்கு வந்ததை படையினர் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது.

 

கிளிநொச்சி பரந்தன் களமுனை இப்படி யிருக்கையில் புலிகள் ஏன் அங்கிருந்து விலகத் தீர்மானித்தார்கள் என்ற கள்வி ஆய்வாளர்களைக் குடைகிறது. இவ்விரு முனைகளிலிருந்தும் புலிகள் விலகத்தீர்மானித்த போது, படையினர் பரந்தனை அல்லது கிளிநொச்சியை பிடித்துவிடும் நிலையிலிருக்கவில்லை. கிளிநொச்சிக்கு தெற்கே சுமார் ஏழு கிலா மீற்றர் தூரத்தில் "ஏ9′ வீதியில் இரணைமடுவுக்கு அப்பாலும் கிளிநொச்சிக்கு மேற்கே சுமார் ஆறு கிலாமீற்றர் தூரத்தில் அடம்பன் பகுதியிலும் பரந்தனுக்கு மேற்கே, பூநகரிபரந்தன் வீதியில் சுமார் ஆறு கிலாமீற்றர் தூரத்திலும் படையினர் நிலைகொண்டிருந்தனர்.

 

பூநகரி பரந்தன் வீதிக்கு வடக்கே குடாக் கடலாரோத்திலிருந்து இரணைமடுவரை பாரிய மண் அணை எழுப்பி படையினரின் முன்நகர்வு முயற்சிகளுக்கு மிகக் கடும் பதிலடி கொடுத்தவாறு படையினரை அந்தந்த இடங்களிலிருந்து சிறிது தூரம் கூட முன்நகர அனுமதிக்காது தடுத்து வந்த நிலையிலேயே, கடந்த செவ்வாய்க்கிழமை (30 ஆம் திகதி) பரந்தன், கிளிநொச்சி களமுனைகளிலிருந்து விலகுவதென புலிகள் திடீர் முடிவெடுத்திருந்தனர்.

 

30 ஆம் திகதி அதிகாலை இந்த முனைக ளில் படையினர் வழமை போல் கடும் தாக்குதலைத் தொடுத்த போது புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவில்லை. அவர்களது பதில் தாக்குதல்களில் உக்கிர மில்லை. பலவீனமாகவயிருந்தது. இதை யடுத்து படையினர் கடும் தாக்குதலை நடத்தியவாறு அனைத்து முனைகளிலும் முன்னறத் தொடங்கினர். புலிகளின் பதில் தாக்குதலில் வலு இல்லாததால் பூநகரி பரந்தன் வீதியூடாக பரந்தன் சதியை சென்றடையத் தீர்மானித்தனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வில் மிகக் கவனமாயிருந்தனர். புலிகளின் இந்தப் பின்நகர்வு படையினருக்கு ஆச்சரியமாயிருந்தது.

 

அதேநேரம் மிகவும் முன்னெச்ரிக்கையுடன் நகர்ந்தனர். புலிகள் எங்காவது தங்களைப் பொறிகளுக்குள் சிக்க வைத்து விடுவார்களா என்ற பெரும் சந்தேதகமிருந்ததால் முதலில் பரந்தன் சந்தியை கைப்பற்றத் தீர்மானித்தனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வின் போது புலிகள் தந்திரமான நடவடிக்கை மூலம் தங்களைச் சிக்க வைத்து விடலாமென்பதால், "ஏ9′ வீதியில் பரந்தன் சந்தியை சென்றடைந்துவிட்டால் பின்னர் புலிகளின் தந்திரங்களை முறியடித்தவாறு பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி முன்நகரலாமென படையினர் திட்டமிட்டனர். கிளிநொச்சியைவிட பரந்தன மிக முக்கிய மாயிருந்தது, பரந்தன் சந்தியை கைப்பற்றுவதன் மூலம் நான்கு முக்கிய பகுதிகளுக்கான விநியோக மார்க்கங்களையும் கைப்பற்ற முடியும் அல்லது தடுக்க முடியுமென்பதையும் அறிந்திருந்தனர்.

 

பரந்தன் சந்திக்கு தெற்கே "ஏ9′ வீதியில் கிளிநொச்சியும், பரந்தன் சந்திக்கு கிழக்க "ஏ35′ வீதியில் (பரந்தன் முல்லைத்தீவு வீதி) முரமாட்டையும் பரந்தன் ந்திக்கு வடக்க "ஏ9′ வீதியில் ஆனையிறவும், பரந்தன் சந்திக்கு மேற்கே "பி 69′ வீதியில் (பூநகரி பரந்தன் வீதி) பூநகரியும் உள்ளன. பரந்தன் ந்தியை கைப்பற்ற முன்னர் இந்தச் சந்தியூடாகவே நான்கு திசை யிலுமான விநியாகங்களையும் பாக்குவரத்தையும் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இந்தச் ந்தியை படையினர் கைப்பற்றியதன் மூலம் இதனூடாக புலிகள் ஆனையிறவு முதல் முகமாலை வரை மேற்கொண்டு வந்த விநியாகங்கள் தடைப்பட்டு விட்டன. முகமாலை, மற்றும் கிளாலிக்கான விநியாகங்களை புலிகள் இனி முல்லைத்தீவு கரையோரத்தால், வடமராட்சி கிழக்கின் சம்பியன் பற்று ஊடாகவ மேற்கொள்ள முடியும்.

 

அதுவும், படையினர் பரந்தன் ந்தியிலிருந்து ஆனையிறவு நோக்கியும் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளிலிருந்து பளையை நாக்கி யும் முன்நகர்ந்தாலும் பாரிய நெருக்கடி களுக்குக்குள்ளாகிவிடுமென்ற படையினர் கருதுகின்றனர். பரந்தனையும் கிளி நொச்சியையும் கைப்பற்றிய படையினர் அடுத்து எந்த முனையில் நகர முற்படுவரென்ற கேள்வி எழுகிறது. பரந்தன்முல்லைத்தீவு வீதியூடாக (ஏ35) முரமாட்டை நோக்கி முன்னேற முயல்வார்களா அல்லது "ஏ9′ வீதியூடாக ஆனையிறவு நோக்கி முன்னற முயல்வார்களா என்ற கேள்வி எழுகிறது.

 

முல்லைத்தீவு புலிகளின் இறுதிக் காட்டை என்பதால் முல்லைத்தீவில் புலிகளைச் சந்திக்க முன்னர் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிவிடவே படையினர் முயல்வர். இதனால் படையினர் முல்லைத்தீவு நோக்கி நகர்வது போல் காண்பித்தவாறு, பரந்தன் முதல் முகமாலை வரையான மிகுதி "ஏ9′ வீதியையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவர். படையினருக்கு பெருமளவு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள பெருமளவு படையினரை வன்னிக்குள் களமிறக்க வேண்டிய அவர தவை உள்ளது.

 

அதனால் பரந்தனுக்கும் குடாநாட்டுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் வடமராட்சி கிழக்கையும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதன் மூலம் நாகர்காவில் முதல் தென்கிழக்கே சண்டிக்குளம் வரையான மிக நீண்ட (பலமைல்) கடற்பரப்பையும் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து கடற்புலிகளை முல்லைத்தீவில் மிகக் குறைந்தளவு கடற்பரப்புக்குள் உடனடியாக முடக்கி விடவும் படையினர் முனைவர். இதனால் படையினரின் அடுத்த நகர்வு பரந்தனிலிருந்து ஆனையிறவு நாக்கியும் கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து பளையை நோக்கியதாகவுமேயிருக்கும். இவ்வாறானதொரு நகர்வு வெற்றி பெற்றால் புலிகளை பரந்தன்முல்லைத்தீவு வீதி முதல் (ஏ35வீதி) மாங்குளம் முல்லைத்தீவு வீதி வரையான (ஏ34வீதி) மார் 40 கிலாமீற்றர் நீளமும் 40 கிலாமீற்றர் அகலமும் கொண்ட பிரசதேசத்தினுள் முடக்கிவிட்டு பின்னர் முல்லைத்தீவு நோக்கி தெற்குப்புறத்திலிருந்தும் மேற்குப் புறத்திலிருந்தும் முன்னேறி கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

 

அதேநேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மிகவும் குறுகிவிட்டால் புலிகளை அந்தப் பகுதிக்குள் சுலபமாக முடக்கிவிட முடியுமெனவும் படையினர் கருதுகின்றனர். தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளிருக்கும் மூன்று லட்த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் முதலில் அங்கிருந்து வெளியற்றுவதிலும் அரசும் படைத்தரப்பும் தீவிர கவனம் செலுத்தும். இதனால், படையினர் அடுத்து "ஏ9′ வீதியூடாக நகர்ந்து பரந்தனுக்கும் முகமாலைக்கும் இடையிலான பகுதிகளைக் கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்துவர். இதேவேளை, பரந்தன் சந்தியை கைவிட்டதன் மூலம் இவ்வாறானதொரு நிலை ஏற்படு எழும் என்பதை புலிகளும் நன்கறிவர்.

 

பரந்தனும் கிளிநொச்சியும் படையினர் வசமாகிவிட்டால் யுத்தமுனை உடனடியாக முல்லைத்தீவை நோக்கி திரும்பிவிடுமென்பதையும் புலிகள் நன்கறிவர். பரந்தன் சந்தி தங்கள் வசமானதும், பரந்தன் முதல் முகமாலை வரையான பகுதிகளைக் கைப்பற்ற முயல்வதென்பதுடன் அதன் மூலம் வடமராட்சி கிழக்கும் முழுமையாக படையினர் வசமாகிவிடுமென்பதையும் புலிகள் நன்கறிவர். அண்மையில் கூட கப்பல்களில் பெருமளவு ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் அவர்கள் தருவித்துள் ளனர்.

 

கிளிநொச்சி மற்றும் பரந்தனிலிருந்து பின் நகர்ந்த போது கூட அவர்கள் தங்கள் வளங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாது பின்னகர்த்தியுள்ளனர். புலிகளின் பிரதங்கள் நன்கு குறுகிவிட்டபாதும் மூன்றுலட்த்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களும் அவர்களுடனய இருக்கின்றனர். புலிகள் வழங்கிய ஏதோ நம்பிக்கையில் தான் அந்த மக்கள் அவர்களுடன் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் வலுக்கட்டாயமாக அந்த மக்களைப் புலிகள் தடுத்துவைத்திருக்கக்கூடிய சாத்தியமில்லை. தங்கள் பகுதிகளை நோக்கி யுத்தம் திசை திரும்பியுள்ளதையும் அந்த மக்கள் நன்கறிந்தும் இதுவரை அவர்கள் புலிகளுடன் முரண்பட்டு,புலிகள் படைகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூட எவரும் கூறவில்லை. மோதி அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதாகக்கூட எதுவித தகவல்களும் வெளிவரவில்லை.

 

இவ்வாறானதொரு நிலையில் புலிகள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற கள்வி உலகெங்கும் எழுப்பப்படுகின்றது. புலிகளை கடைசிப் பொறிக்குள் தள்ளி அவர்களை சரணடையச் செய்ய அல்லது அவர்களை அழித்துவிட வேண்டுமென இலங்கை அரசும் இனவாதிகளும் முயல்கின்றனர். வன்னிப்போரில் இலங்கையை அரசுக்கும் படையினருக்கும் அனைத்து வகையிலும் உதவும் இந்தியா தமிழக மக்களின் உணர்வுகளைக்கூட மதிக்கத் தவறியுள்ளதுடன் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த எந்தவிதத்திலும் முன்வரவில்லை. இலங்கைப் படையினருக்கும் இலங்கையரசுக்கும் முழு அளவில் இராணுவ உதவிகளை வழங்கும் இந்தியா, போர் நிறுத்தத்தை வலியுறுத்த முற்றாக மறுத்ததன் மூலம் தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறதென்பதை முழு உலகிற்கும் காண்பித்துவிட்டது.

 

இதனால் வன்னியிலும் அதற்கு வெளியிலும் ஏற்படப்போகும் அழிவுகளுக்கான பொறுப்பை இந்தியாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் வன்னிப்போரில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமானால் அப்போது எதனையும் கோரக்கூடிய உரிமையையும் அது இழந்துவிட்டது. முற்றுமுழுதாக இந்திய அரசு ஈழத் தமிழர்களையும் கைவிட்டதன் மூலம் தனது வரலாற்றில் அதுமிகப்பெரும் கறையை ஏற்படுத்தப் போகிறது. இந்த நிலையில் வன்னியில் அடுத்த கட்ட படைநகர்வுகளை ஆரம்பிக்க படையினர் முயலக்கூடும். ஆனாலும் அவர்களுக்குப் புலிகளின் படைபலம் பற்றியும் தெரியும்.

 

பரந்தனையும் கிளிநொச்சியையும் புலிகள் ஏன் கைவிட்டார்கள் என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுகிறது. வன்னிக்குள் கல பகுதிகளிலும் பரந்துவிரிந்து விட்ட நிலையில் முல்லைத்தீவுக்கான கடைசிப்பாரையும் எப்போது ஆரம்பிப்பதென்பது குறித்து படைத்தரப்பும் யோசிக்கின்றது. புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பதை படையினரால் ஊகிக்க முடியாதுள்ளது. முல்லைத்தீவு நாக்கிய பாரிய படைநகர்வுக்கு எதிராக புலிகள் மிகத் தீவிரமாக எதிர்சமர் புரிவரென்பதால் பெருமளவு படையினர் கொல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் ஊகிக்கின்றனர். அதேநேரம் கிளிநொச்சி மற்றும் பரந்தனுக்கான போரில் பாரிய மண் அணைகளை அமைத்தது போன்று முல்லைத்தீவு களமுனைவில் புலிகள் பாதுகாப்பு அரண்கள் எதனையும் அமைக்கவில்லை.

 

மிகக் குறுகிய பிரதத்திற்குள் அவர்களை முடக்கிவிட்டதால் மிகச் சுலபமாக அவர்களை முறியடித்து வெற்றிக்கொண்டுவிட முடியும் எனவும் படைத்தரப்பு எண்ணுகிறது. தற்போதைய நிலையில் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் மிக முக்கியமாக இருக்கப்போகின்றது. இறுதிப் போரை தொடுக்கப் படையினர் முயலும் போது புலிகள் எங்கிருந்து தமது பதில் நடைவடிக்கையை எப்படி ஆரம்பிப்பர் என்பதை எவராலும் ஊகிக்க முடியாதிருக்கிறது.

 

அவர்களும் அங்குள்ள மக்களும் நம்பிக்கையுடன் இருப்பது தெரிகிறது. பரந்தன் மற்றும் கிளிநொச்சியை அவர்கள் திடீரென கைவிட்ட போது வேறு சில நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது போல் இலங்கை அரசிடமும் படையினர் மத்தியிலுமுள்ளது. இதனால் வன்னியில் இறுதிப் பாரில் எவரை எவர் வெல்லுவார் என்பதை அறிய முழு உலகமும் காத்திருக்கின்றது.
 

StumbleUpon.com Read more...

சிங்கள படையினரின் மும்முனை முன் நகர்வு முறியடிப்பு

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP