சமீபத்திய பதிவுகள்

சீன கம்யூனிச அரசு - கூகுள் மோதல் உச்சகட்டம் : சீனாவுக்கு அமெரிக்கா கண்டிப்பு

>> Saturday, January 16, 2010

 
 
 

Front page news and headlines todayவாஷிங்டன் : மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், சீன கம்யூனிச அரசுக்கும், கூகுளுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.



எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள இன்டர்நெட் மூலம் வழி செய்வது வெப்சைட்கள். இவைகளை தேடுவதற்காக அமைக்கப் பட்டது தான் யாகூ, கூகுள் போன்ற தேடுதல் சாதனங்கள் (சர்ச் இன்ஜின்). சீன கம்யூனிச ஆதிக்கத்தின் மனித உரிமை மீறிய செயல் களை, கூகுள் வெப்சைட்கள் மூலம் சீனாவைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இது போதாதென்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த சீனர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்தி, கூகுள் வழியாக பல வெப்சைட்களிலும், சீனாவில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது, சீன கம்யூனிச அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இதனால், சீன கம்யூனிச அரசு இரண்டு வழிகளில் கூகுள் வெப்சைட்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது. ஒரு பக்கம், கூகுள் வெப்சைட்களை "அபகரித்து' அதில் உள்ள தகவல்களை தனக்கு சாதகமாக மாற்றி வெளியிட ஆரம்பித்தது. இப்படி பல வெப்சைட்களைத் "திருடி' வந்தது.



இது பற்றி கூகுள் நிறுவனம் கேட்ட போது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உரிய விசாரணை செய்வதாக மட்டும் கூறியது. ஆனால், தொடர்ந்து, சீனாவில் இருந்து தான் கூகுளில் உள்ள வெப்சைட்கள் "திருடப்படுவது' அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, சீன மனித உரிமை பற்றி சொல்லும் வெப்சைட்கள் மட்டும் இப்படி "திருடப்பட்டு' சீன அரசுக்கு சாதகமாக வெளியிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, மனித உரிமை மீறலை கிளப்புவோரின், "இ - மெயில்'களும் மாயமாகி விடுகின்றன.



இப்படி ஒரு பக்கம் தன் "வேலை'யைக் காட்டிய சீன அரசு, தணிக்கை அதிரடியையும் இன்னொரு பக்கம் ஆரம்பித்து விட்டது; "கூகுள் வெப்சைட்களில் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக தகவல்கள் வருகின்றன; பலான வெப்சைட்கள் அதிகமாக வருகின்றன; அதனால், தணிக்கை செய்து தான் சீன மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும்' என்று தணிக்கையை சீனா நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். "கூகுள் தேடுதல் சாதனம் என்பது, உலகில் உள்ள மக்கள் சுதந்திரமாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், எண்ணங் களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு தகவல்களை அளிப்பது தான் இணைய தளங்களின் பொறுப்பு. அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகிப்பது சரியல்ல; சீனா தன் கெடுபிடியை நீக்கி, கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.



கூகுள் நிறுவனம் சார்பில் உயர் அதிகாரி டேவிட் ட்ரம்மண்ட் கூறுகையில், "கூகுள் வெப்சைட்கள் அடிக்கடி "திருடு' போவதற்கு, சீனாவில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தான் காரணம். திட்டமிட்டு இப்படி வெப்சைட்களை "திருடி' தகவல்களை திரிக்கின்றனர்; இப்படி செய்வதால், ரகசியமான தகவல்கள் திருடப்படுவதும், கடத்தப்படுவதும் எளிதாகி விடும். இதை கூகுள் அனுமதிக்க விரும்பாது. சீன அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுபோல தணிக்கையையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் கூகுள் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார். கூகுள் தேடுதல் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவோரில் சீன மக்கள் தான் அதிகம்.



சீனாவின் கெடுபிடி நிறுத்தப்படாவிட்டால், விரைவில், சீன மக்களுக்கு கூகுள் மூலமான வெப்சைட்கள் கிடைக்காது; அதனால், பெரிய அளவில் சீன தொழில், வர்த்தகர்கள் முதல் சாதா மக்கள் வரை பாதிக்கப்படுவர். சீன அரசுக்கும், கூகுளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கூகுள் பக்கம் அமெரிக்கா உள்ளது. இதனால், சீனாவின் கோபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கூகுள் தன் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முதல் கட்டமாக, பீஜிங்கில் உள்ள தன் அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது.


source:dinamalar




--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நான் உயிருடன் இருக்கிறேன்

ஏவுகணை வீச்சில் சாகவில்லை "நான் உயிருடன் இருக்கிறேன்" தலிபான் தலைவர் மசூத் அறிவிப்பு
 பெஷாவர், ஜன. 16-
 
கடந்த ஆண்டு (2009) ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வரிசிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் அப்போதைய தலிபான்களின் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்.
 
இதையடுத்து ஹகிமுல்லா மசூத் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றார். இந்த நிலையில் இவரையும் ஏவுகணை வீசி அழிக்க அமெரிக்க ராணுவம் தீவிரமாக உள்ளது.
 
நேற்று முன்தினம் வர்சிஸ்தானின் வடமேற்கு மலை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசியது. இதில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மசூத்தும் ஒருவர் என்று அறிவிக்கப்பட்டது.
 
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை தலிபான்கள் மறுத்தனர். இந்த நிலையில் நேற்று பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்களுக்கு ஒரு ஆடியோ கேசட் தலிபான்களால் அனுப்பப்பட்டது.
 
ஹகிமுல்லா மசூத்தின் பேச்சு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். ஏவுகணை வீச்சில் சாகவில்லை. அவ்வப்போது இதுபோன்று பொய்யான பிரசுரங்கள் செய்யப்படுகின்றன.
 
என்னை அழிப்பதன் மூலம் தெற்கு வர்சிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை அழித்து விடலாம் என கருதுகிறார்கள் இது ஒரு போதும் நடக்காது என்று அவர் பேசி இருந்தார்.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் இதே போன்று ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியது. அப்போதும் இதை தலிபான்கள் மறுத்து வந்தனர். தற்போது மசூத்தின் பேச்சு அடங்கிய ஆடியோவை வெளியிட்டு அவர் மூலமே மறுப்பு தெரிவித்துள்ளனர்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

டிவி பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது


  


பிரிட்டனில், "டிவி" பார்ப்பதிலும் கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும், பெரும்பாலான குழந்தைகள் நேரத்தை கழிக்கிறார் கள். இதனால், அவர்களிடத்தில் பேச்சு திறன் குறைந்து போகிறது என்று ஆய்வு கூறுகிறது. பிரிட்டன் குழந்தைகளின் பேச்சுத் திறன் குறித்து சர்வேயை அரசு தகவல் தொடர்பு அதிகாரி ஜீன் கிராஸ் நடத்தினார்.
இந்த சர்வேயில் பிரிட்டனில் பெரும்பாலான குழந்தைகள் "டிவி" பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதிலும் பொழுதை கழிக்கின்றனர். அப்போது, அவர்களிடத்தில் பேசுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதன் மூலம் ஆறில் ஒரு குழந்தைக்கு பேசும் திறன் குறைவாக உள்ளது என்று இந்த சர்வே கூறுகிறது.

இந்த சர்வே மேலும் கூறுகையில், 25 சதவீத பிரிட்டன் இளைஞர்கள் தங்களது பேசும் திறனில் சில குறைபாடுகளுடன் உள்ளனர். 5 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடு இருக்கின்றனர். சிறுமியரை பொருத்தமட்டில் 13 சதவீதத்தினர் சிறு குறைபாடுகளோடும், 2 சதவீதம் பேர் முக்கிய குறைபாடுகளோடும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளில் 34 சதவீதம் குழந்தைகள் முதல் வார்த்தையை, பிறந்த 10 அல்லது 11வது மாதத்தில் உச்சரித்து விடுகின்றனர்



source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்க விமானங்களை தகர்ப்போம்: அல்கொய்தா மீண்டும் மிரட்டல்

 
வாஷிங்டன், ஜன. 16-
 
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து டெட்ராய்ட் வந்த அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த உமர்பரூக் அப்துல் முத்தலாப் (23) என்பவன் கைது செய்யப்பட்டான்.
 
இவன் ஏமனில் பயிற்சி பெற்ற அல்கொய்தா தீவிரவாதி ஆவான். இதற்கிடையே இந்த விமானத்தை தகர்க்க நடந்த சதிக்கு பொறுப்பு ஏற்பதாக ஏமனில் இருந்து அல்கொய்தா தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர்.
 
இதை தொடர்ந்து அமெரிக்க விமானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் உடல் முழுவதும் எக்ஸ்ரே மூலம் பரிசோதிக்கப்படுகிறது.
 
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று விமானத்தை தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டாலும் விடமாட்டோம் அமெரிக்க விமானங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என அல்கொய்தா தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
 
எனவே, அமெரிக்க விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஜானெட் நபோலிபோனோ தெரிவித்தார்.
 
அமெரிக்க விமானங்களில் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர் களும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கான உத்தரவை அதிபர் பாரக் ஒபாமா பிறப்பித்துள்ளார் என்றும் அவர் கூறினார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP