சமீபத்திய பதிவுகள்

கோடிக்கணக்கான மக்களை வென்றுவிட்ட விடுதலைப்புலிகள்

>> Monday, April 6, 2009

StumbleUpon.com Read more...

வீரச்சாவு அடைந்துள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள்

புதுக்குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலில் புலிகளின் சில முக்கிய தளபதிகள் முன் நின்று நடத்தியதால், இராணுவம் பேரிழப்பைச் சந்தித்ததாகவும், அத்தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இராணுவம் பேடித்தனமாக  எரி நச்சுவாயுக் குண்டுகள் கொண்டு விடுத்லைப்புலிகளை தாக்கியதால் புலிகளின் மிகமுக்கிய தளபதிகள் சிலர் வீரச்சாவடைந்திருப்பதாக அறியப்படுகிறது.


இலங்கை பாதுகாப்பு இணையம் சில விடுதலைப் புலிகளின் உடலங்களை புகைப்படமாக வெளியிட்டுள்ளது. அப்புகைப்படங்களில் அனைத்து உடலங்களிலும் எரிகாயங்கள் காணப்படுவதும், மற்றும் ரூபாவாகினி வெளியிட்டுள்ள காணொளியில் களத்தில் பல நிலைகள் எரிந்த வண்ணம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இருப்பினும், இலங்கை இராணுவம் புலிகளின் இழப்பை மிகைப்படுத்தி கூறிவருகிறது.

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பை பிடிக்க இந்தியா கொடுத்த நச்சு ஆயுதம்

இந்தியா கொடுத்த நச்சுவாயு புதுக்குடியிருப்பு மோதலில் சிறிலங்கா படையினர் பாவிக்கப்பட்டது அம்பலம்


விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.

இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை உயிரோடு பிடிக்கும் திட்டம்

மக்கள் பாதுகாப்பு வலயம்: இறுதிச் சமருக்கான களம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. இதுவரை புதுக்குடியிருப்பு நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வந்த சமர் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிப் பிரதேசத்தையும், கடந்த புதன்கிழமை அரசபடையினர் கைப்பற்றியதை அடுத்தே சண்டைக் களம் சற்று இடம் மாறத் தொடங்கியிருக்கிறது.

புதுக்குடியிருப்புச் சமர் மிக மோசமானதாகவும் படையினரால் விரைவாக முன்னேற முடியாததாகவும் இருந்து வந்தது. இதற்கு முன்னர் புலிகள் நடத்திய வழிமறிப்புச் சமர்கள் எல்லாவற்றையும் விட இது மூர்க்கம் நிறைந்ததாக இருந்தது.

காரணம், இது அவர்களின் கடைசிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைத் தக்க வைப்பதற்கான வாழ்வா சாவா என்ற நிலையிலானதொரு சமராகவே இருந்தமையாகும். இதனால் படையினர் இரணைப்பாலை, ஆனந்தபுரம் போன்ற புதுக்குடியிருப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற பலநாட்களாகத் தொடர்ந்து கடுமையாக சண்டையிட நேரிட்டது.

இந்தச் சமரில் புதுக்குடியிருப்பின் பெரும்பாலான வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மிகக் கோரமான ஷெல் தாக்குதல்கள் விமானத் தாக்குதல்களில் வீடுகள், கட்டடங்கள், மரங்கள் பெரும்பாலானவை நாசமாகிப் போக வெறும் சுடுகாடாகக் கிடந்த பிரதேசத்தையே படையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

போர் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்ட நிலையிலும், கடுமையாகப் போரிட்டு வந்த புலிகளை புதிய தந்திரோபாயத்தின் அடிப்படையில் மடக்குவதற்குப் படைத்தரப்பு கடந்தவாரம் முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை உயிரோடு பிடிக்கும் திட்டம் அது.

படைத்தரப்பு மிக இரகசியமாக இந்தத் தாக்குதல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதும் அவர்கள் தப்பிவிட்டனர். புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைக் களமுனையில் புலிகளின் அணிகளை வழிநடத்திக் கொண்டிருந்த புலிகளின் மூத்த தளபதி கேணல் பானுவையும், மற்றொரு தளபதி லோறன்ஸ் மற்றும் சிலரையும் பிடிப்பதே படைத்தரப்பின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP