சமீபத்திய பதிவுகள்

செல்போனில் திருமணம்!

>> Thursday, April 29, 2010

 http://blindgossip.com/wp-content/uploads/2009/12/man-cell-phone-225x300.jpg
பண்ருட்டி: பண்ருட்டியில் மணமகளுக்கும், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணமகனுக்கும் செல்போனிலேயே திங்கள்கிழமை திருமணம் நடந்தது.

பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மகன் முகமது யாசின் (21), அபுபக்கர் மகன் ஷாஜகான் (37).

ஷாஜகான் வீட்டில் குடியிருக்கும் அப்துல் அஜீஸ் மகள் நிலோபர் நிஷாவுக்கும், சுலைமான் மகன் முகமது யாசினுக்கும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு 12.6.2008ல் நிச்சயம் செய்யப்பட்டது. 23.6.2008-ல் திருமணம் நடத்த தேதி குறித்தனர்.

இதை அறிந்த ஷாஜகான், நிலாபர் நிஷாவை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் இருவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் கத்தியால் முகமது யாசினை குத்தினார்.

இதில் காயம் அடைந்த முகமது யாசின் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் 23.6.2008 அன்று பண்ருட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துவா ஓத, அதை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணமகன் முகமதுயாசின் செல்போன் மூலம் கேட்டவாறு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.




--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வீரம் விளைந்த குடும்பத்தில் சோகம்: வறுமையில் வாடும் கட்டபொம்மன் வாரிசு

 
 

Front page news and headlines today 

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில், வித்தியாசமாக தெரிந்தது ஒரு முகம். 'சினிமாவில் வரும் கதாநாயகனை விவரிக்க நினைக்கிறார்களோ' என, நினைக்க வேண்டாம். சமீபமாக பார்த்த போது, காதுகளையும், பாதி முகத்தையும் மறைக்கும் கம்பீர மீசை. சரித்திரத்தை நினைவு கூறச் செய்யும் முண்டாசு.


வீரப்பரம்பரையை சேர்ந்தவர் என்பதை யூகித்து பேசத் துவங்கும் வேளையில், தொலைக்காட்சியில் ஏதேச்சையாக பார்த்த 'வானம் பொழிகிறது; பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்ற வீர வசனத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.காட்சி முடிந்தவுடன் கண்களில் இருந்து எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்து, பூமியை நனைய விடாமல் தடுத்தார். சற்று நிதானித்த அவரின் முகத் தில் சோகம்; இருந்தும் வீரம் குறையவில்லை. நாம் சுதாரித்து விவரம் கேட்டபோது தான் தெரிந்தது, வீரபாண்டிய கட்டபொம்மனின் 5வது தலைமுறை என்று.தனியிடத்தில் அமர்ந்து, இவர் குடும்ப வீர வரலாற்றை விவரிக்க துவங்கினார். வீமராசா (எ) ஜெகவீரபாண்டிய சுப்ரமணிய கட்டபொம்ம துரை (70) என்பது தான் இவரது பெயர். கட்டபொம்மன் என்று உச்சரித்தாலே, இவரை மவுனம் தொற்றிக் கொள்கிறது. இயல்பு நிலைக்கு வந்தவர் தற்போதைய நிலையை விவரிக்கத் துவங்கினார்.


அவர் உதிர்த்தது: காலம் செல்லச் செல்ல, எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டது. எங்களின் சோகம் அறிந்த 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் அவர்கள் தினமலர் பத்திரிகையில் செய்தி வெளியிடச் செய்து, பண உதவியும் அளித்தது, மறக்க முடியாதது. 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த பின் தான், எங்களின் கஷ்ட ஜீவனம் பொதுமக்களுக்கு தெரிய துவங்கியது.கடந்த '67ம் ஆண்டு அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி வகித்த, தற்போதைய முதல்வர் கருணாநிதி, எங்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மாதம் 50 ரூபாய் வழங்கத் துவங்கினார். 71ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 5 பேருக்கு உதவித்தொகை கிடைக்கத் துவங்கியது. '97ம் ஆண்டு எனக்கும், வ.உ.சிதம்பரனார் பேரன், பாரதியார் பேரனுக்கும், தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், மூப்பனார் பேரவை சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.


'எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தியதால், பாஞ்சாலங்குறிஞ்சியில் எங்கள் உறவினர்கள் 202 பேருக்கு வீடு, 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. விவசாயம் மேற்கொள்ள நிலம் ஏற்றதாக இல்லாததால், பலர் வீடுகளை விற்று விட்டனர். எங்களின் வீடும் சிறிது, சிறிதாக பெயர்ந்து பாழடைந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.எங்களின் நிலை அறிந்த, பாஞ்சாலங்குறிஞ்சியில் வசித்து, யுத்த காலத்தில் மலேசியா சென்ற குடும்பத்தினரில் தற்போது வசிக்கும் பூபதி பிரம்மநாயக்கர் என்பவர், கை கொடுத்து வருகிறார். தமிழக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாயில் 'தொண்டை'யை நனைத்து வருகிறோம். மகன், மருமகனுக்கும் போதிய வருவாய் இல்லாததால், நடுத்தெருவுக்கு வந்து விடுவோமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்பம், நிர்கதியாக விடப்பட்டுள்ளது, மாநில அரசுக்கு தெரிந்தும், உதவிகளை அதிகரிக்க முன்வரவில்லை.


ஆண்டுதோறும் நடக்கும் சுதந்திர தின விழாவின் போது, சால்வை போர்த்தும் 'முதல் மரியாதை' மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது.தியாகிகளுக்கு தரப்படும் பென்ஷனை போன்று எங்களுக்கும் தர வேண்டும். கட்டபொம்மன் புகழை அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் கட்டபொம்மனுக்கு சிலை வைக்க வேண்டும்.இவ்வாறு, குரல் 'கம்ம' கூறி முடித்தார் வீமராசா. ஈரம் உள்ள இதயங்கள் இருக்கத் தான் செய்கிறது என்று நிரூபிக்க நினைத்தால், 97519-13832 என்ற எண்ணில், இவரை தொடர்பு கொள்ளுங்களேன்...!



source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

நாய்களுக்கான இரத்த வங்கி


 

 
நாய்களின் இரத்தம் சேமிக்கப்பட்டு வைக்கப்படும் இடம்
நாய்களின் இரத்தம் சேமிக்கப்பட்டு வைக்கப்படும் இடம்
ஆசியாவில் நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர். பி. தங்கராஜு தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.


துரித நகரமயமாதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தல் காரணமாக வீட்டு வளர்ப்பு விலங்குகள் விபத்தில் சிக்குதல் மற்றும் காயமடைதல் அதிகரித்துள்ளன.

ஆகவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அவற்றுக்கான இரத்த சேமிப்பு அவசியமாகிறது. அந்த வகையில் ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

நாயொன்றிடம் இருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது
நாயொன்றிடம் இருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது
வீதிகளைக் கடக்கும் போதும், அடுக்குமாடி வீடுகளில் இருந்து விழுவதன் மூலமும் நாய்கள் அடிக்கடி காயமடைகின்றன. ஆகவே அவற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கான போதிய இரத்தம் உடனடியாக கிடைக்காவிட்டால் அவை இறக்கும் வீதமும் அதிகரிக்கும் என்றும் டாக்டர். தங்கராஜு கூறுகிறார்.

ஒரு வயது முதல் 8 வயது வரையிலான மற்றும் சுமார் 20 கிலோ எடையுடைய நாய்கள் இங்கு இரத்ததானம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நாய்களில் 10 வீதம் விபத்துக்களால் காயமடைந்த நிலையிலேயே வருகின்றன.

 source:BBC

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP