சமீபத்திய பதிவுகள்

ஒரிசா அவலங்கள் படங்களுடன்

>> Friday, October 31, 2008

Photos of Orissa Violence

PS: May Contain Images that may cause distress. View at your own discretion. Images have been taken from emails that are circulating on the Internet.

25082008629

A Vehicle Burnt

25082008630 

An Orphanage that was attacked

Rajani who was burnt along the orphanage

Rajini Majhi (who was burnt at the orphanage at Bargarh)

Fr Edward

Father Edward Sequiera

House of a Christian destroyed in the violence in Orissa. Anti-Christian violence since Aug. 25 has killed at least 14 people in four days.
 
 
Firefighters douse the flames at an orphanage at Khuntpalli village in Orissa where Hindu fanatics burnt alive a 20-year-old woman.
 
Fr. Edward Sequeira SVD
 
 
 
Ahead of the feast of Blessed Teresa of Kolkata, on September 5, the Superior General of the Missionaries of Charity, Sr. Nirmala Joshi MC, appeals through Asianews to all Indians to break the chain of violence taking place in Orissa.
 
 
 
 
Picture of Fr. Thomas Chellen
 
 
The ruins of the orphange that was burned own.

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்; இறந்தோர் தொகை170ஆக அதிகரிப்பு(படம் இணைப்பு)

>> Thursday, October 30, 2008

lankasri.comபாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளது பலுச்சிஸ்தான் மாநிலம். மிகவும் பின்தங்கிய மாநிலமான இங்கு அடிக்கடி நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகள் நடந்து மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது வாடிக்கை.

கடந்த 1935-ம் ஆண்டு இந்த மாநில தலைநகர் குவெட்டா நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்த நகரமே இடிந்து தரை மட்டமானது. இதே போல பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான (ரிக்டர் அளவில் 7.6) நில நடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். கடந்த ஆண்டு பலுச்சிஸ்தான் மாநிலத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 100-க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இந்த பலுச்சிஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலையில் 2 முறை மீண்டும், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. முதல் நில நடுக்கம் அதிகாலை 4.33 மணிக்கு ஏற்பட்டது. அடுத்து 5.10 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதில் ஜியாரத் மற்றும் பிஷின் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஜியாரத் பகுதியில் உள்ள 8 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் அதிக அளவில் ஏற்பட்டதாக புவியியல் வல்லுனர் காமர்-உஜ்-ஜாமன் சவுத்ரி தெரிவித்தார். லோரலை, குயில்லா அப்துல்லா, சிப்பி, போலன், மஸ்துங், ஜோஹ்ப் ஆகிய பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.

2 முறை பூகம்பம் ஏற்பட்ட போது அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்த பலர் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். விழித்துக் கொண்ட சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து, துப்பாக்கியால் சுட்டு பூகம்பத்தை அறிவித்தனர். மசூதிகளில் இருந்த ஒலிபெருக்கிகள் மூலமும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள்.

இந்த நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகள் களி மண்ணாலும், மூங்கிலாலும் கட்டப்பட்டவை. அந்த வீடுகள் முழுவதும் தரை மட்டமாயின. பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது.

170-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியும், நிலச் சரிவில் உயிரோடு புதைந்தும் பலியானார்கள். 100 பேர் பலியானதை பலுச்சிஸ்தான் மாநில வருவாய்த்துறை மந்திரி ஜமாரக் கான் உறுதி செய்தார். இன்னும் நிறையப் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று மேயர் தில்வார் காக்கர் அச்சம் தெரிவித்து உள்ளார். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தின் நடமாடும் ஆஸ்பத்திரிகள், டெண்டுகள், கம்பளிகள், போர்வைகள் மற்றும் மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

வீடுகளை விட்டு வெளியே வந்தவர்களும், வீடுகளை இழந்தவர்களும் சாலைகளிலும், திறந்த வெளிகளிலும் படுத்து தூங்கினார்கள். பலர் பயத்தில் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தனர்.

பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு அரசாங்கம் உடனடியாக ராணுவத்தினரையும், துணை ராணுவப் படையினரையும், மீட்புக் குழுவினரையும் அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. பல கிராமங்களில் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், கிராமங்களை எளிதில் சென்று அடைய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒதுங்கி இருந்ததாலும், மலைப் பகுதியில் கிராமங்கள் இருந்ததாலும் மீட்புக் குழுவினரால் உடனடியாக அந்த இடங்களைச் சென்று அடைய முடிய வில்லை. பூகம்பம் ஏற்பட்ட 6 மணி நேரம் கழித்துக்கூட அவர்களால் அங்கு சென்று சேர முடியவில்லை.

பூகம்பம் ஏற்பட்ட இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

பூகம்பம் நடந்த பிறகு 7 முறை அதன் பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை 4 முதல் 4.3 வரை ரிக்டர் ஸ்கேல் அளவில் இருந்தன. இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பின்னதிர்வுகள் இருக்கும் என்றும், அவை அதிக அளவில்கூட இருக்க வாய்ப்புண்டு என்றும் புவியியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான இங்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது. அந்த ஆலைகளுக்கோ, இயற்கை எரிவாயு கிணறுகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை.

lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225269412&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அஸ்ஸாமில் தொடர் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி! 200 பேர் காயம்!!(படம் இணைப்பு)

 
lankasri.comஅஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான குவஹாத்தி உட்பட பல இடங்களில் அடுத்தடுத்த நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கி 11.50 மணிவரை 11 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும், குண்டுகள் வெடித்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைப் பகுதிகள் என்றும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

குவஹாத்தி நகரிலுள்ள கணேஷ்குரி என்ற இடத்தில்தான் முதலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. 50 மீட்டர் சுற்றளவில் இருந்த பலர் இதில் கொல்லப்பட்டனர். சில நிமிடங்களில் மீண்டும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அச்செய்தி கூறுகிறது.

குவஹாத்தியில் மட்டும் கணேஷ்புரி, ஃபேன்சி பஜார், பான்பஜார் ஆகிய இடங்களில் 4 குண்டுகள் வெடித்துள்ளன.

கோக்ரஜார் என்ற இடத்தில் 3 குண்டுகள் வெடித்துள்ளன. போன்கைகுவான் என்ற இடத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. பர்பீட்டா சாலையில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் மட்டும் 8 பேர் உயிரிழந்நதுள்ளனர்.

இத்தாக்குதலின் பின்னனியில் உல்ஃபா இயக்கம் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறிய அஸ்ஸாம் மாநில காவல்துறைத் துணைத் தலைமை ஆய்வாளர் ஜி.பி. சிங், அதிகம் பேர் கொல்லப்பட்ட கணேஷ்குரியில் காரில் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து கோபமுற்ற மக்கள் சில இடங்களில் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1225359467&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஒரிஸ்ஸா : உயிர் பிழைக்க வீடுகளில் காவிக் கொடி

ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் வன்முறைக் கும்பல்களிடமிருந்து உயிர் பிழைப்பதற்காக, தாங்கள் இந்துதான் என்று தெரியப்படுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள கிறிஸ்தவர்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.

வன்முறைக் கும்பல் எந்த நேரமும் புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்பதால்,வன்முறைக் கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக, கிறிஸ்தவர்கள் கூட தாங்கள் இந்து என்று தெரிவிக்கும் நோக்கத்தில், தங்களது வீடுகளின் உச்சியில் காவிக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

" ஒரு கொடி எங்களது உயிரை காப்பாற்றுகிறது என்றால் அதனை வீட்டு மீது பறக்க விடுவதில் தவறில்லை " என்று அங்குள்ள கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கிறிஸ்தவர்களே அதிகம்.ஆனால் அங்குள்ள வீடுகளில் காவிக் கொடிகள் வரிசையாக பறப்பதை பார்க்கும்போது, அந்த கிராமமே இந்து கிராமமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

மேகத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்து-வீடியோ

>> Wednesday, October 29, 2008

கடவுள் நம்பிக்கை என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டியதுதான்.ஆனால் அது மூட நம்பிக்கையாகும் பொழுது அது நகைப்புக்குரியதாக மாறிவிடுகிறது.மேகக்கூட்டங்கள் ஏதேச்சையாக ஒன்று சேர்ந்து அவை ஒரு மனிதன் போல் வடிவமாக நம் கண்களுக்கு தெரியலாம்.ஆனால் அதை இயேசு கிறிஸ்துவின் உருவம் என்று சொல்லுவது பால்குடிக்கும் கடவுள்கள் போன்ற கற்பனையாக மாறிவிடுகிறது.

இயேசு மனித அவதாரம் எடுத்தார் என்பது வேதாகம படிப்பினை.ஆனால் அவர் போல் உள்ள அனைத்து மனித உருவங்களும் இயேசுவாக முடியாது.

ஆஸ்திரேலியா சிட்னியில் இயேசு கிறிஸ்துவின் உருவம் என்று சொல்லப்படுகிற வீடியோ




StumbleUpon.com Read more...

கோட்சே காலம்முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

 
 





சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!!

இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!

ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...

ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!

இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.

பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

காந்தியாரைக் கொன்ற கோட்சே!

1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?

காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.


சதுமுகையில்...

2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).

தென்காசியில்...


3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.

இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!


இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

கான்பூரில் நடந்தது என்ன?

4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.

பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.

மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!

வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.

மகாராட்டிரத்தில்...


5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).

பெண் சாமியார் சிக்கினார்

6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!

படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் (ABVP) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.

குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!

மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.

சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!

சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.

நடவடிக்கைகள் தேவை


மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.


------------------- "விடுதலை" -28-10-2008

StumbleUpon.com Read more...

இந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே.


இந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே. கட்டுரையாக்கம்: இங்கிர்ட் அல்புக்யூர்க் ஆன்மீகவாதிகள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இயேசுவில் மட்டுமே. அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது இயேசு அவர்களுக்காக என்ன செய்தார் என்பதையே. மாறாக கிறித்தவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதையல்ல.

(மனிதர்களை),ஆலயங்களை, வாழ்விடங்களை, பாதைகளை தகர்ப்பதும் எரிப்பதும் (ஆன்மீகவாதிக்கு) தேவையற்ற கோபவெளிப்பாடுகள். ஒருவகையில் இவை அர்த்தமற்ற போர்களே.ஏனெனில் இந்துத்துவம், கிறித்தவம் ஆகியவை மதங்கள் அல்ல; அவை ஒரு வாழ்க்கை முறைகளே.

ஹிந்து என்பது சிந்து என்ற சொல்லில் இருந்து வந்த ஒன்று. சிந்து என்பது ஒரு நதியின் பெயர். சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் (அந்நாளில்) ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆக ஹிந்து என்பது ஒரு புவியியல் சார்ந்த வார்த்தையன்றி அது ஒரு மதமல்ல. ஹிந்துக்களின் மதம் "சனாதன தர்மம்" அதாவது "பழமையான வாழ்வியல் முறை'. இந்த சனாதன தர்மம் ஒருவனின் நம்பிக்கை,கடமைகள், அவனது தொழில் ஆகியவற்றின் கலவையாக இருந்தது.ஹிந்துக்கள் அவர்களது வாழ்க்கயின் நோக்கத்தை தேடுவதும் (உணர்ந்ததைக்) சாதகம் புரிய முயற்சி செய்வதுமாக இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தோர் அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், ஹிந்துவாகவே இருந்தார்கள்

மக்கள் உண்மயாகக் கடவுளைத் தேடுகிறார்கள்; அவர்களாகக் கடவுளைக் கண்டடைய முடியாதபோது, மக்கள் தங்களை கடவுளிடம் இட்டுச் செல்ல குருக்களைத் தேடுகிறார்கள். 'குரு' என்பதன் அர்த்தம் மக்களை இருளில் இருந்து ஒளிக்குக் கூட்டிச் செல்பவர் என்பதே. ஒருவர் கிறித்துவை அறிந்து கொள்வதைப் பற்றிப் (கிறித்துவைப் பற்றி அறிந்து கொள்வதல்ல) பேசும் பொழுது, அது கிறித்துவுடனான ஆழ்ந்த தனித்த ஒரு உறவினைப் பற்றியது; அது கிறித்துவை தன் மீட்பராக (இரட்சகராக) ஏற்றுக் கொள்வதும், அன்பையும் மன்னிப்பையும் மைய்யமாகக் கொண்ட அவருடைய கோட்பாடுகளுக்கேற்ப வாழ்வது; இந்த வாழ்முறை கண்ணெதிரில் காணும் கிறித்தவ கொள்கைகள், வழிபாட்டுமுறைகள், அதற்கான கட்டிடங்கள் ஆகியவற்றோடு மிகச் சிறிய அளவிலே ஆன தொடர்புடையது. ஒரு கிறித்தவ ஆலயத்தை இடிப்பது என்பது துயரச் சம்பவம்; ஆயினும் அது கிறித்துவை காயப்படுத்தி விடுவது ஆகாது.

இன்னும், கிறித்துவை அறியாமலே ஒருவன் கிறித்தவனாய் இருக்க வாய்ப்புண்டு. அதே போல் ஒரு ஹிந்துவாய் இருந்து கொண்டு கிறித்துவை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. முடிவாக, யார் கிறித்துவின் வழியில் உண்மையாய் நடப்பவர்கள்? கிறித்துவை அறிந்து கொண்டு ஆனால் கிறித்தவர்கள் என அறியப்பட விரும்பாத ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உண்டு. ஏனெனில் இந்த பதத்தினால் ஏற்றப்படும் கூடுதல் சுமை,கடந்த கால வலிகள், கிறித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் இந்திய மக்களிடத்தில் சுமத்தப்பட்ட வேதனையும் வெட்கமுமானவைகள் எனப் பல காரணங்கள்.

உண்மையில், ஒருமுறை மதமாற்றத்திற்கு மகாத்மா காந்தியிடம் அழைப்பு விடுத்தபோது அவர் சொன்னார்," என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல ஹிந்துவாக இருப்பதே, நல்ல கிறித்தவனாக இருக்கிறேன் என்பதே. கிறித்துவையும் அவர் போதனைகளையும் நம்புவதற்க்கும் (விசுவசிப்பதற்கும்)உங்கள் கோட்பாடுகளில் நான் சேர வேண்டும் என்பது எனக்கு அவசியமில்லை.

" அநேக கிறித்தவர்கள் நற்செய்தியை எப்படி அறிவிக்கப்பட விரும்பினாரோ, அப்படி அறிவிக்கத் தவறி விட்டனர் என்பது தெளிவாயினும், கிறித்து தன்னுடைய தெய்வீக மகிமையையும் வலிமையையும் வெளிப்படுத்த கிறித்தவர்களை மட்டுமே சார்ந்தவராயில்லை. ஆன்மீகவாதிகள் கிறித்துவில் நம்பிக்கை கொள்ளவேண்டும்; அவர் அவர்களுக்காய் என்ன செய்தார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, கிறித்தவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்பதால் அல்ல.

இன்றைய இந்தியாவில் நிலவும் குழப்பமான சூழலில், கிறித்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், தங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புணர்வை, வன்முறையின் மூலமோ இன்னும் துன்புறுத்தலுக்கு தற்கையளிப்பதன் மூலமோ எதிர்கொள்ளப் போவதில்லை.ஆனால் அன்பின் செய்தியின் மூலம்,இந்த நற்செய்தியை(சுவிஷேசத்தை) ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வாக்குவதன் மூலம், கடந்த காலத்தில் செய்யப்பட்ட இழப்புகளை இல்லாமல் செய்வார்கள்.

அதே நேரத்தில்,இந்த நற்செய்திக்கு பதிலளிப்பது என்பது உண்மையைத் தேடுகின்ற ஹிந்துத்துவ தேடலுக்கு எதிரானதல்ல என்பதை ஒவ்வொரு ஹிந்துவும் உணர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால் நிறை உண்மையை பழமையான வேத காலத்திலிருந்தே தேடுபவர்களுக்கு, இயேசுவே கடவுள் நிலையின் முழுமையாயிருக்கிறார்.

அஸதோமா ஸாத் காம்யா (உண்மையற்றதிலிருந்து நிறை உண்மைக்கு என்னைக் கொண்டு செல்) இயேசு சொல்கிறார்: "நானே வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறேன்

" தமஸோமா ஜோதிர் காம்யா ( இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்லும்) இயேசு சொல்கிறார்: " நானே உலகின் ஒளி. என்னைப் பின்செல்பவன், ஒருபோதும் இருளில் நடவான். மாறாக வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பான்

" மிர்த்யோர்மா அமிர்தம் காம்யா ( இறப்பிலிருந்து இறவாமைக்கு என்னை இட்டுச் செல்லும்) இயேசு சொல்கிறார்: " நானே உயிர்ப்பும் வாழ்வுமாயிருக்கிறேன். என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான். என்னில் நம்பிக்கை கொண்டு, என்னுள் வாழ்பவன் ஒருபோதும் இறக்கமாட்டான்."


tamil source : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=25726#25726



Every Christian in India is a 'Hindu'

By Ingrid Albuquerque
Spiritual people need to believe in Christ and accept Him for what He has done for them and not on what Christians do or do not do...


All this unnecessary furore over burning churches, buildings and bridges! It really is a battle of semantics because when you get down to it, neither Hinduism nor Christianity are religions — both are lifestyles.

The word Hindu comes from Sindu, which is the name for the River Indus. All those living east of the River Sindu were called Hindus. So the word Hindu is a geographical term, not a religious one. The actual religion of the Hindus is the Sanathana Dharma, which means 'the ancient way of life' — a combination of faith, duties and one's vocation. Hindus are required to find their purpose in life and pursue it forever. So in the strict sense of the term, as long as one lives in India and follows any religion of one's choice, one is still a Hindu.

People genuinely search for god, and when they cannot find god, they seek after gurus who will lead them to god. The word guru refers to a person who brings people from darkness to light. When a person talks about "knowing Christ" (not knowing about Christ), it is a deep and personal relationship with Jesus Christ, accepting Him as Saviour and living life according to His principles, which centre around love and forgiveness. The process has little in common with evident Christianity with its buildings, rites and rituals. To burn a church is a tragic act, however, it does not injure Christ.

Further, it is possible to be a Christian and not know Christ; it is equally possible to be a Hindu and know Christ. Ultimately, who is the true follower of Christ — the Hindu or the Christian? There are thousands of Indians who know Christ but do no want to be known as Christians because of the 'excess baggage' that accompanies the term, the pain of the past and the indignities that were imposed on human beings in India by people who called themselves Christian.

In fact, Mahatma Gandhi, when once asked to convert to Christianity, said, "To me, to be a good Hindu also means that I am a good Christian. There is no need for me to join your creed to be a believer in the beauty and teachings of Christ."

And yet, while it is apparent that most Christians have failed to deliver the gospel message as god intended them to, Christ does not depend on Christians to manifest His divine glory and power. Spiritual people need to believe in Christ and accept Him for what He has done for them and not on what Christians do or do not do.

The genuine follower of Christ in today's turbulent times in India will not meet the hostility through aggression or through a martyr complex, but will try to undo the damage of the past by living and manifesting the message of the gospel, which when translated into everyday life, is the message of love.

Meanwhile, every Hindu can also realise that responding to the gospel is not a contradiction to the Hindu search for truth because Jesus is the fulfilment of god, of seekers of the Truth right from ancient Vedic times:

Asatoma sat gamaya (Bring me from the unreal to the truth). Jesus says, "I am the way and the truth and the life";

Tamasoma jyotir gamaya (Bring me from darkness to light). Jesus says, "I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life";

Mrityorma amritam gamaya (Bring me from mortality to immortality). Jesus says, "I am the resurrection and the life. He who believes in me will live, even though he dies; and whoever lives and believes in me will never die."

http://www.deccanherald.com/Content/Sep192008/panorama2008091890745.asp

StumbleUpon.com Read more...

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாலினச் சிக்கல்களும்

>> Tuesday, October 28, 2008


இந்து ராஷ்டிரத்தை அடையப் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரங்கள், ஏன் ஆண்களை மட்டுமே கொண்ட அமைப்புகளாக உள்ளன என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ் போன்ற சில பேர்களை நாம் அறிவோம், அண்மையில் விஜய ராஜே சிந்தியா, சாத்வி ரீதம்பரா போன்ற சில பெயர்களை கேள்விப்படுகிறோம். இவர்களில் எவராலும் இந்துத்துவ கொள்கைகளை உருவாக்கும் இதயமான ஆர்.எஸ்.எஸ். பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியவில்லை. இவை குறித்து ஆர்.எஸ்.எஸ். இன் தலைமை சர்வாதிகாரி சுதர்சன் உரையை அண்மையில் கேட்க முடிந்தது.

மார்ச் 31, 2005 அன்று 'ராஷ்டிர சேவிக்கா சமிதி'யின் நிறுவன உறுப்பினர் லட்சுமிபாய் கேல்கர் குறித்த குறுந்தகடை வெளியிட்டு சுதர்சன் உரையாற்றினார்: ஆர்.எஸ்.எஸ்.இல் பெண்களை இணைத்துக் கொள்ள இயலாது. ஏனெனில் இந்திய சமூகம் அதனை அனுமதிப்பதில்லை. ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றினால், அது சமூகத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். எந்த இந்திய சமூகம் குறித்து சுதர்சன் பேசுகிறார் என்று நமக்குப் புரியவில்லை. நாடெங்கிலும் இரு பாலரும் இணைந்து படிக்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. பெண்கள் பணிபுரியாத வேலைத்தளமே இல்லை எனலாம். என்ன விளைவை இவர் கண்டுவிட்டார் என்று புரியவில்லை. பெண்களை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்காதது ஏதோ சிறு விஷயமல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தந்தை வழி விழுமியங்களைக் கொண்டது.

1936 இல் லட்சுமிபாய் கேல்கர், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவரிடம் சென்று தன்னை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்கும்படி கேட்டுள்ளார். கம்பை கையில் ஏந்தி பெண்களுக்கான சுய பாதுகாப்பை கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். பெரும் குழப்பத்தில் சிக்கிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தனது கொள்கைகளுக்கு இது ஒவ்வாது என முடிவெடுத்தது. உடனே லட்சுமிபாயை அழைத்து ராஷ்டிர சேவிக்கா சமிதியை தொடங்கும்படி கூறியது. ஆர்.எஸ்.எஸ். அய் பொறுத்தவரை அதன் உண்மையான நெருக்கடி எதுவெனில், அதன் தலைவர்களாக இருப்பவர்கள் பிரம்மச்சாரிகளாக சபதம் ஏற்க வேண்டும். அப்படி பிரம்மச்சாரிகள் இருக்கும் இடத்தில் எப்படி பெண்களை அனுமதிப்பது? இந்த விளைவு குறித்து தான் ஹெட்கேவர் முதல் சுதர்சன் வரை பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.இன் தத்துவம் ஆண் சிந்தனை மரபை மய்யமாகக் கொண்டது. அது பாலினப் படிநிலையை -ஆணாதிக்கத்தையே கோருகிறது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ இயக்கத்தை கட்டுப்படுத்துகிற அமைப்பு என்கிற பொழுது, அதில் ஆண்கள் மட்டும் தான் இருக்க இயலும். அந்த அமைப்பின் பெயர்களைப் பார்த்தாலே இது தெரியும். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ராஷ்டிர சேவிகா சமிதி. இரண்டாவதாக வரும் அமைப்பின் பெயரில் 'ஸ்வயம்' (சுயம்) காணாமல் போகிறது. ஏனெனில் பெண்களுக்கு சுயம் என்பது கிடையாது. அவர்கள் ஆண்களின் அடிமைகளே என்கிற இந்து மதக் கோட்பாடு தான் இங்கு முன்னுரிமை பெறுகிறது.

தேசிய இயக்கங்களில் பெண்கள் பல தளங்களிலும் ஆண்களுக்கு இணையான செயல்பாடுகளில் மிளிர்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம் லீக், இந்து மகாசபையில் பெண்கள் அனுமதிக்கப்படõதது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மனுஸ்மிருதியை எரிக்கும்பொழுது அம்பேத்கர் கூட, சூத்திரர்கள், பெண்கள் அடிமையாக இருப்பதை வேரறுக்க வேண்டும் என முழங்கினார். மறுபுறம் மனுவின் சட்டங்களை, மனுஸ்மிருதியை இந்துத்துவ அறிவுஜீவிகள் புகழாரம் பாடினார்கள்.பெண்களின் சமத்துவம் நோக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அதில், "மேற்கத்திய தாக்கத்தால் பெண்கள் சரிசமமான உரிமை, பொருளாதாரச் சுதந்திரம் என போராடத் தொடங்கியுள்ளனர். இது பெரும் ஆபத்து, அன்பு, தியாகம், தொண்டு ஆகியவைக்கு உட்படாமல் பெண்கள் விலகிச் செல்ல நேரிடும். பெண்களின் சுதந்திரம் குடும்பத்தை சிதைத்துவிடும். குடும்பம் தான் நல்லொழுக்கத்தை போதிப்பதற்கான அடிப்படை அமைப்பு '' (இந்து தேசத்தில் பாலினம், பவுலா பசேத்தா, பக்.8) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தான் சங்பரிவாரங்கள் விதவிதமான மொழிகளில் பேசி வருகிறார்கள். குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிப்பது என்றால், குழந்தைகளுக்கு பார்ப்பனிய விழுமியங்களை கற்றுத்தருவது என்று பொருள். 'சங்'கின் வேறு சில துணை அமைப்புகளில் பெண்கள் இணைக்கப்பட்டார்கள். பா.ஜ.க., மகிளா மோர்ச்சா, துர்கா வாகினி அதில் முதன்மையானவை. ஆனாலும் இவர்களின் கருத்தாக்கத்தின் முகமூடிகள் பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றன.

ரூப் கன்வர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 'சதி'யை தடை செய்ய சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. அந்த நேரம் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா நாடாளுமன்றம் நோக்கி கண்டனப் பேரணியை நடத்தினார். அவர், உடன்கட்டை ஏறுவது இந்து மதத்தின், இந்து மரபின் பெருமை. கணவருடன் உடன் கட்டை ஏற பெண்களுக்கு உரிமையுள்ளது என்றார். இங்கு நமக்கு எழும் முக்கியக் கேள்வி: தனது கணவர் இறந்தபோது விஜயராஜே சிந்தியா ஏன் உடன்கட்டை ஏறவில்லை?

அதே போல் பா.ஜ.க.வின் மகிளா மோர்ச்சாவின் தலைவி மிருதுளா சின்ஹாவின் பேட்டியும் இதே சிந்தனைத் தளத்தில் வெளிவந்தது. (குச்திதிதூ, ஏப்ரல் 1994). அதில் அவர் வரதட்சணையை ஆதரிக்கிறார், பெண்களை கணவர்கள் அடிப்பது சரி என்கிறார். மிகவும் அவசியமான இக்கட்டான பொருளாதாரத் தேவை ஏற்படாதவரை, பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என பேசிக்கொண்டே செல்கிறார். பெண்கள் சம உரிமை கோருவது முட்டாள்தனமானது என முடித்தார் பேட்டியை.

பெண்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாட்டுக்கும் தாலிபான், இஸ்லாமிய அமைப்புகளின் நிலைப்பாடுகளுக்கும் வேறுபாடுகள் கிடையாது. மறுபுறம் ஹிட்லரும் இதே குரலில் தான் பெண்கள் குறித்துப் பேசுகிறார். முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுமதிப்பதில்லை. அவர்களை கட்டுப்படுத்த ஷரியத் சட்டங்களை முன்வைக்கிறார்கள். 'பெண்கள் -தேவாலயம், குழந்தைகள், சமையல் அறையைத் தான் சுற்றி வர வேண்டும்; தாய்மையே மேன்மையானது' என்றார் ஹிட்லர்.

மிகத் தந்திரமான மொழிகளில் பெண்களைப் போற்றிக் கொண்டே ஆணாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் புகழ்ப்பெற்ற பிரச்சாரகர்களின் அடிப்படை நோக்கம். இருப்பினும் பெண்களின் சமத்துவத்திற்கான இயக்கம், இந்துத்துவத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தி, அதை நிராகரித்தும் வருகின்றது.
 

StumbleUpon.com Read more...

மதப் போராட்டத்தின் பின்னணி என்ன?


Periyar_400 தோழர்களே! இன்று இந்தப் பரந்த இந்திய கண்டத்தில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் -அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும் கூட பல தரப்பட்ட குறிப்பாக, இந்து -முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும் படியாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல் தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் நாட்டில் இந்து -முஸ்லிம் கலகம் அதிகமில்லையானாலும் இப்போது நன்றாய் விதை ஊன்றப்படுகிறது. பழைய காலத்தைப் போலவே, ஆரியர் -திராவிடர் போராட்டம் வெகு நாட்களாக நடந்து கொண்டு இருக்கின்றது. இவை யாவும் இதுவரை அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போரிட்டு வந்தாலும் -இன்று பச்சையாய் ஜாதி மதப் போராட்டம் தான், இதுவரை நடந்துவந்த அரசியல் போராட்டம் என்பதாக ஆகிவிட்டது.

கிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் 'ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன. ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்காலக் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் -பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்து கொண்டு நடைமுறையிலும், அது போலவே பல கடவுள்களையும் அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்து கொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி -ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.

இந்த நிலை இஸ்லாம், கிறித்துவம் அல்லாத இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையில் உள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும் மனிதத்தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் -எந்த மனிதனும் தன்மதத்தைத் தானே இகழவும், வேறு மதத்தை சாடவும் நினைத்துத்தான் தீருவான். ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டு மிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் தான் -பெரிதும் இன்று மதப் போராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.
ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் -ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு, 'எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்' என்போம்.

இந்து ஆட்சி ஏற்பட்டு விட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே -நமது சூத்திரத் தன்மையும், பஞ்சமர், கடைசாதித் தன்மையும் மாறிவிடப் போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றம் அடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள்? எதில் கெட்டுப் போய்விட்டார்கள்? ஆகவே, ஓர் இந்து வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால், கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.

-1946இல் சென்னையில் திப்பு சுல்தான் நினைவு நாளில் பங்கேற்று பெரியார் ஆற்றிய உரை, 'குடி அரசு' -16.11.1946

StumbleUpon.com Read more...

மதக் கலவரங்கள்


நுட்பமான மதவாத அரசியலின் மேலோட்டமான வெளிப்பாடுகள் தான் மதக் கலவரங்கள். அது மற்ற சமூகங்களை வெறுப்பின் சின்னங்களாக சித்தரித்து வன்முறையை தொடுக்கிறது. மத நடைமுறைகளின் வேற்றுமைகளை ஒப்பிட்டு, அதனை வன்முறையின் தொடக்கப் புள்ளியாக மதவாதிகள் உருமாற்றுகிறார்கள். இந்த அடிப்படையில் தான் தெருக்களில் வன்மம் பாய்ந்து ஓடுகிறது. மக்கள் மனங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மனசாட்சிகள், இந்த கலவரங்களை தக்கவைக்க உதவுகிறது. மத அடிப்படையிலான பல குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதனை அரசியல் மற்றும் கலவரங்களுக்குப் பயன்படுத்துவதும் இங்கு திட்டமிட்டு நடத்தப்படும் விஷமத்தனமே.

குழு அடையாளம்

மிகப்பரவலாக மக்களிடையே பரவியுள்ள இந்த குழு அடையாளம், பிற சமூகங்கள் பற்றிய ஒற்றை சித்திரத்தையே அளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம், கிறித்துவர்கள், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள், இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள் என அனைவர் குறித்தும் சீரான வெறுப்பின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டம், அண்மையில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. வட்டார வாரியாக மிக நுணுக்கமான அளவில் சமூக எந்திரங்கள், சமூக மனம், சமூக வரலாறு, சமூக பாங்குகள் என பலவற்றின் ஊடே அது இயங்குகிறது. இதன் இயக்கத்தை விவரிப்பது மிகவும் சிக்கலானது.

இந்தியாவில் நடைபெறும் மதக்கலவரங்கள்

இந்திய சமூகத்தின் மீது ஆறா ரணமாக மதக்கலவரங்கள் பதிந்துள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டிப் போட்டு பல முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலேய காவல் துறை வந்து தான் சமரசம் செய்து அமைதியை நிலைநாட்டும். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்த கலவரங்களின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. இப்பொழுது கலவரங்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே இறந்து போகிறார்கள். முஸ்லிம்ளின் சொத்துக்கள் தான் அதிகளவில் சூறையாடப்படுகின்றன. காவல்துறை எப்பொழுதுமே பெரும்பான்மையினரின் சார்பாகவே இயங்குகிறது. முதலில் ஏழை முஸ்லிம்கள் மட்டுமே தாக்கப்பட்டனர். ஆனால் அண்மைக்காலமாக நடுத்தர, மேட்டுக்குடி முஸ்லிம்களின் மீதும் தாக்குதல் நடைபெறுகின்றது.

பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற கலவரங்களுக்குப் பின் பெரும் அமைதி 50 களிலிருந்து இங்கு நிலவியது. ஆனால் அந்த அமைதியை 1962, 1964இல் நடந்த ஜபல்பூர் கலவரங்கள் கலைத்தன. அதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர், ரூர்கேலாவில் கலவரங்கள் நடந்தது. 60 களில் நடந்த ரத்தக் களரிகளில், ராஞ்சி -பீகார் (1962) அகமதாபாத் -குஜராத் (1969) தான் மிகப்பெரும் சம்பவங்கள். 70களிலும் கலவரங்கள் தொடர்ந்தன. 1976இல் காவல் துறையின் தூண்டுதலின் பெயரில் துர்கமான் கேட் படுகொலைகள் நடந்தன. மொராதாபாத் (1980), நெல்லி, நவாகாவ்ன் -(அசாம்(1983), பிவாண்டி (1984) மற்றும் மீரட் (1987) ஆகிய கலவரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின.

ராம ஜென்மபூமி பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியில், 1989இல் மட்டும் 1000 பேர் கொல்லப்பட்டனர். ஏற்கனவே 1980களில் நடந்த பகல்பூர், அய்தராபாத், அலிகார் கலவரங்கள் தான் உச்சமாகக் கருதப்பட்டன. ஆனால் அத்வானியின் ரதயாத்திரை மற்றும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய கலவரங்கள் தான் நாடு சந்தித்திராத அவலங்கள். மசூதி இடிப்புக்குப் பின் மும்பை, சூரத், போபால் நகரங்கள் கலவர பூமிகளாக மாறின. 1960 -1995 வரை கலவரங்கள் ஏறுமுகம் கண்டன. உத்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கலவரங்கள் நடந்தன. இதுவரை நகரங்களில் மட்டுமே நடைபெற்ற கலவரங்கள் மெல்ல சிறு நகரங்கள், கிராமங்கள் நோக்கியும் இடம் பெயர்ந்தன.

கலவரத்துக்கு முந்தைய கும்பல் மனநிலை

மதவாத சமூக வெளியில் தான் கும்பல் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. இந்த இழிவில் தீவிரத்துடன் முதலில் ஈடுபடுவது இந்து மதவாதிகளே. அதனை முஸ்லிம் மதவாதிகள் தொடர்வார்கள். எதிரிகள் நம்மை எந்த நேரமும் தாக்கக்கூடும் என்கிற அச்ச உணர்வை விதைப்பது, அதன் பிறகு வன்முறை மனநிலையை கும்பலில் கட்டமைப்பது என்பதுதான் நடைமுறை. நம் கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன என மதவாதிகள் அடிக்கடி வதந்திகளை பரப்புகின்றனர்.

எப்பொழுதுமே பெரும்பான்மை சமூகத்துக்குப் பல விதங்களிலும் அரசும், காவல் துறையும் பக்கபலமாக செயல்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் காவல் துறையும் இணைந்து வன்முறையில் ஈடுபடுகிறது. மதப்பகைமையை, மதவாத ஊடகங்கள்தான் -பெரும் படுகொலைகள் அளவுக்கு இட்டுச் செல்கின்றன. அரசு எந்திரங்களில் இந்துத்துவ உறுப்பினர்கள் ஊடுறுவியுள்ளதால், அவர்களின் நிலை பலம் கொண்டதாக உள்ளது.
கும்பல் வன்முறை மனநிலையை தகவமைப்பதில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள், எழுத்துக்கள் பெரும் பங்காற்றுகின்றன. இங்கிருந்து கிளம்பும் வதந்திகள் கும்பல் மனநிலையின் உந்து விசையாக மாறுகிறது.

பசுக்கள் வெட்டப்படுகின்றன, இந்து பெண்களின் மார்பு அறுக்கப்பட்டது, கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் திட்டமிடப்படுகிறது, பாலில் விஷம் கலக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடற்கரையில் ஆயுதங்களுடன் தரை இறங்கியுள்ளனர் என்பது சில பொது வதந்திகள். முதலில் ஊர்வலங்கள், கீழான முழக்கங்கள், மசூதி முன்பு பாடல்கள், தாக்குதல்கள், பெண் சீண்டல்கள் என நிகழ்வுகள் தொடங்கும். அண்மைக் காலமாக சர்வதேச தீவிரவாதத்துடன் உள்ளூர் முஸ்லிம்களை தொடர்புபடுத்துவதும் நடைபெற்று வருகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில தனி நபர்களின் குற்றச் செயல்பாட்டின் தன்மை, அச்சமூகத்தின் தன்மையாக மாற்றப்படுகிறது.

கலவரங்களை யார் தொடங்குகிறார்கள்?

யார் கலவரங்களை தொடங்குகிறார்கள் என்பதை அய்ந்து விசாரணைக் குழுக்களின் தகவல்களின் அடிப்படையில், தனது கட்டுரையில் விளக்குகிறார் தீஸ்தா செடல்வாட் :

1) அகமதாபாத் 1969 : "ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஜன்சங்காரர்கள் இந்த கலவரத்தைத் தொடங்கினார்கள் என்கிற உண்மையை கமிஷன் அறிக்கையில் இடம்பெறாமல் மூடிமறைக்க, பல வெளிப்படையான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்'' (நீதிபதி ஜக்மோகன் ரெட்டி அறிக்கையிலிருந்து).

2) பீவாண்டி, ஜல்காவ்ன் 1970 : தனது உயர் அதிகாரிக்கு அளித்த அறிக்கையில் "தானே' மாவட்ட காவல் துறை எஸ்.பி. இவ்வாறு கூறுகிறார் : "ஆர்.எஸ்.எஸ். இந்து விஷமிகளில் ஒரு பகுதியினர் தான் சில சேட்டைகளின் மூலம் பதற்றத்தை தூண்டினார்கள். சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் ஊர்வலத்தில் பங்கு பெற்ற அவர்களது நோக்கம், அத்தகையதாக இல்லை. தங்களின் வெறியை வெளிப்படுத்த முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவது போல் அவர்களது செயல்கள் இருந்தன. அவதூறான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மோதி மசூதி, பங்காட் கலீ ஹைதர் மசூதி என பல இடங்களில் அவர்கள் கல் எறிந்தார்கள். காவல் துறையும் அமைதியாக சென்றது'' (நீதிபதி டி.பி.மடோன் கமிஷன் அறிக்கை).

3) தெல்லிச்சேரி (கேரளா) 1971 : தெல்லிச்சேரியில் இந்துக்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அங்கு ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் ஆகிய அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு தான் தெல்லிச் சேரியின் சூழல் மாறியது. தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை இவர்கள் பிரச்சாரம் செய்ததின் விளைவாக, முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த மதவாத அமைப்புகளை நடத்தத் தொடங்கினர். முஸ்லிம் லீக் களம் கண்டது..... இந்த மதவாத பதற்றங்கள் தான் அங்கு நடந்த கலவரத்தின் பின்னணியாக அமைந்தது' (நீதிபதி ஜோசப் விதையலில் கமிஷன் அறிக்கையிலிருந்து).

4) ஜெம்ஷெட்பூர் 1979 : அங்கு நடைபெறவிருந்த தேர்தலுக்கு முன்பு உளவுத் துறை மதவாத பதற்றம் குறித்து தயாரித்த அறிக்கையில், அந்தப் பகுதியில் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.இன் வட்டார மாநாடு குறித்து சிறப்பு கவனத்துடன் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் இன் "சர்சங்சலக்' கலந்து கொண்டார் (மார்ச் 31, ஏப்ரல் 1, 1979). ஊர்வலத்தின் பாதை குறித்த சர்ச்சை தொடர்ந்தது. சம்யுக்த பஜ்ரங் பலி அகாரா சமிதியின் உறுப்பினர்களாக தங்களை கூறிக்கொண்ட சில நபர்கள், மதவாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை அங்கு விநியோகித்தனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்கள்; அதிகாரிகள் ஊர்வலப்பாதைக்கு அனுமதி மறுத்த போது அதனை மீறப் போவதாக அவர்கள் மிரட்டினார்கள்.

5) கன்னியாகுமரி கலவரம் (1982) : கிறித்துவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமக்கள் அல்லர் என பெரும்பான்மை சமூகத்திடம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்தது. கிறித்துவர்களின் மக்கள் தொகை ஏறுமுகத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. வாள், கோடரி போன்ற ஆயுதப் பயிற்சியை இந்து இளைஞர்களுக்கு வழங்குவது என இந்து மதவெறி இயக்கங்கள் அங்குள்ள சூழ்நிலையை சீர்குலைத்து, மதக்கலவரங்களை ஏற்படுத்தின (நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையிலிருந்து).

காவல் துறை அதிகாரியின் ஆய்வு

மதவாத கலவரங்கள் குறித்த ஆய்வினை தேசிய காவல்துறை அகாதமியின் ஆய்வாளர் வி.என்.ராய் மேற்கொண்டார். 1968 மற்றும் 1980 கலவரங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து, அந்த கலவரங்களை முஸ்லிம்கள் தொடங்கவில்லை என்கிற உண்மையை அவர் நிறுவினார். அதுவரை முஸ்லிம்கள் தான் தூண்டியதாகக் கருதப்பட்டது. அரசுப்புள்ளி விவரங்களின் படி, 3,949 சம்பவங்களில் 2,289 பேர் பலியானார்கள். அதில் 530 பேர் இந்துக்கள்; 1,598 பேர் முஸ்லிம்கள். இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 12 சதவிகிதம் தான் உள்ளனர். ஆனால் கலவரங்களில் 65 சதவிகிதம் முஸ்லிம்கள் பலியாகிறார்கள்.

காவல் துறை முற்றாக இந்துக்களுக்கு சாதகமான நிலை எடுத்து கலவர காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது. எப்பொழுதுமே மதக்கலவரத்தின் வேலைகள் நீண்ட காலமாக நடைபெறும். ஆனால் ஒரு சிறிய விஷயம் தான் கலவரத்தை தொடங்கி வைக்கும். பல சந்தர்ப்பங்களில் வியாபார, நிலத் தகராறுகளுக்கு கலவரங்களின் போது தீர்வு காணப்படும். அச்சமடைந்த சமூகம் தான் கலவரத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும். ராய் மேலும் கூறுகிறார் : "பல கலவரங்களில் எறியப்பட்ட முதல் கல்லின் விதத்தை ஆராய்ந்து பார்த்தால், அதை செய்தவர்கள் வெளியிலிருந்து பணியில் அமர்த்தப்பட்ட குழுக்கள் போலவே உள்ளது. இந்த சம்பவத்தை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி கிளப்பப்படுகிறது. வலுவற்றவனை பலசாலி ஒரு மூலையில் தள்ளும்போது, அவன் வேறு வழி இல்லாமல் கையை உயர்த்துகிறான். உடனே அதைப் பெரும் தாக்குதல் போல் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகள்

 

கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் -இந்தப் பெயர் நம் மனங்களில் தவறான காரணங்களுக்காகப் பதிந்துள்ளது. அவருடைய கணவரும், இரு மகன்களும் பத்தாண்டுகளுக்கு முன்பு தீயில் கருகி மடிந்தார்கள். இந்த சம்பவம் ஒரிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டம், மனோகர்பூரில் நடந்தது. ஒரிசாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டும்படி ஸ்டெயின்ஸ் அண்மையில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார். டிசம்பர் 24, 2007இல் நடந்த தொடர் தாக்குதல்களில் மட்டும் ஒரிசாவில் 40 தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் தான் கிளேடிஸ் ஸ்டெயின்ஸ் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் பலர் காயமடைந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பல கிராமத்தினர், அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த முறையும் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டியே நடந்தது.

ஒரிசாவை ஆளும் கூட்டணியில் பா.ஜ.க. முக்கியப் பங்கு வகிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.இன் துணை அமைப்புகளான வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பஜ்ரங் தளம் ஆகியவைதான் இதில் நேரடித் தொடர்புடையவை என்பதும் தற்செயலானது அல்ல. இது தொடர்பாக உண்மை அறியச் சென்ற 'குடிமக்கள் விசாரணைக் குழு' -அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

குறுகிய, நீண்ட கால நலன்களை மனதில் கொண்டு தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தாக்குதலும் தீவிர திட்டமிடுதலுடன் நடைபெறுகிறது. இந்த முறை சுவாமி லட்சுமானந்தாவை கிறித்துவர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த, நிறைய பக்தர்கள் கொண்ட ஒரு சாமியாரை எப்படி சிறுபான்மையினர் தாக்க முடியும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கிறித்துவ எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு, பொதுவாக கிறிஸ்துமஸ் திருநாளையே தேர்வு செய்கிறார்கள். பல நேரங்களில் இந்த காலத்தில் தான் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை புல்பாணி பகுதியில் சுவாமி, ஒரு வெளிப்படையான அறிவிப்பை செய்தார். பழங்குடியினர் வாழும் பகுதியில் கிறித்துவர்களின் இருப்பை எங்களால் சகிக்க இயலாது என்றார் அவர்.

1996 முதலே கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கியது. குஜராத் முதல் ஒரிசா வரையிலான பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் நகரங்களில் நடைபெறுவது போல அல்ல இது. அங்கு ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிவிடும். இங்கு ஆண்டு தோறும் பதற்றம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. தொடர் தாக்குதல்கள் சிதறலாக நடத்தப்படுகின்றன.
கிறித்துவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பெரும் அவலம், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாரா சிங், பழங்குடியிரை வைத்தே பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸை கொளுத்தியதுதான். அந்த பாதிரியார் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்ததே, இங்கிருக்கும் பழங்குடியினர் அனைவரையும் கிறித்துவர்களாக மாற்றத் தான் என்று தாராசிங் மற்றும் அவரது அமைப்பினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

அவர் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை மறைக்கவே அவர் தொழுநோயாளிகளுக்கு சிசிச்சை அளித்ததாகக் கூறப்பட்டது. அவரது மரணத்துக்குப் பிறகு அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, இது குறித்து விசாரிக்க வாத்வா கமிஷனை நியமித்தார். அந்தக் குழு மிகத் தெளிவாக ஆய்வு செய்து, பாதிரியார் எந்த மதமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அங்கு கிறித்துவர்களின் மக்கள் தொகையில் மாறுதல்கள் ஏதும் இல்லை எனக் கூறியது.

நாடு முழுவதிலும் கிறித்துவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கைகள் - 'கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல்' என்கிற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வன்முறை நிகழ்வுகள் பழங்குடியினர் பகுதியில்தான் நடந்துள்ளன. கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் தான் இவர்களின் இலக்கõக உள்ளனர். நகரங்களில் கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் பெரிதாக மதிக்கப்படுகிறார்கள், அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தொடர்ந்து பல பகுதிகளுக்குச் சென்று, 'இந்து மதத்திற்கு மீண்டும் மாற்றுவது' என்பது போன்ற திட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன.

'பழங்குடியினர் அனைவரும் இந்துக்களே. முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து தப்பவே அவர்கள் காடுகளில் சென்று தஞ்சம் புகுந்தனர்' என ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. காட்டுக்குச் சென்றதும் அவர்கள் இந்து மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளை மறந்து விட்டனர். அதனால் தான் அவர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். நாங்கள் அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றி, இந்து மதத்தின் பெருமையை காக்கப் போகிறோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒரிசா விஷயத்தை தனியாக 'இந்திய மக்கள் வழக்கு மன்றம்' விசாரித்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.உஷா தலைமை வகித்தார். அந்த மன்றம் வருங்கால ஆபத்துகளையும் சுட்டிக் காட்டியது. ஒரிசாவில் எவ்வாறு மதவாத அமைப்புகள் பரவியுள்ளன என்பது கணக்கிடப்பட்டது. அந்த அமைப்புகளின் பரவல் எப்படி சிறு, குறு வன்முறை சம்பவங்களால் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் கலவரங்களுக்கான முன் அறிவிப்பு போலவே தெரிகிறது. மாநில அரசுகள் இந்த சம்பவங்கள் அனைத்திலும் செயலற்றுக் கிடக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்ந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து சவாலாகவே திகழும்.
இந்த பழங்குடியினர் பகுதிகள் அனைத்திலும் சாமியார்கள் நிரந்தர ஆசிரமங்களை அமைத்துள்ளனர்: ஒரிசாவில் லட்சுமனாந்த், டாங்க்ஸில்

ஆசீமானந்தா, ஜபுவாவில் ஆசாராம் பாபு அவர்களில் சிலர். அங்கு இந்துக்களின் பெரும் அணி திரட்டல்களும் இடையறாது நடைபெற்றன. டாங்க்சில் நடைபெற்ற 'கும்பத்தில்' ஆயிரக்கணக்கான பழங்குடியினர் நாடெங்கிலுமிருந்து சங்பரிவாரால் கொண்டு வரப்பட்டனர். இந்த திருவிழாக்களுக்கு வராத பழங்குடியினர், கடும் நெருக்கடிகளை சந்திப்பார்கள் என வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த பகுதி தான் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகத் திகழ்கிறது. முதலில் முஸ்லிம், இரண்டாவது கிறித்துவர்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ்.இன் முழக்கத்தின்படி தான் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கிறித்துவர்களுக்கு எதிரான கலவரம், இந்து ராஷ்டிர கனவின் ஒரு பகுதியே. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மதமாற்ற நடவடிக்கையில் சில கிறித்துவ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் கிறித்துவம் இந்தியாவுக்குள் நுழைந்து 19 நூற்றாண்டுகள் ஆன பின்பும், அவர்களது மக்கள் தொகை 2.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல மிஷினரிகள் பழங்குடியினருக்கு கல்வி அளிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்வி பெற்ற பழங்குடியினர், தங்கள் உரிமைகளை அறிந்து விழிப்படைந்தவர்களாக இருப்பார்கள். இதனைத் தான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. மிகச் சிறுபான்மையினரான ஒரு சமூகம், பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்தை விளைவித்திடும் என்பது வேடிக்கையாக உள்ளது. இந்த மனித உரிமை மீறல்களை நாம் அழுத்தமான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க வேண்டும். இந்த அவதூறான வதந்திகள் பரவுவதைத் தடுத்து, கல்வி மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். திருவிழாக் காலமாகத் திகழ வேண்டிய கிறிஸ்துமஸ் திருநாட்களை, ஆர்.எஸ்.எஸ். வன்முறை சடங்காக உருமாற்றி வருகிறது.
 

StumbleUpon.com Read more...

பொய் சொல்லும் பாஜக‌

"குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பாஜகவில் இல்லை"
திகதி : Monday, 27 Oct 2008, [Sindhu]
lankasri.comமகாராஷ்டிர மாநிலம் மலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் தற்போது பாஜகவில் இல்லை என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் கூறினார்.இது தொடர்பாக பாரதிய ஜனசக்தி தலைவர் உமா பாரதி கூறியுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

பெண் சாமியார் பிரக்யா சிங்கை பாஜக கைவிட்டுவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.பாஜகவின் துணை அமைப்பான ஏபிவிபியிலிருந்து அவர் 1995-96-ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டார் என்று ரவிசங்கர் கூறினார்.

இருப்பினும்,குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை. குண்டு வெடிப்புக்கு அவர் காரணமாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவரது தந்தையே கூறியுள்ளார் என்றார் ரவிசங்கர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.மாலேகாவ் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.இதை பாஜக மறுத்தது.

ஆனால் பாஜகவில் இருந்து பிரிந்து பாரதிய ஜனசக்தி கட்சியைத் தொடங்கி உள்ள உமா பாரதியோ இதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரக்யா சிங் தன்னுடன் இணைந்து பாஜகவுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.அதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் தற்போது பதிலளித்துள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட "சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!

 

ஸப்ரன் ஹபீப்

(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)
மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதி களின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.


செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


ரமலான் மாதத்தில் ஈகைத் திரு நாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலே கானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியான வர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்த வர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தி யன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.


இதில் நேர்மையான வழக்கு விசா ரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக் கங்களின் சதி பின்னணி யில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு வது நாடறிந்த ஒன்று.


இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.


இந்த குண்டுவெடிப் பின் பின்னணி யில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய "ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்'' என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.


விசாரணையில் மேலும் பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.


உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.

(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)


நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.


நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 

StumbleUpon.com Read more...

இராக்கில் கார் குண்டு தாக்குதல்: 13 பேர் பலி, 21 பேர் காயம்

>> Sunday, October 26, 2008

lankasri.comஇராக் தலைநகர் பாக்தாதில் அமைச்சருடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

ஷியா வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் மஹ்மூத் முகமது அல்-ரதி மத்திய பாக்தாதில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரைக் குறிவைத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது காரில் நிரப்பிக் கொண்டு வந்த வெடிகுண்டுகளை தீவிரவாதி வெடிக்கச் செய்தார்.

இதில் அமைச்சர் காயமின்றித் தப்பினார். எனினும், அவரது பாதுகாவலர்கள் 3 பேரும், பொதுமக்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஓராண்டாக இராக்கில் வன்முறை குறைந்து வந்த நிலையில், தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224849904&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஆப்கானில் ,இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

ஆப்கானில் கடும் நிலநடுக்கம்
 
lankasri.comஆப்கானிஸ்தானின் வடகிழக்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 5.6என பதிவானதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மலைகள் சூழ்ந்துள்ள ஆப்கனில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 1,500பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

 
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
lankasri.comஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டேர் அளவுகோலில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

எனினும்,சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

StumbleUpon.com Read more...

ஒரிசா சம்பவம்;போலீசார் முன்னிலையில் என்னை கற்பழித்தனர்:கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்

 
 
lankasri.comஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 25ந்தேதி நடந்த கலவரத்தின்போது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார்.அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:-நான் திவ்யஜோதி சமூக சேவை மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தேன்.

சம்பவத்தன்று 50-க் கும் மேற்பட்டோர் எங்கள் அலுவலகத்துக்குள் புகுந்து என்னை இழுத்து சென்றனர்.

முதலில் எனது கழுத்தை பிடித்து கோடாரியால் தலையை வெட்டுவதற்கு முயன்றனர்.ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டனர்.எனது பாதி ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக அழைத்து சென்றனர்.ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்படி இழுத்து சென்ற அவர்கள் வழிநெடுக அடித்து உதைத்தனர்.

அப்போது அந்த பாதையில் ஏராளமான போலீசார் நின்றனர்.அவர்கள் என்னை பாதுகாக்க முயற்சிக்கவில்லை.நான் போலீசாரிடம் கெஞ்சினேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.என்னை இழுத்து சென்றவர்களிடம் போலீசார் நட்பாக பேசினார்கள்.பிறகு அவர்கள் என்னை கற்பழித்தனர்.போலீசார் நினைத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224933500&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

>> Saturday, October 25, 2008

 

இந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் அப்துல் ஹலீம் உரையாற்றும் போது "அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது" என்று வந்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஒரு மத அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.

மேலும் அவர் சிமி எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குஜராத் அரசு வழக்கறிஞரால் நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து ஹலீம் தலைமறைவாகி விட்டார் என்றும் போலீசு குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை தெகல்வாக வார ஏடு (9.08.08) புலன் விசாரனை செய்து வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் குடியிருக்கும் ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவர். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.

இந்த ஆண்டு மே மாதம் ஹலீமும் அவரது மதப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பிய போலீசு அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன?

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

அப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருமதத்தவர்களையும் அடக்கிய சமூக ஒற்றுமை அமைதிக்கான இயக்கம் என்ற அமைப்பு மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் ஹலீமின் பெயரும் இருந்தது. இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நீருபிக்க வேண்டுமென்பதில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது குழந்தைகள் மீது ஆணையாக அவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ஹலீமின் மனைவி நூர் ஷாபா.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயிற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி பெற ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதம் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த்தாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொரதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் அகதிகள் முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

குஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு மத அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார். கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போலிசோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது.

ஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமிய அப்பாவிகள், குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை தெகல்கா ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.

தொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி பயங்கரவாதியக இருக்கலாம் என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.

பயங்கரவாத்த்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலைச் சிறிதேனும் தரும். இல்லையென்றால் அதன் விளைவை எல்லோரும் சந்திக்கவேண்டும்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.

ஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமணானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்த இவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர். குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம், ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றனர். ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிரகாம் ஸ்டேன்ஸ் எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிட்டது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள் இந்துமதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.

குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.

இந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.

பயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாயமானைப் போல ஓடிக்கொண்டே இருக்கும்.

 

http://tinyurl.com/5a8zqr

நன்றி வினவு

StumbleUpon.com Read more...

வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க - மீண்டும் திருவாளர் மெனாங்கு

 

உங்களின் தொடர்ந்த ஆதரவினால் ஆறாம் முறையாக நம்மையெல்லாம் சிரிக்க வைக்க வருகிறார் திருவாளர் மெனாங்கு,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்குக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் " டுபாங்கு! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து திருவாளர் மெனாங்கு குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் டுபாங்கு அல்ல மெனாங்கு என்று.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்கு இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார்.

திருவாளர் மெனாங்கு கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை திருவாளர் மெனாங்கு, நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.

மெனாங்கிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் மெனாங்கிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார்.

திருவாளர் மெனாங்கு 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.

உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..

மெனாங்கு அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

வீட்டிற்க்கு வந்த உடன் திருவாளர் மெனாங்கு நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார்.

அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார்.

உடனே மெனாங்கு கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்குக்கு அவரது அம்மா எழதிய கடிதம் ,

அன்புள்ள மெனாங்குக்கு, நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.

நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார்.

புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த டுபாங்கு இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ரச மாற்ற வேண்டாம் பாரு..

இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல.

கிளைமேட் ரொம்ப மோசமில்லை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது.

நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன்.

சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெருமையாக எல்லோரிடமும் சொல்கிறார்.

முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல.

வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க நகர் ஒன்றில், திருவாளர் மெனாங்கு ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

மெனாங்கும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் திருவாளர் மெனாங்கின் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் , மெனாங்கிடம் 'குட் வ்னிங் சார்..

'திருவாளர் மெனாங்கு 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'.

போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

திருவாளர் மெனாங்கு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மெனாங்கின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மெனாங்கு,டுபாங்கு இரண்டு பெரும் நண்பர்கள் , இருவரும் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.

மெனாங்கு சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம்,

அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது.

போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".

'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் டுபாங்கு.

அதற்கு மெனாங்கு "என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".

டுபாங்கு தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது.

அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை.

அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை.

வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று

மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மெனாங்கு.

"வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை மெனாங்கும் நண்பர்களும் இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறி திருடனிடம் மாட்டிக் கொண்டனர்.

வழிபறி திருடன் தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.

பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கழட்டி கொடுத்து விட்டனர்.

ஆனால் மெனாங்கு மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார்.

கோபமான வழிபறி திருடன் ஊசியால் மெனாங்கின் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான்.

மெனாங்கு கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், மெனாங்கிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு மெனாங்கு சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாளர் மெனாங்கு புகைப்படம் எடுக்க ஒரு இடத்திற்கு சென்றிருந்தார் , அங்கு அவரை ஒரு பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்

"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"

என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஊரில் மெனாங்கு பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர்.

பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர்.

அதற்கு மெனாங்கு ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார்.

அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர்.

மெனாங்கு அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
நன்றி அறிவிழி
 
http://arivili.blogspot.com/2008/10/blog-post_4598.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP