சமீபத்திய பதிவுகள்

யார் இந்த உத்தம் சிங்?ஈழத்தமிழனுக்கும், இவனுக்கும் என்ன சம்மந்தம்?

>> Saturday, May 16, 2009


பிரசுரித்த திகதி : 16 May 2009


ஜாலியன் வாலாப் படுகொலை என்பது இந்தியாவில் 1919 ஏப்பிரல் மாதம் 13 நாள் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில்  பிரித்தானிய படையினரால் நடாத்தப்பட்ட மனிதப் படுகொலையாகும்.


 


படுகொலையை நிகழ்த்தியது "மேஜர் டயர்", படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O' Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி. பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் என அனைவரையும் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு பிரித்தானியப் படை கொன்று குவிக்கின்றது.


கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன. பிரித்தானிய அரச மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1000 பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். மக்கள் மரண ஓலத்துடன் சாகின்றனர், அவன் நெஞ்சத்தை பிளக்கிறது. குருதி தோய்ந்த அங்கிருக்கும் மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொள்கிறான் அந்த இளைஞன்.


தாக்குதல் செய்ய சொன்னவனை (Michael O'Dwyer) பழி வாங்க துடிக்கிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். இவ்வாறு பலகாலம் தேடி அலைந்த பின்னர் ஒரு நாள் நண்பன் மூலமாக அறிகிறான் அவன் தேடிய Michael O'  Dwyer  உத்தியோக மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.


துவள வில்லை உதம் சிங்ஈழத் தமிழனைப்போல... நெஞ்சில் கொண்ட வைராக்கியம் சற்றும் குறையாதவனாக அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து Michael O' Dwyer ஐ தேடுகிறான். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடுகிறான், Michael O'  Dwyer இறந்திருக்கலாம், அல்லது அவன் வேறு நாட்டிற்கு சென்றிருக்கலாம். அங்கே கொல்லப்பட்ட மக்களை நினைத்து தேடுகிறான். ஆனால் தனது லட்சியத்தை மறக்கவில்லை


தேடி, கடைசியாக 13 மார்ச் 1940 ஆண்டு ஒரு பொது விழாவில் தேடிய Michael O ' Dwyer காண்கிறான், அவன் எப்போதுமே தன்னுடன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பான். அவன் கண்களால் நம்பவே முடியவில்லை. துப்பாக்கியை எடுத்தான் குறிவைத்துச் சுட்டான், மண்ணில் வீழ்ந்தான்  Michael O' Dwyer.  மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறான்.. அவர்கள் மூன்று பேரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington பிழைத்து கொள்கிறார்கள்.


 பின்னர் சில காலம் கழித்து ஒரு விழாவில் பொலிசார் அவரை கைது செய்கின்றனர்.  மூன்று மாதங்களில் விசாரனை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31 யூலை 1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 1000 அப்பாவி பொதுமக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார். மரணமாகிறார்.


பல வருடங்கள் கழிந்தன,  1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்களை தோண்டி எடுக்க இந்திய அரசு பிரித்தானியாவை கோருகிறது. வேறுவழியின்றி பிரித்தானிய அரசும் உதம் சிங்கின் எச்சங்களை இந்தியாவுக்கு அனுப்ப ஒத்துக்கொள்கிறது.


இந்தியா கொண்டு வரப்பட்ட அவனின் எச்சங்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்கப் படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ் சூட்டினார் இந்திராகாந்தி அம்மையார்.


நான் சிறுவயதில் படித்த கதை இது. இதே நிலவரம் தான் இன்று ஈழத்திலும். நடைபெறுகிறது. அப்போது இளைஞனாக இருந்த உதம் சிங் எம்மைப் போல எல்லாம் முடிந்துவிட்டது என எண்ணவில்லை. அதற்காக நாம் பழிவாங்கச் சொல்லவில்லை அல்லது மாறாக பிரித்தானிய அரசை குறைகூறவில்லை. அங்கு ஈழத்தில் இறந்த அனைவரையும் நாம் நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்வோம். இங்கு எமது போராட்டம், அரசியல் முன்நகர்வுகளை மேற்கொள்வோம். அழுது புலம்பி இலாபமில்லை. அடுத்த உதம் சிங்  போல நாம் புறப்படுவோம்.. அதாவது இறுதித் தமிழன் இருக்கும் வரை ஈழப் போராட்டம் தொடரும்......


 


 




StumbleUpon.com Read more...

சிறிலங்கா மீதான பொருளாதார தடைக்கு தயாராகும் மேற்குலகம்

சிறிலங்கா மீதான பொருளாதார தடைக்கு தயாராகும் மேற்குலகம்: கொழும்பு ஊடகம்
சிறிலங்கா மீது பொருளாதார தடைகளை மேற்கொள்வதற்கு மேற்குலகம் முயற்சிகளை வேகமாக எடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் நிறுத்தம் தொடர்பான அழைப்புக்களை சிறிலங்கா அரசு நிராகரித்ததை தொடர்ந்து பல மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன.

சிறிலங்கா மீதான நடவடிக்கைகள் தொடர்பாக பிரித்தானியா வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் கடந்த வாரம் ஆராய்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவலக அமைச்சர் பில் ராம்மெல் சிறிலங்காவுக்கு காத்திரமான எச்சரிக்கை ஒன்றை கடந்த புதன்கிழமை விடுத்திருந்ததுடன் சிறிலங்கா போர் குற்ற விசாரணைகளை எதிர்நோக்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரித்தானியா நாடாளுமன்ற விவாதத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா மீதான பொருளாதார தடையை ஆதரித்திருந்தனர்.

சிறிலங்கா மீது பொருளாதார தடைகளை கொண்டுவருவதுடன், அதனை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து நீக்கவும் சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளை நிறுத்தவும் அமைதி முயற்சிகளில் நேரிடையாக மேற்குலகம் தலையிடவும் சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கவும் சிறிலங்காவின் அரச அதிகாரிகள் மீது பயணத் தடையை கொண்டுவரவும் அவர்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்காவிற்கான புடவை ஏற்றுமதி வரிச்சலுகையுடன் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளை இணைத்து கொள்ள முற்பட்டு வருகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

StumbleUpon.com Read more...

சிங்களவர்களின் கொட்டத்தை முறியடிக்க வேண்டும்-மலையகத்தில் இருந்து தமிழன்

நமக்காக நாம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து, இழந்தவற்றை மீட்க வேண்டும்: மலையகத்திலிருந்து ஒரு குரல்
பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு விடிவு ஒன்று கிடைக்கும், உலக நாடுகளும், இந்தியாவும் எம் மக்களுக்கு துணை புரியும் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் வெறும் அறிக்கைகளை மாத்திரமே விடுத்து, எங்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி, இன்றுவரையில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். 


இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம், எமது மக்களை கொன்று குவிப்பதற்கான சகல ஆயுதங்களையும் வழங்கி வருவதாக அறிந்த போது, இந்திய வம்சாவளி மக்களாகிய எங்களின் இரத்தம் கொதித்தது.

ஆனால், அந்த அரசாங்கத்தின் ஆயுள் காலம் மிகவும் குறுகியது என கருதி நாங்கள், இந்திய லோக்சபா தேர்தலின் முடிவுகளை எதிர்பார்த்திருந்தோம். ஆட்சி மாற்றமாவது, இலங்கையின் ஆட்கொல்லி அரசாங்கத்தின் கழுத்தைப் பிடித்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்பினோம். மலையக மக்கள் என்ற வகையில் நாங்கள் பல்வேறு வழிகளில் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த நம்பிக்கையிலும் தற்போது மண் விழுந்ததைப் போல் ஆகிவிட்டது. 

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் விடுதலைப் புலிகளின் விடுதலைப்போராட்டத்திற்கு தலைவணங்கி வருகிறோம். 

அங்கு எமது சொந்தத்தின் காயத்தில் இரத்தம் வழிகையில், எங்களின் கண்ணீருடன் சேர்ந்து அந்த இரத்தம் வழிவதை நாங்கள் எப்படி, எங்கள் சொந்தங்களுக்கு சொல்லும் வழிகள் கூட தெரியாத ஜனமாய் நாங்கள் இருந்திருக்கிறோம்.

தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவாக எங்கெங்கோ உலக நாடுகளில் எல்லாம் போராட்டங்கள் செய்து கொண்டிருக்கும் போது, நாங்கள் மட்டும் எங்கள் வீடுகளுக்குள்ளே கண்ணீர் வடித்து கதறி அழுதிருக்கிறோம்.

ஆனால் அந்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்காதமைக்கு காரணங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது, சமூகங்களுக்கு விளங்கியிருக்கும் என்பதால் தவிர்ந்து போகிறது. 

எங்களின் மக்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடி வருகின்றமையறிந்து, அவர்களுக்கு மலையக சமுகம் எத்தகைய உதவிகளை செய்திருக்கிறது என அவர்கள் அறிவார்கள்.

ஆனாலும், தற்போது நாங்கள் அவர்களின் நிலமையறியாது, எங்களின் பிள்ளைகளின் நிலைமைகளை அறியாது, என்ன நடக்கிறதோ, என்பதறியாது தவித்து போய் இருக்கிறோம்.

எங்கள் ஊரின் பெண்கள் மலைகளில் ஏறி தேயிலைப் பறிப்பதைவிட, வடக்கு கதைகளை கதைப்பது தான் அதிகமாக இருக்கிறது. இந்த விடயத்தில் மட்டும், அந்தஸ்து பேதம் இன்று மலையத்தின் ஆங்காங்கே தமிழர்கள் கூடி, கதைத்தும் கண்ணீர் வடித்தும் கொண்டுதான் இருக்கிறார்கள், 

ஐயா, நாங்கள் எழுதுவது, சர்வதேச சமுகத்திற்காகவோ, வேறு யாருக்காவோ இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத்தான். அவர் தமிழுக்கு தலைவராகவே நாங்கள் கருதுகிறோம்.

அவர் தற்போது என்ன செய்கிறார். இதனை அறிந்துக் கொள்ளும் வழிமுறைகள் எதுவும், எங்கள் மலையகத்தில் இல்லை. நாங்கள் எவ்வாறு அவற்றை அறிந்து கொள்வோம்?

நாங்கள் நேரடியாக அவர்களின் நலன் குறித்தோ, நிலைமை குறித்தோ விசாரிக்க தெரியாது இருக்கிறோம், அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் பித்துப்பிடித்தாற்போல் சுற்றித் திரிகிறோம்.

விடுதலைப் புலிகளின் பல்வேறு உரைகளில் நாங்கள் கேட்டிருக்கிறோம், தமிழ் சமூககங்களின் ஆதரவும் நம்பிக்கையும் தான், தங்களை வளர்த்ததாகவும், தொடர்ந்தும் போராடும் தன்மையை வழங்குவதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிடுமோ என்ற பயம் அதிகமாக இருக்கிறது.

ஆரம்பகாலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்தது. காரணம் கடவுளை கண்டதாக பலர் கூறி வந்தனர், செய்யுள் இலக்கியம், பாடல் என பல்வேறுவற்றை இயற்றினர்.

ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை தற்போது அரிதாகிவிட்டது, காரணம் தற்போது கடவுளை காண்பவர்கள் யாரும் இல்லை. கடவுள் குறித்து ஆரம்ப காலம் போல, எதுவும் புதிதாக வெளியிடுவதில்லை. கடவுள் குறித்த தகவல் எதுவும் இல்லை. 

அதுபோலதான் இதுவும், ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் சகல செயற்பாடுகளும் எங்களுக்கு தெரியவந்தது.. எங்களுக்கு மட்டும் இல்லை உலகின் ஏராளமானவர்களுக்கும்… 
அதனால் எங்களின் நம்பிக்கை உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை எங்களை அறியாமலேயே நலிவடைந்து போகிறது. காரணம் நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் தமது பலத்துடன் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஏதேனும் செய்யுங்கள், எங்கள் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுங்கள். 
நீங்கள் முழுமையான பலத்துடன் இருப்பீர்கள் என்ற எங்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிடாதீர்கள், நாங்கள் தவித்து கிடக்கிறோம்.

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், நடப்பு அரசாங்கம் தோற்று எங்கள் பொது மக்களுக்கு விடிவு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். மலையத்தில் நடந்த தேர்தல்களின் முடிவுகளை நீங்கள் அவதானித்தால் நாங்கள் முயற்சி எடுத்தமை புரியும் 

ஆனால் இனத் துவேசமும் யுத்த வெறியும் கொண்ட சிங்கள அரக்கர்கள் , அரக்கர்களையே மீண்டும் இலங்கைக்குள் வரவழைத்துவிட்டனர். இந்திய தேர்தலும் அவ்வாறே முடிவினை தந்துவிட்டது. கடவுள் கூட எமது தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படுகிறான். தமிழ் இனத்தை அழிக்க கடவுளும் கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டான்.

எத்தனை உயிர்கள் அழிந்தும், இன்னும் அவன் கொலைகாரனாக செயற்படுகிறானே தவிர, காப்பாற்றுபவனாக செயற்படவில்லை. அதனால் தான் அவன் கோவில்களையும் இடித்து ஒழிக்க ஏற்பாடு நடக்கின்றன. 

அனைத்து முடிவுகளும் எங்களுக்கு எதிராகவே இருக்கிறது. நமக்காக நாம் என்ற பேராட்டத்தை ஆரம்பித்து, இழந்தவற்றை மீட்க வேண்டும், சாட்சிக் காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் கதையை முடிக்கலாம்.

மற்றவர்களிடம் கையேந்துவதைவிட, இதுவரையில் நாம் மேற்கொண்டு வந்த போராட்டத்தை வெற்றி பெற, நாம் மீண்டும் போரிடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து, ஆராய்வோம்.

இத்தனை உயிர்களின் அழிவுக்கு பின்னர் இன்னும் மௌனம் ஏன்? இதுவரை காலமும் நம் போராட்டத்துக்கு உயிர்த்தியாகம் செய்த போராளிகளின் ஆத்ம சாந்திக்காகவேனும், மீண்டும் போராட்டத்தை மேலெடுத்து, தலை தூக்கி ஆடுகின்ற சிங்களவர்களின் கொட்டத்தை முறியடிக்க வேண்டும். 

மலையகத்தில் இருந்து தமிழன் 

StumbleUpon.com Read more...

பாரளுமன்றத் தேர்தல் இறுதி நிலவரம்

StumbleUpon.com Read more...

யுத்தம் முடிந்துவிட்டதா? இராணுவம் தனது இலக்கை அடைந்து விட்டதா? ஒரு ரிப்போர்ட்











யுத்தம் முடிந்துவிட்டதா இராணுவம் தனது இலக்கை அடைந்துவிட்டதா அதிர்வின் ரிப்போர்ட்
பிரசுரித்த திகதி : 16 May 2009

இராணுவத்தின் முன் நகர்வுகள் என்ன தற்போது இராணுவம் எங்கு நிலை கொண்டுள்ளது என்பது பற்றி பல குழப்பமான தகவல்கள் பல இணையங்களில் உலாவருகின்றன. உண்மை நிலை என்ன என ஆராய்ந்து பார்த்தால், கடந்த 2 வாரமாக இராணுவம் ஒரு தரையிறக்க முயற்சியை மேற்கொண்டு எஞ்சியுள்ள இடங்களை கைப்பற்ற பாரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நாங்கள் இங்கு இணைத்திருக்கும் வரைபடத்தை பார்வையிடுங்கள்.



இராணுவத்தின் Task Force வலைஞர் மடப்பகுதில் நிலைகொண்டிருந்தது, 53வது படையணி மத்தளான் புதுமத்தளான்னில் இருந்து வட்டுவாகல் பக்கமாக நகர்ந்தது, வட்டுவாகல் பாலத்திற்கு பின்புறமாக நிலைகொண்டிருந்த 59வது படைப்பிரிவினர் முறையே வலைஞர்மடம் நோக்கி நகரத்தொடங்கினர். இதனால் பெரும் சமர் மூண்டது. வட்டுவாகல் பகுதியில் இருந்து முன்னேறிய இராணுவத்தினரை வட்டுவாகல் பாலத்தில் வழிமறித்து புலிகள் கடும் முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்தனர், பெரும் இழப்பைச் சந்தித்த 59வது படைப்பிரிவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வரை அவ்விடத்திலேயே புலிகளால் முடக்கப்பட்டனர். பாரிய சூட்டாதரவுடன் 58வது படைப்பிரிவினர் கடலேரமாக முன்னேறத் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்தபோது புலிகளின் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.


இத்தாக்குதலை சமாளிக்க முடியாது அவர்கள் பலதடவை விமானப்படையினரது உதவியை நாடியுள்ளனர், சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் சுமார் 17 முறை வான் தாக்குதல்கள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது, இதில் பல பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றைமேற்கொண்டால் எஞ்சியிருக்கும் இடங்களை இலகுவில் மீட்டுவிடலாம் என கருதிய சரத்பொன்சேகா அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க, பல தரையிறக்க முயற்சிகளை இராணுவம் மேற்கொள்ள முனைந்தன.


இந்த வேளையில் கடற் கரும்புலிகள் தமது திறமையால் பல தரையிறக்க முயற்சிகளை தோற்கடித்தனர். முள்ளிவாய்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த பாரிய மன் அரன் இராணுவத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. அத்துடன் தரையிறக்க முயற்சிகளும் தோல்வியைத்தழுவ, கடந்த 3 தினங்களுக்கு முன் ராணுவத்தினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை தொடுத்தனர். மக்கள் செறிந்துவாழும் பகுதி என்று கூட்ப்பாராமல் அகோர குண்டுமழை பொழிந்தனர். இதன் காரணமாக பல பொதுமக்கள் இறந்தனர்.


நேற்றை தினம் நடந்த உக்கிரமோதலில் கடல்கரை ஓரமாக நகர்ந்த 59வது படையணியின் ஒரு பகுதியினர் முன்னேறி 58வது படைப்பிரிவினரை சந்தித்துள்ளனர். இராணுவத்தின் தரையிறக்கம் காரணமாகவே இவ்விரு படையணிகளும் சந்தித்தனர். தற்போது நந்திக்கடல் களப்பு வழியாக நகரும் 59 படையணியினர் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நகரும் 53வது படையணியுடன் தொடர்புகளை ஏற்படுத்த முணைகிறது.


தற்போது எஞ்சியுள்ள சுமார் 1சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் உக்கிர சமர் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அதாவது இராணுவத்தின் 53வது படையணியும், 59வது படையணியும் ஒன்றிணையும் போது அவர்கள் இலக்கு பூர்த்தியாகிவிடும். தற்போது வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் சமர் இடம்பெற்றுவருகிறது. இருப்பினும் ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த யுத்தம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.


கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை தயார்நிலையில் இருக்குமாறு இராணுவம் அறிவித்துள்ளது. எந்தநேரத்திலும் தாம் அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.


இராணுவம் தனது இலக்கை அடைந்தாலும், இடங்களை காப்பற்றுவதை விட அதைத் தக்கவைப்பதே பெரும் கஷ்டம் என்பது வரலாற்று பூர்வமான உண்மை. ஈராக்கை அமெரிக்கப் படையினர் கைப்பற்றும் போது ஒரு இராணுவ வீரரைக் கூட  இழக்கவில்லை. அனால் தற்போது ஆயிரக்கணக்கில் அமெரிக்க இராணுவம்கொல்லப்பட்டுள்ளது. எனவே பரப்பளவு பெரிதாகப் பெரிதாக அதை தக்கவைப்பது, பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடையம். மன்னாரிலோ அல்லது மட்டக்கிளப்பிலோ ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனை புலிகள் இன்னும் இழக்கவில்லை என்பதில் ஜயமில்லை. சிறிய ஒரு பரப்பை இறுதியாக கைப்பற்றி, அதனை ஒரு மாபெரும் யுத்தவெற்றியாக காட்டி சிங்கள மக்களிடம் நற்பெயர் எடுக்க இலங்கை அரசு முயல்கிறது.


யுத்தத்திற்கு பின் என ஒரு அத்தியாயம் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அந்த அத்தியாயம் இனி தொடரும்போது இலங்கை அரசு அதிர்ச்சியடையும்  என்பதில் ஜயமில்லை.

StumbleUpon.com Read more...

தேர்தல் முடிவுகள்

StumbleUpon.com Read more...

இலங்கையில் இறுதி கட்ட போர் 4முனைகளிலும் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல்; 50 ஆயிரம் பேர் பலியாகும் ஆபத்து

 
கொழும்பு, மே. 16-
 
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இப்போது 1 1/2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்துக்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் 50 ஆயிரம் பொதுமக்களும் உள்ளனர்.
 
விடுதலைப்புலிகளிடம் இருக்கும் ஒட்டு மொத்த பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்துடன் சிங்கள படை இதுவரை இல்லாத அளவுக்கு கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இன்னும் 48 மணி நேரத்தில் ஒட்டு மொத்த பகுதியையும் பிடித்து விடுவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளிவந்து 24 மணி நேரம் கடந்து விட்டது. இன்று ஒரு நாள் மட்டுமே மீதி உள்ளது. எனவே இன்றே ஒட்டு மொத்த பகுதியையும் பிடிக்கும் நோக்கத்தோடு 4 முனைகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒரே நேரத்தில் தாக்கி வருகின்றன. குறுகிய நிலப்பரப்பில் ஏராளமான மக்கள் நெருக்கமாக தங்கி இருப்பதால் ஒரு குண்டு விழுந்தால் கூட அதில் பலர் பலியாகும் நிலை உள்ளது. ஆனாலும் தமிழர்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் குண்டு வீசுகின்றனர்.
 
இதனால் மக்கள் அனைவரும் பதுங்கு குழிக்குள் ஒழிந்து கிடக்கின்றனர். விமானம் மூலம் குண்டு வீசுவதால் பதுங்கு குழியில் இருந்தாலும் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
 
இன்று இரவுக்குள் எல்லா வற்றையும் முடித்து விடவேண்டும் என்ற வெறியோடு தாக்குதல் நடக்கிறது. எனவே இன்றைய தாக்குதலில் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர்வரை பலியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
தொடர்ந்து குண்டுகள் வந்து விழுவதால் பதுங்கு குழிக்குள் இருப்பவர்கள் யாரும் வெளியே வரவில்லை. எனவே குண்டு வீச்சில் இறந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் உடல்கள் தெருக்களில் சிதறி கிடக்கின்றன. காயம் அடைந்தவர்களையும் யாரும் தூக்கி செல்ல ஆள் இல்லாததால் குற்றுயிரும், குலையுயிருமாக துடிக்கிறார்கள்.
 
போர் பகுதியில் இருந்த ஒரே ஒரு ஆஸ்பத்திரியும் குண்டு வீசி அழிக்கப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உணவு, மருந்து வழங்கிவந்த செஞ்சிலுவை சங்கத்தினரும் அங்கிருந்து வெளியேறி விட்டனர். எனவே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையும் இல்லை.
 
சிங்கள ராணுவம் இப்போது தீப்பற்றும் தன்மை கொண்ட பாஸ்பரஸ் குண்டு மற்றும் ரசாயன குண்டுகளை வீசுகின்றனர். இதனால் இதில் காயம் அடைந்தவர்கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
 
போர் பகுதிக்கு அனுப்பப்பட்டு வந்த உணவு ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மக்கள் பட்டினி கிடக்கின்றனர். குடிக்க தண்ணீர் கூட இல்லை. இதனால் பட்டினியாலும் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 
இன்று காலை வடக்கு பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வந்த 58 வது 59-வது படைகள் இணைந்தன. அவை கடற்கரை வழியாக விடுதலைப்புலிகள் பகுதிக்குள் புகுந்து தாக்கி வருகின்றனர்.
 

இதற்கிடையே போர் பகுதியில் இருந்து 10 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் நந்தி கடல் என்ற கடல் அழிமுக பகுதி தண்ணீருக்குள் இறங்கி நீந்தி ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தனர்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP