சமீபத்திய பதிவுகள்

தினமலரின் நடுநிலை முகமூடி போட்டோவுடன் கிழிப்பு

>> Friday, March 28, 2008

 
பீகார் மாநிலத்தில் ஒரு பெண்ணை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சித்தரவைதை செய்த கொடுமை நடந்துள்ளது.இதன் காரணத்தை எழுதும் தினமலர் அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி ஊர்மக்கள் அடித்ததாக வேளியிட்டு உள்ளது.
 
ஆனால் ஹிந்து பத்திரிக்கை இது ஒரு தலித் பெண் மீது நடத்தப்பட்ட கொடுமை என்று விளக்கி உள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Torture of Dalit woman rocks Bihar Assembly

K. Balchand

PATNA: The Opposition parties created a furore in the Bihar Assembly on Wednesday raising the issue of the manner in which a Dalit woman was tortured and subjected to disgrace in a village in Patna district on Thursday.

The Opposition accused the Nitish Kumar government of failing to protect even women in the State. They alleged that Dalits were being subjected to torture and disgrace by the feudal elements in the absence of fear of the law. The Chief Minister agreed to make a statement on the incident after having it investigated.

The incident

Ramayodhya Rai of Adalchak Dumaria village had tied 45-year-old Lalpari Devi, a Dalit, to a tree, beat her up mercilessly and sheared her hair. The arrival of the police saved her life.

Rai had called Lalpari Devi from a neighbouring village to treat his mentally ill wife.

When his wife's condition deteriorated, Rai vented his anger against Lalpari Devi accusing her of misusing her witchcraft.

FIR filed

His neighbours turned the scene into a frenzy. The police rescued her, filed an FIR and arrested six persons including Rai.

Lalpari Devi was admitted to a hospital and released after treatment on Friday.
 

StumbleUpon.com Read more...

நாம் எப்படி இருக்க வேண்டும்?

 

 

முத்தான மொழிகள் 

 

1. உலகத்தை தினமும் சந்தித்து ஜெயிக்கிற அளவு விசுவாசமும், தைரியமும் உடையவனாயிரு.
2. தேவனோடு அல்லாமல், எதையும் என்னால் தனியாய் செய்ய இயலாது என்ற அளவு பெலவீனத்தோடிரு.
3. உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்ய தாராளமாயிரு.
4. உனக்குத் தேவைப்படுகிறவற்றில் சிக்கனமாயிரு.
5. எல்லாம் உனக்குத் தெரியாது என்பதை புரியும் அளவு ஞானத்தோடிரு.
6. அற்புதங்களை சந்தேகமின்றி எதிர்பார்க்கிற அளவு தேவன்மேல் அசாத்தியமான நம்பிக்கையுடையவனாயிரு.
7. உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தயாராயிரு.
8. மற்றவர்களின் துக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆயத்தமாயிரு.
9. பாதையை தவறவிட்டு தவிப்பவருக்கு பாதையை காட்டி வழிநடத்துகிற தலைவனாயிரு.
10. உன்னை மனம் நோகவைத்த நபராயிருந்தாலும், அவர் வெற்றி பெறும்போது அவரை பாராட்டுவதில் முதன்மையாயிருந்து மன்னிப்பை பிரதிபலித்துக் காட்டு.
11. தோல்வியடைந்த உன் சகாவை விமர்சிக்கிறதில் உன் வருத் தம்மட்டும் வெளிப்படட்டும் அல்லது விமர்சிப்போரின் பட்டிய லில் உன் பெயரே இடம்பெறாமல் போகட்டும்.
12. நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியிலும் தேவ ஒத் தாசையை நாடுவாயானால், நீ இடறமாட்டாய்.
13. தவறான வழியில் சென்றால் அதனால் வரக்கூடிய முடிவைக் குறித்து நன்கு ஆராய்ந்து பார். அப்பொழுது நீ சரியான வழியில் நடக்கிறவனாய் இருப்பாய்.
14. உன்னை நேசிக்கிறவர்களைமட்டும் நீ நேசியாமல், உன்மேல் அன்பு இல்லாதவர்கள்மேலும் நீ அன்பாயிரு, அன்பற்றவர்களும் மாறக்கூடும்.
15. எல்லாவற்றிற்கும் மேலாக உன் காலடிகள் இயேசு மாதிரியாய் விட்டுச்சென்ற கால்தடத்தில் நடக்கட்டும்.

நன்றி: துதிமலர்

 

http://tamilchristian.nl/

StumbleUpon.com Read more...

கம்பன் சொன்னது உண்மையா? இல்லை வால்மீகி சொன்னது உண்மையா?இது என்ன புது இராமாயணம்?

 கம்பன் சொன்னது உண்மையா? இல்லை வால்மீகி சொன்னது உண்மையா?இப்படி விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது இது என்ன புது இராமாயணம்
 
 
 

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள்.

லட்சுமணன், 'இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்' என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு இராவணன் வரவேண்டும் என்ற முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு தன் கணவனையும் கொழுந்தனையும் துரத்திவிட்டுத் தான் மட்டுமே தனியே இருக்கிறாள்.

இராவணன் காமப்பித்தனைப்போல் சீதையை வர்ணிக்கிறான். உடல் உறுப்புகள் அத்தனையும் ஒன்றையும்விடாது அவைகளுக்கு ஒப்புவமை கூறுகிறான்.

ஆடையினுள் மறைந்திருக்க வேண்டிய அங்கங்களாகிய தொடை, பின்தட்டு, ஸ்தனங்கள் இவைகளுக்கும், அங்க உவமை கூறும் அளவுக்கு அந்த அங்கங்கள் இராவணனுக்குத் தெரிந்திருக்கின்றன!

இத்தனையும் பேசிய இராவணனுடன், 'முறுவல் கொண்டு பேசுகிறாள்; அழுது படைக்கிறாள்; "உள்ளே வாருங்கள், உட்காருங்கள்; சாப்பிடுங்கள்" என்று உபகாரம் செய்கிறாள்.

அவள் அவனுக்கு உபசரிக்கும் பொழுது, "வாயிற் படியின் வழியே தன் கணவனும், கொழுந்தனும் வருகிறார்களா என்று திரும்பிப் திரும்பிப் பாத்துக்கொண்டே உபசரிக்கிறாள்" என்று கூறபப்படுகிறது.

பிறகு இராவணன், வா என்னுடன் என்கிறான்; இவள் சம்மதித்தே அவனுடன் சென்றாள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. இவளுக்கும் அவனுக்கும் நடந்த மேற்கண்ட சம்பாஷைணைகளும் காட்சிகளும் மட்டும் அல்ல.

சீதை சம்மதித்துச் சென்றதற்கு ஆதாரம்

தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில் ....... ஆசை மேலிட்டு, 'தன் ரோஹினியைப்பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் (சி.ஆர்.சீனிவாசய்யங்கார். மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157 ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165 ஆம் பக்கத்திலும் காணப்படுகிறது.

இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன்பட்டவள் என்றே பொருள்படும்.

காரணம், இராவணன் தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்கு நூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால் அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். இதன் படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவணனுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.

மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில் அவளுடைய முகம் 'காம்பறுந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன' (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.


இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப் புரத்தில் வைத்தான் (பக்கம் -173) என்று கூறப்படுகிறது.

சீதைக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டது

'விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது, துந்துபி அடிப்பது போல் சப்தம் உண்டாயிற்று.'

(பக்கம் 155, சர்க்கம் 55)

குறிப்பு : எனவே, இருவரும் மாடியில், அந்தப்புரத்திற்கு சென்றடைந்து விட்டனர். அதுவும் இருவரும் மாடியில் 'ஏறும்பொழுது' துந்துபி அடிப்பதைப் போல் இருந்ததாம். இருவர் நடையும், அதாவது இராவணன் எவ்வளவு சந்தோஷமாகவும், ஒய்யாரமாகவும், ஆனந்தமாகவும், கம்பீர நடையுடன் காலடி எடுத்து வைத்தானோ, அதேபோல் சீதையும் ஒய்யார நடையுடன், இருவரும் ஒருவர் தோளின்மேல் ஒருவர் கையைப் பிடித்து அணைத்துக் கொண்டு ஏறி இருக்கவேண்டும். அந்தக் காலடியின் சப்தம் துந்துபி அடிப்பதைப்போல் இருந்திருக்கிறது. அன்றியும், இனியும் மேலே நடப்பதைக் கவனிப்போம்.

இராவணனைப் பார்த்து சீதை, 'பிறகு வருவதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது கிடைக்கும் சுகமே பெரியதென்று நினைக்கிறாயே' (பக்கம் 171) என்று கேட்கிறாள். இதனால், இராவணன் சீதையிடம் சுகம் அனுபவித்துவிட்டான்! ஆராய்ந்து பார்த்தால் அவளிடம் சுகம் அனுபவிக்கும் நேரத்தில் இவ்வார்த்தைகளைச் சீதை இராவணனிடம் கூறுவது நன்கு தெரியும்.

இதற்கு இராவணன் சமாதானம் கூறுகையில், 'சீதே! அக்கினி சாட்சியாக உன் கையைப் பிடித்த கணவனைக் கைவிடுவது அதர்மமென்றெண்ணி வெட்கப்படுகிறாயோ? நம் இருவருக்கும் நேர்ந்த சம்பந்தம் தெய்வகதியால் ஏற்பட்டது. இது ரிஷிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது' (பக்கம் 177) என்று சமாதானம் கூறுகிறான். சீதை வருத்தப்படுவதாகவோ, ஆத்திரப்படுவதாகவோ கூறவில்லை. வெட்கப்படுகிறாளாம் விருப்பம் இல்லாவிட்டால் வெட்கப்படுவது தான் விருப்பமில்லை என்பதைக் காட்டும் அறிகுறி போலும்! ஆத்திரமோ, கோபமோ கொண்டிருப்பாளாகில் விருப்பம் இல்லை என்று கூறலாம்.

எனவே, சீதையிடம் இராவணன் செய்த காம லீலைகளுக்கும் அவள் உட்பட்டிருக்கிறாள். ஆனால், பெண்களின் இயற்கைக் குணப்படி வெட்கப்பட்டிருக்கிறாள்.

மேலும் ஆரண்யகாண்டம் 55 ஆவது சர்க்கம் 678 ஆவது பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார். மொழி பெயர்ப்பில் கூறப்படுவதாவது - 'இனி நீ நாணமுறற்க. இதனால் தர்மலோபமொன்றுமிலது. உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமேயாகும. இஃது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது' என்று கூறப்படுகிறது.

'இனி நீ நாணமுறற்க' இதன் பொருள் என்னவென்றால் இனிமேல் எதற்காக வெட்கப்பட வேண்டும்? உனக்கும் எனக்கும் தெய்வகதியால் சேர்க்கை நேர்ந்துவிட்டது. என்கிறான். அதாவது காரியம் முடிந்துவிட்டது. இனிமேல் வெட்கப்பட்டு என்ன பலன் என்ற கருத்தில் இராவணன் கூறுகிறான். எனவே இருவருக்கும் சேர்க்கை நேர்ந்தது என்பதை இதன்படி உறுதிப்படுத்தலாம்.

மேலும் இராவணன் கூறியதாக அதே மொழி பெயர்ப்பாளர் இந்தச் சம்பவத்திற்குக் குறிப்புத் தருகையில் 'இராவணன் பிராட்டியாரை முன்போலவே தாசனாகச் செய்து கொள்ளும்படி விண்ணப்பம் செய்தான்பூ என்கிறார். அதாவது முன்போலவே என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது இருவருக்கும் சம்பந்தம் ஏற்பட்ட முன் சம்பவத்தைப் போலவே இனி மேலும் இருக்க வேண்டும் என்ற கருத்தில் வேண்டினான் என்கிறார். ஆகவே, மொழி பெயர்ப்பாளரின் ஆராய்ச்சியின் படியும் சீதைக்கும் இராவணனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்பது உறுதி.

(கானகத்தில் சீதையை விட்டுப் பிரிந்த இராமன், சீதையை நினைத்துக் காமத்தால் மனம் உருகிப் பேசுகின்றவைகளையும், இலட்சுமணனிடம் கூறும்போது, தான் சீதையுடன் அனுபவித்த இன்பத்தை வெட்கமின்றி விளக்குவதையும் ஆரண்ய காண்டத்தில் கண்டுள்ளவைகளை எடுத்துக் கூறினேன்)

இனி, கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் ராமன் கூறுகின்றான்;

என்னிடம் இன்பங்களை அனுபவித்தாள்!

அவளுடன் சுகித்திருக்க, ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளைக் கவர்ந்து சென்றானே! இப்படிப்பட்டவளிடம் போகங்களை அனுபவிப்பார்கள் பாக்கியசாலிகள்!

சீதையுடன் சுகிப்பதே போதும்; ராஜ்யம் தேவையில்லை.

--------தந்தைபெரியார்-நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

 

http://thamizhoviya.blogspot.com/2008/03/blog-post_28.html

StumbleUpon.com Read more...

இதுக்குத்தான் சொல்றது பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் அப்படின்னு.நல்லத சொன்னா யார் கேக்கறா?

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்



 
 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          
Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon
 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
     
Sis. Evangeline Paul
 
 
                                                                                  Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.



http://sathyavaan.blogspot.com/2008/03/blog-post_28.html

StumbleUpon.com Read more...

வேகமாக குறைந்து வரும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை .இப்படியே போனால் என்ன ஆகும்?????

 
வேகமாக குறைந்து வரும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை .இப்படியே போனால் என்ன ஆகும்?????
 
 
கொல்கத்தாவில் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைகிறது!
    

HowrahBridge and Monsoonclouds
கொல்கத்தா:  கொல்கத்தா நகரில் வசித்து வரும் தமிழர்களும், மலையாளிகளும் குறையத் தொடங்கியுள்ளனர். கொல்கத்தாவை விட்டு அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு வேகமாக வெளியேறத் தொடங்கியுள்ளதாக பிரபல வரலாற்று நிபுணர் பி.டி.நாயர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் வசித்து வரும் பி.டி.நாயர் பிரபலமான வரலாற்று நிபுணர் ஆவார். கொல்கத்தாவின் வரலாறு, சமூகம், அரசியல், மதம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து 42 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

கொல்கத்தாவின் நடமாடும் என்சைக்ளோபீடியா எனவும் இவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் எழுதிய ஹிஸ்டரி ஆப் கல்கத்தா என்ற ஆய்வு நூல் மிகச் சிறந்த ஆய்வு நூலாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் பல்வேறு சமூகத்தினரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக நாயர் கூறியுள்ளார். குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளும் கொல்கத்தாவிலிருந்து வெளியேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாயர் கூறுகையில், ஒரு காலத்தில் கொல்கத்தாவை நிர்மாணித்தவர்கள் கிரேக்கர்களும், ஆர்மீனியர்களும், யூதர்களும்தான். அவர்களது கட்டடக் கலைக்கு சிறப்பாக ஏராளமான கட்டடங்கள் இன்றும் கொல்கத்தாவுக்கு எழில் கூட்டிக் கொண்டுள்ளன. ஆனால் இன்று கிரேக்கர்கள் கொல்கத்தாவில் ஒருவர் கூட இல்லை.

யூதர்களின் எண்ணிக்கை 25 ஆக சுருங்கிவிட்டது. ஆர்மீனியர்களின் எண்ணிக்கை வெறும் 600 ஆக உள்ளது.

இன்னொரு முக்கிய சமூகமான தமிழர்களும், மலையாளிகளும் கூட இங்கிருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர். ஒரியர்களும் கூட கொல்கத்தாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் வசம் இருந்து வந்த பல்வேறு சொத்துக்களும், சர்ச்சுகளும் விற்கப்பட்டு விட்டன. பலவற்றை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தன் வசம் எடுத்துக் கொண்டு விட்டது.

நகரிலேயே மிகவும் பழமையான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற பிரபோர்ன் சாலை சர்ச் 1724ம் ஆண்டு கட்டபப்ட்டது. ஆர்மீனியர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது.

முதன் முதலில் கொல்கத்தாவிலிருந்து மொத்தமாக வெளியேறியவர்கள் கிரேக்கர்கள்தான். அவர்கள் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச் சென்ற சர்ச்சும், பிற சொத்துக்களும் அரசுக்கு தானமாக வழங்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் நாயர்.

இப்போது, தமிழர்களும், மலையாளிகளும் வேகமாக வெளியேறுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் நாயர் தெரிவித்துள்ளார்.
 

StumbleUpon.com Read more...

பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்



 
 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          
Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon
 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
     
Sis. Evangeline Paul
 
 
                                                                                  Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.



http://sathyavaan.blogspot.com/2008/03/blog-post_28.html

StumbleUpon.com Read more...

நான்கு வருடங்களுக்கு முன் இதே நாளில் செய்திருந்த தன் சாதனையை சேவாக் சமன் செய்தார்

 
2004-ல் மார்ச் 28 ந் தேதியில் பாக்கிஸ்தானுடன் நடந்த போட்டியில் 309 ரன் எடுத்த சேவாக் தன் சாதனையை  இன்று (28-3-2008) சமன் செய்தார் சேவாக்
 
 
 
 

28 ©õºa,2008 ::17:15

சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் ‌போட்டியின் 3ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 468 ரன்கள் எடுத்திருந்த. சேவாக் 309 ரன் எடுத்து சாதனை புரிந்தார். டிராவிட் 65 ரன் எடுத்தார். ஜாபர் 73 ரன்களில் அவுட் ஆனார். முன்னதாக 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாப்ரிக்கா முதல் இன்னிங்சில் 540 ரன்கள் எடுத்தது. தென்னாப்ரிக்க வீரர் ஆம்லா சிறப்பாக விளையாடி 159 ரன்கள் எடுத்தார்.
 

StumbleUpon.com Read more...

அர்ஜூன் சம்பத்க்கு ஆப்படிக்கும் tbcd

20000 பேர் மதம் மாறுகிறார்களாம் :மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர பாடுபட்டவர்கள் வரவேற்கிறார்களாம்..

20000 பேர் மதம் மாறுகிறார்களாம் :மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர பாடுபட்டவர்கள் வரவேற்கிறார்களாம்..

யார் அழுகிறார்கள்...யார் அடிக்கிறார்கள் என்றே புரியாத வண்ணம் இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னால், எறையூரில், தலித் கிறித்துவர்கள், வன்னியர்கள் தங்களை தேவாலய வளாகத்தில் விடுவதில்லை என்று தனியாக தேவாலயம் எழுப்ப முயன்றனர். அதற்கு வன்னிய கிறித்துவர்கள், தலித் கிறித்துவர்களை, வீடு புகுந்து தாக்கினார்கள்.

சமூக இழிவு துயர் நீக்கவே அந்நாளில் சமூகத்தின் அடித்தட்டில் தள்ளப்பட்ட, வர்ணாசிரம இந்து மதத்திலிருந்து, கிறித்துவ மதத்திகு மாறினார்கள். ஆனால், சாதி பேய் அவர்களை விட்டப்பாடில்லை.

இப்போது, தலித் சமூகத்தினரின் குரலுக்கு ஆலய பாதிரிகள் செவி சாய்ப்பதால், இப்போது வன்னியர்கள் கிறித்துவ மதம் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மதம் மாற எண்ணியுள்ளார்களாம். அவர்கள் பாதுகாப்பு என்றுக் குறிப்பிடுவது, கிறித்துவ மதத்தில் சாதியயை வைத்து இழிவு செய்வதை தொடர ஆலய பாதிரிகள் வகை செய்ய வேண்டுமாம். தமிழர்கள் தமிழர்கள் என்று கூவும் இராமதாஸ், அய்யா, இவங்களைப் பார்த்து அறிவுரை சொல்லுவாரா. அதுக்கு அவருக்கு நேரம் இருக்கும்மா.

இது தான் கொடுமை என்றால், மத மாற்றம் செய்யக் கூடாது என்று போராடும், இராம கோபலன் குழுவைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்ன சொல்லுறார் தெரியும்மா..

"தீண்டாமை கொடுமையை இந்து மதம் ஏற்காது. தலித்துகளை இழிபடுத்தும் செயல்களை ஆதரிக்காது. மதம் மாற விரும்பும் வன்னிய கிறிஸ்தவர்கள் எந்த வகையான பாதுகாப்பை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை.

தீண்டாமையை கடைபிடிக்கப் பாதுகாப்பு கிடைக்காது. உண்மையிலேயே தேசிய நீரோட்டத்தில் இணைய அவர்கள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என்றார்."


இதை விட அண்ட புளுகு இருக்க முடியும்மா. தலித்துகளிஅ இழிவுபடுத்து செயல்களை ஆதரிக்காதாம். எப்பா, சாமிகளா கூசாம,எப்படியப்பா இப்படி புருடா விடுறீங்க.

மத மாற்றமே வேண்டாம் என்றுச் சொன்னவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய விரும்பின்லா, சேர்த்து விடுறாராம். எங்கடாப்பா ஓடுது..அந்த நீரோட்டம். கொஞ்சம் காட்டுங்க..அங்கேயிருந்து, வைகைக்கும், காவிரிக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்வோம்.
அப்ப, கிறித்துவ மதத்தில் இருப்பவர்கள் எல்லாம், தேதிய நீரோட்டத்தில் இல்லையா. அவர்கள் என்ன கட்டாந்தரையில் ஒரு ஓரமாக இருக்கிறார்களா.

கிறித்துவ மதத்தில் சாதி இழிவு/சாதி அனுமதிக்கப்படாது என்றாலும், 20000 வன்னியர்கள் என்று கணக்குச் சொல்லும் விதமாக வலுவாகவே சாதி பிரிவினை போற்றப்பட்டே வந்திருக்கிறது. அதற்கு எதிராக சின்ன நடவடிக்கை எடுத்ததவுடன், ஆலயங்களையும், பாதிரிகளையும் மிரட்ட ( இராமதாஸ் பானியிலே.) இப்படி ஒரு புலிப் பாய்ச்சல். மதம் மாற்ற பல் வேறு தகிடு தத்தம் செய்து வந்த கிறித்துவ மதப் பாதிரிகள், இதை எப்படியூம் தடுக்க முயற்சிகள் எடுப்பார்கள். அப்போது, அவர்களை தங்களுக்குச் சாதகமாக திருப்பலாம் என்ற கணக்கே இங்கே போடப் படுகிறது என்று நினைக்கீறேன். அப்படியே, மதம் மாறினாலும், அவர்கள் வேண்டும் பாதுகாப்பு என்பது, தீண்டாமையயைத் தொடர்வதே

எனக்கு மேல் எத்தனனப் பேர் இருந்தால் என்ன, என் ஊரில் நான் தான் பெரும்பான்மை. எனக்கு கீழே தான் அவர்கள் இருக்க வேண்டும் என்ற ஆண்டை மணப்பான்மை, கீரிப்பெட்டி, மேலவளவு நிகழ்வுகளுக்குப் பின், எறையூரில் தென் படுகிறது. வன்கொடுமைகளுக்கு பிராமனர்கள் காரணம் இல்லை, மற்ற சாதியினர் தான் செய்கின்றார்கள் என்றுச் சொல்லுபவர்கள் அவதானிக்க. சாதிக் கொடுமையயைத் தொடர, வெறு மதத்திற்கு மாற நாங்கள் தயார் என்ற உடன், தேசிய நீரோட்டத்தில் சேர்க்க முன்வந்து ஆதரவு குரல் கொடுப்பது, பிராமனர்களின் குரலாக ஒலிக்கின்ற கட்சிகள் தான் என்பது கவனிக்கத்தக்கது.

இப்படி, வெளிப்படையாக சாதி வெறிப் பிடித்து அலைபவர்கள் இருக்கும் ஊரில் தான் நாமும் இருக்கிறோம் என்பது வெட்க கேடு. அரசு சார்பாக, எது எதுக்கோ பிரச்சாரம் பண்ணுறாங்க. இந்தப் பிரச்சனைகளுக்கு ஏன் ஊடக இடத்தை பயன் படுத்தக் கூடாது.


பி.கு:-
1. இராம கோபலனுடன் இந்து முன்னனியில் இருந்து, பின்னர் பிரிந்து, இந்து மக்கள் கட்சி என்ற நடத்தி வருகிறார், அர்ஜூன் சம்பத்.

 

 

http://tbcd-tbcd.blogspot.com/2008/03/20000.html

StumbleUpon.com Read more...

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!

மீண்டும் தமிழ்மணத்தில் இணையமாட்டேன்!




தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள காத்திருக்கும்

பெயர் பட்டியலில் என்னுடைய பெயர் முதலில்


இருக்கின்றது. அந்த "தமிழச்சி" நானில்லை


என்பதை என்னுடைய தோழர்களுக்கும்,


வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வழக்கம் போல் பார்வையாளர்களின்

எண்ணிக்கைக்கு அதிகமாக தற்போது


என்னுடைய வலைத்தளத்திற்கு வருகிறார்கள்.

என்னை மதிக்கும் வாசகர்களின் ஆதரவு

எனக்கு போதும். யாருக்காகவும், எதற்காகவும்

எப்போதும் சுயகௌரவத்தை விட்டுக்

கொடுக்கமாட்டேன் என்பதை அறிய தருகின்றேன்.


"மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு"

"சமூக அநீதிகளை புரட்டிப் போடும் சிந்தனைகளுடன்"

தமிழச்சி



ஓ அது நீங்க இல்லியா.சரி பரவாயில்லை மத்தவங்க எல்லாம் அவங்கலாத்தான் இருக்கும்.நானும் அப்ளிக்கேஷம் போட்டு இருக்கேன்.சேத்தா சேக்கட்டும் எனக்கு தமிழ்மணத்திடம் எந்த சண்டையுமில்லை.சேக்காட்டியும் பராவயில்லை.நல்லதே நடக்கும்தெய்வமகன்

StumbleUpon.com Read more...

இணையத்தில் இஸ்லாம் பற்றிய எனது முதல் மடல்

இணையத்தில் இஸ்லாம் பற்றிய எனது முதல் மடல்

http://groups.yahoo.com/group/Maraththadi/message/19355


> தொடர்ந்து இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக முன்பும், இப்போதும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறுகிய
மனப்பான்மையோடு எழுதி வைத்த வரலாறுகள், திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சியின் விளைவே. இஸ்லாம் மத சகி
ப்புத் தன்மையை வலியுறுத்தும் மார்க்கம் என்பதற்கு, முதல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதும், மதினாவில்
நபிகள் நாயகம் (ஸல்) வெளியிட்ட அறிக்கை ஒன்று மட்டுமே போதுமானது. "நமது குடியரசில் தம்மை
இணைத்துக்கொள்ளும் யூதர்களும் பாதுகாக்கப் படுவார்கள். அவர்கள் இங்குள்ள முஸ்லிம்களோடு சம உரிமை
பெற்றவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றிக்கொள்ளலாம். எல்லாக் கோத்தி
ரங்களையும் சேர்ந்த அனைத்து மதினா வாழ் யூதர்களும் முஸ்லிம்களோடு சேர்ந்து உருவாக்குகின்ற ஒரு நாடாக
இது இருக்கும்" என்ற மேற்கோளுடன் உலக வரலாற்றில் முதன் முதலாக மதச்சார்பற்ற, மத சகி
ப்புத்தன்மையுடைய ஒரு குடியரசை நிறுவி இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தது நபிகள் நாயகம் (ஸல்).
ஔரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரது மத சகிப்புத் தன்மையும், மதச்சார்பின்மையும்கூட இதில் விரிவான
ஆய்விற்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
>


ருமி,

உங்களது புத்தகத்தைப்படிக்காவிட்டாலும், அதைப்பற்றிய கட்டுரையை படித்தபோது எனக்குள் எழுந்த உணர்வுகளை
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவதில் தவறு எதாவது இருக்குமானால் சுட்டிக்
காட்டுங்கள்.

திருக்குரான் விஷயத்தில் பிந்தய சூராக்கள், முந்தய சூராக்களை nullify செய்கின்றன. எனவே, இஸ்லாம்
விஷயத்தில் பாதி உண்மை என்பது முழுப்பொய்க்குச் சமானம்.

யூதர்கள் விஷயத்தில் முதலில் நபிகள் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். நீங்கள் குறிப்பி
ட்டுள்ளது போல மதீனா நகரில் அவர்களுக்கு சுதந்திரம் தந்ததும் உண்மைதான். ஆனால் அதற்குப்பின்னால் நி
கழ்ந்தவைகளை, குரான் யூதர்கள் பற்றி பல இடங்களில் சொல்பவைகளை நீங்கள் சொல்லியிருக்கவில்லை போல்
தெரிகிறது. குரான் யூதர்களை `குரங்குகள்' என்று குறிப்பிடுகிறது. பல சூராக்கள் அவர்கள் மீது வெறுப்பைப்
பொழிகின்றன. இது, இன்றளவும் இஸ்லாமிய உலகில் யூதர்களுக்கு எதிரான உணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கி
றது.

யூதர்களின் தேவை ஆரம்பக்காலத்தில் நபிகளுக்கு தேவைப்பட்டபோது அவர்களுக்கு உரிமைகள் வழங்கபட்டன. பி
ன், அவரது வலு கூடிய போது, குரைஷிக்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யூதர்களின் தேவை குறைந்த
போது, அவர்கள் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டி, அவர்கள் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவு
போட்டார். அவர்களது பெண்டு ,பிள்ளைகளை எதோ பண்டங்களை பகிர்வது போல அனைவருக்கும் பகிர்ந்து
(அடிமைகளாக) கொடுத்தார். இது அந்தக்கால வழக்கமாக இருக்கலாம். ஆனால், அதையே இன்றைய
முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். ஒரு மதப்பற்று கொண்ட முஸ்லீமின் பார்வையில் நபிகள் செய்த செயல்கள்
எல்லாக்காலகட்டத்திற்கும் பொருந்தியவை. இதுவே இன்றளவுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் ணிவேராக
இருக்கிறது.

நபிகள் புத்தகங்களுடையோருக்கு (people of the book - Christians and Jews) உரிமைகள் சி
லவற்றை பின் கொடுத்தது உண்மைதான். னால் அது அன்றைக்கு வேண்டுமானால் தாராளமானதொன்றாக இருந்தி
ருக்கக்கூடும். இன்றைய நிலையில் அவற்றை மிகவும் கொடூரமான செயல்கள் என்றுதான் மதிப்பீடு செய்ய
வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஒரு திம்மி கோர்ட்டில் சாட்சி சொல்ல முடியாது, அவனது மத வழி
பாட்டுத்தலத்தை இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தை விட உயர்வாக கட்டிக்கொள்ள முடியாது, முஸ்லீம்
ஒருவன் அவனை அடித்தால் திருப்பித்தாக்க முடியாது, ஒட்டகத்தில் உயர அமர்ந்து சவாரி செய்ய முடியாது..
இப்படிப்போகிறது அந்த `சலுகைகள்'.

இது இவ்வாறிருக்க, புத்தகங்களுடையோர் அல்லாத மற்ற மதத்தினருக்கோ இஸ்லாம் எந்த உரிமையும் வழங்குவதி
ல்லை. அவர்கள் சரி-மனிதர்களாகக் கருதப்படுவதில்லை. இதில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவுரங்க சீப்
செய்த மிகப்பெரிய சாதனை, இந்துக்களை திம்மிக்களாக பெரிய மனது செய்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஜி
ஸ்யா வரி விதித்து அவர்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக க்கியது தான். அவுரங்கசீப்
எதையும் தானாக செய்யவில்லை. நபிகள் திம்மிக்களுக்கு எந்த உரிமைகளை மட்டும் கொடுக்கச்
சொன்னாரோ அதை மட்டுமே தந்தான். அதன் படி, இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட மாட்டாது. னால்
இருக்கிற கோவில்களை செப்பனிட முடியாது, மதுராவில் இருந்த ஏழு மாட கிருஷ்ணர் கோவில் மசூதியை விட
உயரமாக இருந்தது என்பதால், ஒரு சில மாடங்கள் மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை இடிக்க உத்தரவி
ட்டான். அவுரங்கசீப்பை ஒரு சூபியாக காட்ட முயற்சிக்காதீர்கள். அவனே இறக்கும் தருவாயில் தனது சிரி
யருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய மதவெறியால் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு வருந்தியிருக்கிறான்.

இந்த சரித்திரம் எல்லாம், நாம் அடித்துக்கொள்வதற்காக சொல்லவில்லை. இதிலிருந்து பாடம்
கற்றுக்கொள்வோம். எல்லா மதங்களிலும் நல்லவை தீயவை கலந்திருக்கின்றன. நல்லவை ஏற்று அல்லவை புறக்கணி
ப்போம். நபிகளது வாழ்வும் அப்படியே. அவர் தவறுகள் செய்திருக்கின்றார், சிலவற்றை அவரது வாழ் நாளி
லேயே உணர்ந்து திருத்திக் கொண்டும் இருக்கிறார்.

அவர் தவறே செய்திருக்க முடியாது என்று கூறுவது, அவரது வாழ்வை அப்படியே பின் பற்ற முயல்வது, அவரை
கடவுளுக்கு நிகராகக் கருதுவதற்கு சமம். இது இஸ்லாத்துக்கு விரோதமானாது. ஆனால் ஒசாமிவிலிருந்து
பாஷா வரை இதைத்தான், இந்த நபி வழிபாட்டைத்தான் செய்கிறார்கள். அல்லாவை திட்டினால் கூட ஒருவன்
தப்பிக்கலாம், நபிகளாரை குறைகூறினால் சாதாரண முஸ்லீம் கூட வன்முறையில் ஈடுபடுகிறான். கடவுளுக்கு நி
கராக, கடவுளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகம்மது நபிக்கு வழங்கப்படுவதைத்தான் நடைமுறையில் பார்க்கி
றோம்.

இஸ்லாமில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும், அதை உங்களைப்போன்ற படித்தவர்கள், பண்பாளர்கள் முன்னெடுத்து
செய்ய வேண்டும். அப்படிச் செய்தீர்கள் என்றால், இஸ்லாமிய சமுதாயத்திற்கும், உலகிற்கும் உங்களது மி
கப்பெரிய ஜகாத்தாக (இறைக்கொடை) அது இருக்கும். உலகில் சமாதானமும் அமைதியும் ஏற்பட வழிவகுக்கும்.

நேசகுமார்

 

http://nesamudan.blogspot.com/2008/03/blog-post_27.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP