சமீபத்திய பதிவுகள்

கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

>> Thursday, August 7, 2008

 

கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

ரோம், ஆக. 6: கிறிஸ்தவ மதம் சீனாவில் பரவுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டை போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதால், அங்குள்ள கத்தோலிக்கர்கள் வாடிகனுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என 1951-லேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறுபவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நிழ்ச்சி ஒன்றில் பேசிய போப்பாண்டவர், ஒரு பெரிய நாடு என்ற முறையில், ஏசு கிறிஸ்துவின் போதனைகள் பரவ சீனா அனுமதிக்க வேண்டும் என்றார். சீனாவுடன் உறவை மேம்படுத்துவது தமது இலக்குகளுள் முக்கியமானது என்றார் போப்பாண்டவர்.

 

 

http://satrumun.com/2008/08/06/கிறிஸ்தவ-மதத்துக்கு-சீனா/

StumbleUpon.com Read more...

பவுன் ரூ.8,944 ஆக குறைந்தது: தங்கம் விலை வீழ்ச்சியால் பெண்கள் மகிழ்ச்சி; நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது

பவுன் ரூ.8,944 ஆக குறைந்தது: தங்கம் விலை வீழ்ச்சியால் பெண்கள் மகிழ்ச்சி; நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது

சென்னை, ஆக. 7-

கடந்த மாதம் 16-ந்தேதி விலை உச்சத்துக்கு சென்று ஒரு பவுன் தங்கம் ரூ. 10 ஆயிரத்து 48-க்கு விற்றது. தற்போது ஒரு வாரமாக தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரு பவுனுக்கு ரூ. 208 குறைந்து விலை ரூ. 8920 ஆக இருந்தது.

இன்று தங்கம் விலை பவுன் ரூ.8944 ஆகவும், ஒரு கிராம் ரூ.1118 ஆகவும் உள்ளது.

விலை குறைந்து இருப்பதால் பெண்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. தி.நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

ஆவணி மாதம் அதிக அளவில் திருமணம் நடக்கும். ஏராளமான திருவிழாக்களும் நடப்பது உண்டு. எனவே நகை தேவைபடுபவர்கள் இப்போது விலை குறைந்து இருப்பதால் ஆர்வத்துடன் நகை வாங்கி செல்கிறார்கள்.

தங்கத்தில் பணத்தை முதலீடு செய்கிறவர்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள்.

தங்கம் விலை குறைந்து இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த மாதம் ஆவணியில் நிறைய திருமணங் கள் நடைபெறும். தற்போது தங்கம் விலை குறைந்திருப் பதால் திருமணத்துக்கு நகை வாங்க இதுதான் சரியான நேரம் என பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

புரசைவாக்கம் குழந்தை வேல் தெருவைச் சேர்ந்த லட்சுமி என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு நகை வாங்க தி.நகர் வந்திருந்தார்.

அவர் கூறியதாவது:-

நான் நகை வாங்க தி.நகருக்குத்தான் வருவேன். இங்குதான் நகை டிசைன், தரம் நன்றாக இருக்கும். தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றதால் நகை வாங்க தயக்கம் ஏற்பட்டது. எப்போது குறையும் என்று காத்திருந்தேன்.

இப்போது விலை குறைந்திருப்பதால் இதுதான் சரியான நேரம் என்று வந்திருக்கிறேன். ஆடி மாதம் என்றாலும் நகை வாங்குவது லாபம் என்பதால் எனக்கு பிடித்தமான நகைகளை வாங்கிச் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

அண்ணாசாலையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூறியதாவது:-

நான் திருப்பூரில் இருந்து மகளைப் பார்க்க சென்னை வந்தேன். இங்கு நகை விலை குறைந்திருப்பதாக கூறியதை யடுத்து நகை வாங்க வந்தேன். இன்னும் விலை குறைந்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

விலை உயர்வினால் தங்கம் வாங்க முடியுமா என்று பெண்கள் மத்தியில் நிலவிய அச்சம் தற்போது லேசாக விலகியது. இன்னும் குறைந்தால் பெண்கள் நகை வாங்க அதிக ஆர்வம் காட்டு வார்கள் என்றார்.

பம்மலைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரி தலவேந்திரன் மனைவியுடன் நகை வாங்க வந்தார். அவர் கூறுகையில், தங்கம் விலை குறைந்தது வரவேற்கத்தக்கது. மேலும் குறைந்தால் பெண்கள் இன்னும் மகிழ்ச்சி அடை வார்கள் என்றார்.

ஜெயச்சந்திரன் ஜ×வல்லர்ஸ் உரிமையாளர் சுந்தர் கூறியதாவது:-

தங்கம் விலை குறைந்து இருப்பதால் நகை வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலையும் குறைந்துள்ளதால் தங்கத் தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இது திருமண சீசன் இல்லை. அடுத்த மாதம்தான் திருமண முகூர்த்தங்கள் வருகிறது. 3 மாதமாக இல்லாத அளவுக்கு இப்போது விலை குறைந்து இருப்பதால் பெண்கள் நகை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய மார்க்கெட் பவுன் ரூ.8944 ஆக இருந்தாலும் எங்கள் கடையில் கிராமுக்கு ரூ.60 குறைத்து ரூ.8464-க்கு விற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன் தங்கம் மார்க் கெட்டில் முதலீடு செய் பவர்கள் திரும்ப பெறு வதாலும் கச்சா எண்ணை விலை குறைவு, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால்தான் தங்கம் விலை குறைந்து வருவ தாக வியாபாரிகள் தெரி வித்தனர்.

இதுபற்றி தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்க தலைமை ஆலோசகர் செய்யது அகமது கூறும்போது தங்கம் விலை வீழ்ச்சி தற்காலிகமானதுதான். விரைவில் விலை உயரலாம். அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தினால் உடனே விலை உயர்ந்து விடும். எனவே தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம்'' என்றார்.
 

StumbleUpon.com Read more...

சீனாவில் கோலாகலம்: ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்

சீனாவில் கோலாகலம்: ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்

பெய்ஜிங், ஆக. 7-

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2004-ம் ஆண்டுக்கான போட்டி கிரீஸ் தலைநகர் ஏதன்சில் நடந்தது.

2008-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (8-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.


ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பெய்ஜிங் நகரில் நாளை கோலாகலமாக நடக்கிறது. 2008 ஆகஸ்ட் 8-ந்தேதி (08.08.08) சீன நேரப்படி இரவு 8.08 மணிக்கு (இந்திய நேரம் மாலை 5.38) தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

200-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றன. அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகள் தொடக்க விழாவில் அணிவகுத்து வருவார்கள். கண்கவர் கலை நிகழ்ச்சி, வானவேடிக்கைகள் நடைபெறும். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்சு அதிபர் நிகோலஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் உள்பட 101 நாட்டு தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கனடா, ஜெர்மனி தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை.

திபெத்தியர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

17 நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

தொடக்க விழா நடைபெறும் பெய்ஜிங் தேசிய ஸ்டேடியம். 91 ஆயிரம் பேர் அமரலாம். தடகளம், கால்பந்து போட்டிகள் மற்றும் நிறைவிழா இங்குதான் நடக்கிறது. இந்த ஸ்டேடியம் பறவை கூடு என்று அழைக்கப்படுகிறது.

StumbleUpon.com Read more...

குண்டு வைக்க சதி திட்டம்: தவ்பீக்கை நாங்களே அடித்து கொல்வோம்; அண்ணன் ஆவேசம்

குண்டு வைக்க சதி திட்டம்: தவ்பீக்கை நாங்களே அடித்து கொல்வோம்; அண்ணன் ஆவேசம்

சென்னை, ஆக.7-

தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு சதி திட்டம் தீட்டிய தாக 3 தீவிரவாதிகள் பிடிபட்டு உள்ளனர். அவர் களிடம் நெல்லையில் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்து வரு கிறது.

சதி திட்டத்துக்கு மூளை யாக இருந்து செயல் பட்ட தவ்பீக் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டான். அவன் கேரளாவில் தலைமறை வாக இருப்பதாக வந்த தகவலையடுத்து தமிழக சிறப்பு போலீஸ் படை கேரளாவில் அவனை தேடி வருகிறது.

தீவிரவாதி தவ்பீக்கின் சொந்த ஊர் தஞ்சை மாவட் டம் அதிராம்பட்டினம். இங்கு சாதாரண குடும்பத்தில் பிறந்தான். 10- ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான். அதிராம் பட்டினம் மற்றும் அரியலூரில் நடந்த 2 கொலைகள் தொடர்பாக தவ்பீக் மீது வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண் டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுதலை யானான். இதற்காக மண்ணடியில் தங்கியிருந்த போதுதான் "இறைவன் ஒருவனே'' என்ற அமைப்பை தொடங்கினான்.

கடந்த சட்டசபை தேர்த லில் பட்டுக்கோட்டை தொகுதி யில் போட்டியிட்டு தோல்வி அடைந்தான். 5 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன.

உள்ளூர் பிரமுகர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மண்ணடிக்கு வந்து விட்டான். இங்கு குண்டு வைப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தேடி வருகிறார்கள்.

தவ்பீக்குக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அதிராம் பட்டினத்தில் வசிக்கிறார்கள். 3 சகோதரர்கள், 4 சகோதரிகள் உள்ளனர்.

தவ்பீக்கின் அண்ணன் சாதிக் அதிராம்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் தனது தம்பி பற்றி கூறியதா வது:-

3 மாதத்துக்கு முன்புதான் தவ்பீக்கை பார்த்தேன். அப்போது அவன் தன்னை போலீசார் உளவு சொல்ல பயன்படுத்துவதற்கு தேடுவ தாக கூறினான். அதன்பிறகு அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இப்போது அவன் தமிழ் நாட்டில் வெடிகுண்டு வைக்க சதிதிட்டம் திட்டியதாக சொல்வது உண்மையாக இருந்தால் நாங்களே அவனை அடித்துக் கொல்வோம்.

சிறுவயதில் அவன் கம்ïனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். அப்போது அவன் எலியைக் கூட கொல்ல நினைக்க மாட் டான்.

தவ்பீக் தொடங்கிய "இறைவன் ஒருவனே'' அமைப்பு மீது இஸ்லாமிய அமைப்பு களுக்கு உடன்பாடு இல்லை. அவன் மீது அதிருப்தி அடைந்தனர்.

போலீஸ் தேடுவதால் தவ்பீக்கின் மனைவி, குழந்தை கள் தவிக்கிறார்கள். தவ்பீக் கின் மனைவி தினமும் என்னிடம் வந்து தவ்பீக் எங்கே என்று பலமுறை கேட்டவாறு இருக்கிறார். ஆனால் தவ்பீக் இதுவரை எங்களிடம் தொடர்பு கொள்ள இல்லை.

இவ்வாறு சாதிக் கூறினார்.

தவ்பீக்கின் தந்தை சாகுல் அமீது உடல்நலம் குன்றிய நிலையில் சாதிக்குடன் வசிக்கிறார்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP