சமீபத்திய பதிவுகள்

எய்தவன் தலைகொய்ய எழுந்து வாடா தமிழா! மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்புவோம்: யாழிலிருந்து சனீஸ்வரன்

>> Wednesday, December 2, 2009

 
எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும்.

இது தொடர்பாக சனீஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை:-

தமிழர்தம் போராட்டத்தை நசுக்கி, சின்னாபின்னமாக்கி வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிந்து விட்ட பூரிப்பில் சிங்களம் இன்று சொல்லொணா மகிழ்வில் திணறிக் கொண்டிருக்கின்றது.

தமிழன் போராட்ட சக்தியை அழித்துவிட்டோம் என்ற மமதையில் தேர்தல் மேல் தேர்தலாக வைத்து சிங்களம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

தமிழரின் உணர்வோடும் உயிரோடும் இணைந்துவிட்ட மாவீரர் நாளைக் கூட அனுஷ்டிக்க விடாது பேரினவாதம் பல்வேறுபட்ட அழுத்தங்களைப் பிரயோகித்து நிற்கின்றது.

தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் சிங்கள அரசின் கொடுங்கரங்கள் எங்கள் உணர்வுகளை அடக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். 

தாயகத்தில் மக்களெல்லாம் இருண்ட உலகில் இருட்டு அறையில் குருடனைப்போல் உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். 1990 களுக்குப் பின்னர் பிறந்த தற்போதைய இளைஞர்கள் விடுதலைப் புலிகள் பற்றியோ அவர்களது தியாகம் பற்றியோ அவர்களது வீரம் செறிந்த போராட்டம் பற்றியோ போராட்டத்தின் தேவை, அதன் கருப்பொருள் பற்றியோ அறிய முடியாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தமிழினத் துரோகிகளின் பின்னாலும் ஆக்கிரமிப்பு படைகளின் பின்னாலும் சென்று கலாசாரம் பண்பாட்டை மறந்து அவற்றை அழிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.

சிங்கள தேசம் தனது குடிமக்களாகிய தமிழர்களுக்கு வழங்கும் அற்ப சொற்ற சலுகைகள், வேலை வாய்ப்புக்கள், கடனுதவிகளைக்கூட துரோக அரசியல்வாதிகள் தாங்கள் ஏதோ அரசுடன் போராடிப் பெற்றுத் தருவது போல் பாசாங்கு காட்டுவதால் அதை நம்பும் இளஞ் சமூகம் அந்த துரோகிகளின் பாசறைகளை தேடிச் சென்று எமது வீரஞ்செறிந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் அவல நிலை தோன்றியுள்ளது.

சமூக ஆர்வலர்கள் இவ்விடயம் பற்றி சிந்திக்காவிட்டால் மாவீரர்களாகிய விடுதலைப் புலிகள் துரோகிகளாகவும் காட்டிக் கொடுப்போரான ஏனையோர் மகத்தானவர்களுமாக இளைஞர் மனதில் பதிய வைக்கப்படும். எதிரியின் பொலிஸ் வேலைக்கு இளஞ்சமூகம் சென்றது இதற்கு ஒரு அரிய உதாரணமாகும். 

தமிழினம் இன்று மௌனத்தில் புழுங்கிக் கொண்டிருக்கின்றது. நடந்து முடிந்தவற்றை ஜீரணிக்க முடியாது மனதுக்குள் புழுங்கிப் புழுங்கிச் செத்துக் கொண்டிருக்கின்றது. நடந்து கொண்டிருப்பது ஒரு கனவாக இருக்கக்கூடாதா? திடீரென தூக்கம் கலைந்து நடந்தது எல்லாம் கனவென உணர முடியாதா என்று தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. தங்கள் தலைவன் எங்கிருந்தாவது ஒரு குரலின் மூலம் நான் இருக்கிறேன் என்று கூறிவிடமாட்டானா தளபதிகளும் நலம் என்ற சொல் வந்து காதில் தேனாக பாயாதா என்று என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றது தன்மானத் தமிழினம்.

மே 19 கேட்ட செய்தியின் மூலம் இடியேறு கேட்ட நாகம் போல அதிர்ந்து போயிருக்கும் தமிழினத்தின் மீது தேர்தலாக நடாத்தி வெற்றிப் பெருமிதம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகிந்த அன்ட் கொம்பனி அரசு. அதற்கு ஒத்தூதிக் கொண்டிருக்கின்றது கருணா அன்ட் டக்ளஸ் கொம்பனி.

யாழ். மாநகர சபை, வவுனிய நகர சபை தேர்தல்களில் மக்களின் கையறு நிலையை வைத்து அரசியல் செய்து வென்றுவிடலாம் என்று கிணப்பு போட்ட அரசிற்கு ஓரளவாவது எமது மக்கள் பாடம் கற்பித்தது மகிழ்வுதான் ஆனாலும் மாநகரசபையை கைப்பற்றிவிட்டதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. வெறும் ஆயிரத்தி சொச்சம் வாக்குகளில் மேயர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

 புலிகளின் ஆசீர்வாதத்தில் உருவான கூட்டமைப்பு கணிசமான வாக்குகளை எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் பெற்றமை மக்கள் இன்னும் புலிகளின் பின்னால்தான் என்பதை பறை சாற்றும். பாக்குமிடமெல்லாம் வெற்றிலைக் கட்சிக்காரர்களின் சுவரொட்டிகளின் மத்தியில் எதுவித பிரசாரத்தையும் முன்னெடுக்காமல் கூட்டமைப்பு லாவகமாக வாக்குகளைப் பெற்றமை புலிகளின் தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருத வேண்டும்.

புத்தளத்து வாக்குகள் வரும் வரையில் யாழ் மாநகரசபையில்கூட கூட்டமைப்பே முன்னணியில் திகழ்ந்தது. இதையெல்லாம் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் மறந்துவிடக்கூடாது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக கட்சி தாவுதல் இனவாத அரசை ஆதரித்தல் என்றெல்லாம் சிந்தியாது தமிழன் வாழ்வியல் பற்றி, ஆயிரமாயிரமாய் இறந்த தமிழுறவுகள் பற்றி சிந்தித்து சரியான தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். 

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தால் செய்ய முடியாதவற்றை இனிவரும் காலங்களில் சரியான அரசியல் சாணக்கியத்தின் மூலம் செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.. மத்தியில் எவர் வந்தாலும் பரவாயில்லை என்று வாளாது இருப்பதில் அர்த்தமில்லை. மத்தியில் இருக்கும் கொடுங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிதயன் அவசியத்தை நான் இங்கு கூறத் தேவையில்லை. இந்த கைங்கரியத்தை செய்வதன் மூலம் பின்வரும் விடயங்களை கையாள முடியும். 

கொடுங்கோலன் மகிந்தனையும் சகோதரக் கொம்பனிகளையும் தோல்வியடையச் செய்வதன் மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்பி சட்டச்சிக்கல்களில் அவர்களை மாட்ட முடியும். அவர்களின் பதவிகள் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டதும் அவர்களுக்குரிய தண்டனையை அவர்களே பெற்றுக் கொள்வார்கள் 

கொடுங்கோலன் வீட்டுக்குச் செல்வதன் மூலம் எட்டப்பன் கருணாவும், காக்கை வன்னியன் டக்ளசும், ஏனைய உதிரி காட்டிக் கொடுக்கும் கும்பல்களும் தெருவுக்கு வர ஏதுவாகும். இவர்கள் தெருவுக்கு வந்தால் இவர்களுக்குரிய தண்டனையை சமூகம் பார்த்துக் கொள்ளும். 

எதிரி நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு வழி வகுத்தால் தமிழர் போராட்டம் கூர்மையடைய வாய்ப்புகள் கிட்டலாம். 

எதிரியானவன் இரண்டுபட்டால் கடைசி நேரச் சமரின் போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புகள் போரியல் குற்றங்கள் என்பன வெளிவந்து உரியவர்கள் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வாய்ப்பு உண்டாகும். 

எது எப்படியாயினும் தமிழர்களின் இன்றைய தெரிவு சரத் பொன்சேகாவாகவே இருக்க முடியும். கொன்றவனும் ஏவியவனும் பிரிந்து நிற்கின்றான் இதில் கொன்றவனை விட ஏவியனே கொடுமையானவன். "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்" என்று ஒரு தமிழ் பழமொழியும் இருக்கின்றது. எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனவெறி அரசும் ஊது குழல்களும் பலவித சலுகைகளை எதிர்வரும் காலங்களில் தமிழர்களுக்கு வைக்கலாம். அவற்றையெல்லாம் கண்டு மனம் மாறாது மனதில் வெறியேற்றி எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். 

"கூழுக்கு வழியின்றிப் போனோமென்றால் குலவீரம் கூடவா இல்லாது போகும்


source:tamilwin


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஓர்.எளிய கம்ப்யூட்டர் குவிஸ்


 
 


கம்ப்யூட்டருக்கு இப்போதுதான் சில வாரங்களுக்கு முன் அறிமுகமானவர் களுக்கான வினாடி வினா ஒன்று தர எண்ணினோம். இதோ அந்த கேள்விகள். வெகுநாட்களாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் இந்த தேர்வை எழுதிப் பார்க்கலாம்.



1. கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது அவுட்புட் சாதனம் இல்லை? (அவுட்புட் சாதனம் என்பது கம்ப்யூட்டரில் ப்ராசஸ் செய்யப்பட்ட பின்னர் முடிவுகளைத் தரும் ஓர் செயல்பாடாகும்)
அ. பிரிண்டர் 
ஆ. மானிட்டர்
இ. கீ போர்டு
ஈ.மோடம்



2.கீழே தரப்பட்டுள்ளவற்றில் எந்த சாதனம் இன்புட் மற்றும் அவுட்புட் சாதனமாக இயங்குகிறது? டேட்டாவினை கம்ப்யூட்ட ருக்குள் அனுப்பவும், பின் பெறவும் உதவும் சாதனம் எது?
அ. மோடம் 
ஆ. ஸ்கேனர்
இ.மவுஸ்
ஈ.மானிட்டர்



3.அனைத்து கம்ப்யூட்டர்களும் கீழ்க்குறிப்பிட் டவற்றுள் ஒன்றை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அது எது?
அ. வேர்ட் தொகுப்பு
ஆ.ஆப்பரேட்டிங் சிஸ்டம்
இ. பிரிண்டர் ஒன்று இணைப்பாக
ஈ. வைரஸ் செக்கிங் புரோகிராம்



4.கம்ப்யூட்டரின் மூளை என்று கீழ்க்குறிப்பிட்டவற்றுள் எதனைக் குறிப்பிடுகிறார்கள்?
அ.ராம் என அழைக்கப்படும் ரேண்டம் அக்செஸ் மெமரி
ஆ.சிபியு எனப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனில்
இ. ரீட் ஒன்லி மெமரி என அழைக்கப்படும் ரோம்
ஈ. பயாஸ்



5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, கீழே குறிப்பிட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புகளில் எந்த வகையினதாகக் குறிப்பிடுகின்றனர்?
அ.இன்டக்ரெய்டட் சாப்ட்வேர்
ஆ.சிடி ராம் சாப்ட்வேர் 
இ.அப்ளிகேஷன் சாப்ட்வேர் 
ஈ.சிஸ்டம் சாப்ட்வேர்



6.சாப்ட்வேர் என்பது
அ. ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம்
ஆ. இன்ஸ்டரக்ஷன்ஸ் அடங்கிய ஒரு செட்
இ. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே
ஈ. மேலே உள்ள அனைத்தும்



7. ஒரு எம்பி (MB)என்பது 
அ. ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் உள்ள ராம் மெமரி
ஆ. ஒரு கோடி பைட்ஸ்
இ. 1024 கேபி
ஈ.ஓராயிரம் பைட்ஸ்



8. ஒரு பிரிண்டரின் ரெசல்யூசன் கீழே குறிக்கப்பட்டுள்ள எதனால் அளவிடப்படுகிறது?
அ.மெகா பிட்ஸ்
ஆ.ஹெர்ட்ஸ்
இ.டாட்ஸ் பெர் இஞ்ச் (டிபிஐ)
ஈ.அங்குல அளவில்



9.கீழே கொடுத்தவற்றுள் எது மிகச் சரியானது?
விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்கள்
அ.மோட்டாரோலா நிறுவனத்தால் உருவாக்கப் பட்டவை
ஆ.இரண்டிலும் இன்டெல் சிப்கள் பயன் படுத்தப்படுகின்றன
இ. ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துகின்றன
ஈ.ஒன்றுக்கொன்று இணையானவை அல்ல.



10. ஒரு கம்ப்யூட்டர் போர்ட் கீழே குறிப்பிட்டுள் ளவற்றில் எதற்குப் பயன்படுகிறது?
அ. மற்ற கம்ப்யூட்டர் துணை சாதனங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு 
ஆ. இன்டர் நெட்டிலிருந்து பைல்களை டவுண் லோட் செய்திட
இ. அனைத்து ஹார்ட் டிரைவ்களுக்கும் கட்டளை களை எடுத்துச் செல்ல
ஈ.கம்ப்யூட்டர்களை ஒன்றாக இணைக்க



பதில்கள்:
1. இ. கீ போர்டு. இந்த சாதனம் வழியே நாம் டேட்டாவினை கம்ப்யூட்டருக்குள் அனுப்ப முடியும். இங்கு தரப்பட்டிருக்கும் மற்ற சாதனங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடு முடிந்தவுடன், தீர்வினைத் தரும். 
2. அ. மோடம். கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இந்த சாதனம் மட்டுமே டேட்டாவினை உள்ளீடு செய்து, தீர்வுகளைப் பெறவும் செய்கிறது. அனலாக் சிக்னல்களை அனுப்பி டிஜிட்டல் சிக்னல்களாகப் பெற்று தருகிறது. இன்னொரு வழியில் மாற்றாகவும் செயல்படுகிறது. மற்ற இங்கு தரப்பட்டிருக்கும் சாதனங்கள் இந்த இரண்டு செயல்பாட்டினையும் மேற்கொள்பவை அல்ல. 
3.ஆ. ஆப்பரேட்டிங் சிஸ்டம். இங்கு தரப்பட்டிருக்கும் மற்றவை இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்க முடியும். ஆனால் விண்டோஸ், லினக்ஸ், டாஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாமல் எந்த கம்ப்யூட்டரையும் இயக்க முடியாது.
4.ஆ. சிபியு என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட். இது இல்லையேல் எந்த வேலையும் நடக்காது. 
5 இ. சிஸ்டம் சாப்ட்வேர். ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது சிஸ்டம் சாப்ட்வேர் ஆகும். சிஸ்டம் இயங்க இதுதான் அடிப்படை இயக்கியாக இயங்குகிறது. இதன் உதவியுடன் நாம் நம் தேவைகளுக்குப் பயன்படுத்துவது அப்ளிகேஷன் சாப்ட்வேர்களாகும்.
6.ஈ. மேலே உள்ள அனைத்தும். சாப்ட்வேர் என்பது கம்ப்யூட்டரின் சிபியு எப்படி இயங்க வேண்டும் என்று சொல்லும் ஒரு செட் கட்டளைத் தொகுப்பு ஆகும். இதனையே எளிமையாகத் தொடக்க நிலையில் கம்ப்யூட்டர் புரோகிராம் என்று கூறுகிறோம். ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அடிப்படையில் ஒரு சாப்ட்வேர் தான்.
7. இ. 1024 கேபி. 1024 கிலோ பைட்ஸ் என்பதே சரியான விடை.
8.இ. டாட்ஸ் பெர் இஞ்ச். ஒரு சதுர அங்குல அளவிலான இடத்தில் உள்ள பிக்ஸெல் எனப்படும் புள்ளிகளின் எண்ணிக்கையைக் கொண்டு ரெசல்யூசன் கணக்கிடப்படுகிறது.
9. ஈ. ஒன்றுக்கொன்று இணையானவை அல்ல.
10. அ. மற்ற கம்ப்யூட்டர் துணை சாதனங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு.



எக்ஸெல் டிப்ஸ்... டிப்ஸ்....
 



எக்ஸெல் – கிரிட் லைன் கலர்: 
எக்ஸெல் ஒர்க் புக்கில் உள்ள செல்களுக்கான கிரிட் லைன் எப்போதும் மென்மையான கருப்பு வண்ணத்தில் இருக்கும். இந்த வண்ணத்தை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றுவதற்கான வழிகளைப் பார்க்கலாம். முதலில் Options  கிளிக் செய்து Tools  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள View  டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது கடைசியாகக் கீழாக உள்ள Window Optinos  என்னும் பகுதியில் மூன்றாவதாக Grid Lines என்னும் பிரிவில் டிக் அடையாளத்தை ஏறபடுத்தவும். பின் Grid Lines Color என்னும் பகுதியின் அருகே வண்ணங்கள் உள்ள கட்டம் ஒன்று காட்டப்படும். இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.



எக்ஸெல் சார்ட்டிங்:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள டேட்டா வகையினை நாம் நம் தேவைப்படி பிரித்து அடுக்கலாம். இதில் எக்ஸெல் அதிக பட்சம் மூன்று நெட்டு வரிசைகளில் உள்ள டேட்டாவினை வகைப்படுத்திப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் உங்களுக்கு மூன்றுக்கு மேலாக காலங்களில் உள்ள டேட்டாவினை வகைப்படுத்திப் பார்க்கும் தேவை ஏற்பட்டால் என்ன செய்யலாம்? அதையும் செயல்படுத்தலாம். ஆனால் வேறு வழிகள் இதற்கு உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக இரண்டு முறை வகைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக நீங்கள் A,B,C,D,E,என ஐந்து நெட்டு வரிசைகளை வகைப்படுத்த விரும்புவதாக வைத்துக் கொள்வோம். முதலில் C,D,Eவரிசைகளை சார்ட்டிங் செய்யவும். பின் அ,ஆ, வரிசைகளை சார்ட்டிங் செய்திடவும். இப்போது ஐந்து வரிசைகளும் சார்ட்டிங் செய்யப்பட்டுக் கிடைக்கும். 



இதே வழியைப் பின்பற்றி ஐந்து வரிசைகளும் ஒரே வேளையில் சார்ட்டிங் செய்திடலாம். முதலில்E வரிசையில் ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.பின் இதில் சார்ட்டிங் டூலில் Ascending அல்லது Descending  தேர்ந்தெடுக்கவும். இப்படியே D,C,B,A என ஒவ்வொரு வரிசையிலும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுத்து, முன்பு உ வரிசைக்குக் கொடுத்தபடி அ Ascending அல்லது Descendingகொடுத்து சார்ட் செய்திடவும். இப்படி ஒரே மாதிரியாக சார்ட்டிங் செய்ததனால் ஐந்து வரிசைகளும் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கும். 
இங்கு கொடுக்கப்பட்டது போன்ற வகையில் சார்டிங் செய்யப்படுகையில் முக்கியமான ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுடைய டேட்டா லிஸ்ட், சார்டிங் தன்மையினைக் கெடுக்கலாம். டேட்டா உள்ள வரிசையில் காலியான செல்கள், எர்ரர் வேல்யு அல்லது டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்ட எண்கள் இருந்தால், எக்ஸெல் நீங்கள் எதிர்பார்த்த வகையில் சார்டிங் செய்யாது. இந்த பிரச்சினையைப் போக்க டேட்டாவினை முதலிலேயே ஒரு முகப்படுத்த ("normalize") வேண்டும். எடுத்துக்காட்டாக, எண்கள் இருப்பின் அவை எண்களாகவே இருக்க வேண்டும். டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டு இருக்கக் கூடாது. இப்படி செய்வதற்கு வரிசை  முதல்  வரை உள்ள டேட்டாவினை இணைத்து வரிசை Fக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின் வரிசை F ஐ சார்ட் செய்திட வேண்டும். வரிசை இல் கீழ்க்காணும் பார்முலாவினைக் கொடுக்கலாம்:=A1 & B1 & C1 & D1 & E1.  இதில் ஏதேனும் ஒரு வரிசையில் தேதி இருந்தால், அதனை ஒரே மாதிரியான வகையான டேட்டாவாக மாற்ற வேண்டும். எடுத்துக் காட்டாக டி1 வரிசையில் தேதி இருந்தால், கீழ்க்காணும் பார்முலாவினைக் கொடுத்து டேட்டாவினை ஒருமுகப் படுத்தலாம். 
= A1 & B1 & C1 & TEXT(D1,"yyyymmdd") & E1 ஏதேனும் ஒரு வரிசையில் எண்கள் இருந்தால், அவற்றைக் கீழ்க்காணும் பார்முலா கொடுத்து மாற்றலாம். பி1 வரிசையில் இவை இருப்பதாக வைத்துக் கொள்வோம். பார்முலா கீழ்க்கண்டபடி இருக்கும். =A1 & TEXT(B1,"000000") & C1 & D1 & E1 இந்த வழிகளை மேற்கொண்டால் தான் டேட்டா சார்டிங், நீங்கள் விரும்பியபடி அமையும்.



புதிய ஒர்க்ஷீட் பெற:
எக்செல் தொகுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அதில் புதிய ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் மிக வேகமாக ஒரு ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர வேண்டும் என நீங்கள் விரும்பினால் உடனே ஆல்ட் + ஷிப்ட் + எப் 1(Alt + Shift + F1)கீகளை அழுத்துங்கள். புதிய ஒர்க் ஷீட் ரெடியாகிவிடும்.
செல்லில் டெக்ஸ்ட் டைப்பிங்:
எக்செல் செல் ஒன்றில் டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்கையில் அது செல்லையும் தாண்டி வெளியே செல்வது பலருக்கு எரிச்சலை வர வழைக்கும். செல்லுக்குள்ளாகவே டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதுவே உங்களின் விருப்பம். என்ன செய்யலாம்? கவலைப்படாமல் முதலில் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். டெக்ஸ்ட் முழுவதும் டைப் செய்தவுடன் செல்லைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Format என்னும் பிரிவிற்குச் சென்று கிளிக் செய்திடுங்கள். அதில் இஞுடூடூண் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதில் உள்ளAlignment  டேபை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Wrap Text என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். அதில் டிக் மார்க் செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் அடித்த டெக்ஸ்ட் அதே செல்லில் ஒழுங்கு படுத்தப் பட்டிப்பதைப் பார்க்கலாம். ஒரு சிலர் டெக்ஸ்ட்டை செல்லினுள் அடிக்கையில் ஆல்ட் + என்டர் தட்டி வரிகளை அமைப்பார்கள். அது நேரத்தையும் நம் உழைப்பையும் வீணாக்கும்.


எக்ஸெல் எப்படி கணக்கிடுகிறது?
எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவிதமான பார்முலாக்களை அமைத்து விடைகளைக் காண்கிறோம். எளிய மற்றும் சிறிய அளவிலான பார்முலாக்களை முதலில் அமைத்துப் பயன்படுத்திப் பின் தொடர்ந்து செயல்படுகையில் பல்வேறு செல்களை பலவிதமான கண்டிஷன்களுடன் அமைத்து வெற்றிகரமாக விடைகளைப் பெறுகிறோம். தொடக்க நிலையில் இந்த பார்முலாக்களை அமைத்துச் செயல்படுத்துகையில், எக்ஸெல் இந்த பார்முலாக்களை எப்படி செயல்படுத்துகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுந்திருக்கும். இதற்கான விடையையும் எக்ஸெல் தருகிறது. எக்ஸெல் தொகுப்பின் வழியிலேயே சென்று காணலாம் என்பதுதான் இதன் ஹைலைட் ஆகும். இதனை இன்னும் விரிவாகக் காணலாம்.
பார்முலா ஒன்றில் பல்வேறு கணக்கீடுகளையும் எண்களையும் பல அடைப்புக் குறிக்குள் கொடுக்கிறீர் கள். அதில் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அனைத்தும் உள்ளன. மேலும் சில சிறப்பு கணக்கீடுகளும் உள்ளதாக வைத்துக் கொள்வோம். இவற்றை எந்த வரிசையில் எக்ஸெல் எடுத்துக் கொள்கிறது என்று அதனை இயக்கு கையிலேயே நாம் கண்டறிந்து கொள்ள முடியும்.


இதனை அறிய பார்முலா உள்ள செல் ஒன்றை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Tools மெனு செல்லுங்கள். அதில் உள்ள Formula Auditing என்னும் துணை மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அல்லது பார்முலா ஆடிட்டிங் என்னும் டூல் பார் திறந்திருந்தால் Evaluate Formula button என்பதனைப் பயன்படுத்துங்கள். முதலில் Evaluate button கீழ்ப்பாகத்தில் திறக்கப்படும். ஒவ்வொரு முறை நீங்கள் Evaluate button க் கிளிக் செய்யும் போதும் நீங்கள் கொடுத்துள்ள பார்முலாவில் உள்ள கணக்குகள் செயல்படுத்தப் படும். எக்ஸெல் ஒவ்வொன்றாக நீங்கள் கொடுத்துள்ள கணக்கினை எடுத்துக் கொள்வதனைப் பார்க்கலாம். அப்போது எக்ஸெல் எதனை முதலில் மேற்கொள்கிறது; எதனை இரண்டாவதாக மேற்கொள்கிறது என்பதனை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒன்றைச் செயல்படுத்துகையில் எதில் அடிக்கோடு உள்ளதோ அது அடுத்ததாக எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்பதனையும் அறியலாம். பார்முலாவில் செல்களுக்கான ரெபரன்ஸ் குறிக்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டுக் காட்டப்படும். பார்த்தது போதும் என்று உணர்ந்தாலோ அல்லது கடைசி கணக்கு போடப்பட்டுவிட்டாலோ Close button அழுத்தி வெளியேறலாம். எக்ஸெல் எப்படி பார்முலா கணக்கீடுகளை மேற்கொள்கிறது என்ற மர்ம முடிச்சு இப்போது உங்கள் மனதில் இருந்து கழண்டு கொண்டதா!

 <font face="Arial" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; paddin



source

StumbleUpon.com Read more...

மனஅழுத்தத்தை அளவிடும் `வாட்ச்'

 
 

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும்வரை எந்திர கதியில் இயங்க வேண்டி இருக்கிறது இன்றைய வாழ்க்கைச் சூழல். இதனால் இளம் பருவத்திலேயே ஆண், பெண் இருபாலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக டென்சன்.

பெண்கள் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டு வேலையும் செய்ய வேண்டிய கட்டாயம். ஆண்களும் குடும்ப பாரத்தால் ஓய்வின்றி உழைக்க வேண்டிய அவசியம். இடையிடையே வரும் குடும்ப பிரச்சினைகளோ வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிவிட தொற்றிக்கொள்கிறது மன அழுத்தம். பிறகு மருந்து மாத்திரை என்று வாழ்க்கையே போராட்டமாய் நகருகிறது. ஆனால் மன அழுத்தம் என்பது வெறும் கவலையை மட்டும் கொண்ட நோய் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் அழுத்தம் அதிகரித்தால் மனநோய், மாரடைப்பு போன்ற வேறு வியாதிகள் ஏற்படும். எனவே மனஅழுத்த பாதிப்பு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போது முன் எச்சரிக்கையாக மன அழுத்தத்தை அளவிடும் வகையில் `ஸ்ட்ரெஸ் வாட்ச்' வந்துள்ளது. இதை சாதாரண கடிகாரம்போல கையில் அணிந்து கொண்டு எந்த வேலையையும் செய்யலாம். இந்த கருவியானது உடலில் ஏற்படும் மாற்றங்களை (வெப்ப மாற்றத்தை)சென் சார்கள் மூலம் கண்காணிக்கும். அழுத்தத்தை குறிப்பிட்டு வெவ்வேறு அளவீடுகள், பல வண்ணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அவ்வப்போது காட்டும் அளவுக்கு ஏற்ப மருந்து உட்கொண்டு அழுத்தத்தை குறைத்து மன இறுக்கமின்றி வாழ்க்கையை தொடரலாம். மேலைநாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள இதன் பெயர் `ஸ்ட்ரெஸ் சென்சார் வெஸ்ட்' எனப்படும்.

source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மிருகக்காட்சி சாலை, சர்க்கஸ்களில் இனி யானைகளை பார்க்க முடியாது

 புதுடில்லி : பெரிய உருவம் கொண்ட யானைகள் வசிப்பதற்கு மிருகக்காட்சி சாலைகளும், சர்க்கசும் ஏற்ற இடமல்ல, எனவே, இந்த மிருகத்தை சரணாலயம் அல்லது தேசிய பூங்காக்களில் பராமரிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய மிருகக்காட்சி சாலை ஆணையம், அனைத்து மாநில மிருகக்காட்சி சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. யானை, புலி போன்ற பெரிய மிருகங்கள் நடமாடுவதற்கு மிருகக்காட்சி சாலை மற்றும் சர்க்கசில் போதிய இடம் கிடையாது. எனவே, இந்த மிருகங்களை தேசிய பூங்காக்களிலோ, சரணாலயங்களிலோ கொண்டு விட்டு விடவேண்டும், என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இந்த ஆணையத்தின் கண்காணிப்பாளர் பி.கே.குப்தா குறிப்பிடுகையில், "நாடு முழுவதும் உள்ள 26 மிருகக்காட்சி சாலைகள் மற்றும் 16 சர்க்கஸ்களில், 140 யானைகள் உள்ளன. டில்லி மற்றும் மைசூர் மிருகக்காட்சி சாலைகளில் ஆப்ரிக்க யானைகள் உள்ளன. 1992ம் ஆண்டு சட்டப்படி எந்த மிருகக்காட்சி சாலையும், சர்க்கசும், யானைகள் மற்றும் புலிகள் வசிப் பதற்கு ஏற்ற இடமாக இல்லை, எனவே, இந்த மிருகங்கள் இனி சரணாலயங்களிலும்,தேசிய பூங்காக்களில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும்' என்றார்.

மேனகா கண்டனம்: ஒரிசாவில் கால்நடை கல்லூரி மாணவர்கள், கல்லூரி விழாவின் போது, நாய் உள்ளிட்ட பிராணிகளை முன்னங் கால்களை தூக்க செய்து நடக்க வைத்துள்ளனர். "இது மிருகவதைக்கு ஒப்பாகும்'என கூறி இதற்கு அனுமதியளித்த விவசாய பல்கலைகழகத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா கண்டனம் தெரிவித்துள்ளார்.



www.thamilislam.co.cc





--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP