பிளாக் மார்க்கெட்டில் பெட்ரோல்-இன்றைய ரேட்: லிட்டர் ரூ.75!
>> Tuesday, July 1, 2008
பிளாக் மார்க்கெட்டில் பெட்ரோல்-இன்றைய ரேட்: லிட்டர் ரூ.75! |
இந்தப் பகுதிகளில் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால், பைக், ஆட்டோக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பங்குகளைத் தவிர சில தனியார் கடைகளிலும் ஆயில் விற்பனை எனும் பெயரில் பெட்ரோல்-டீசல் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வந்தது.
இப்போது பங்குகள் மூடப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் பலரும் வேறு வழியில்லாமல், இந்த சில்லறை விற்பனையாளர்களைத் தேடிப் போகின்றனர்.
இதுதான் சரியான நேரமென்று முடிவு செய்துவிட்ட விற்பனையாளர்களும் ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் கூடுதலாக வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்று வருகின்றனர். பல இடங்களில் கெரசின் மற்றும் விலை மலிவான தின்னர் கலந்து விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இன்னும் சில இடங்களில் பெட்ரோல் பங்குகளுக்குப் பின்புறமாக வைத்து லிட்டருக்கு ரூ.20 கூடுதல் விலைக்கு பெட்ரோல் விற்கப்படுவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்த வண்ணமுள்ளன.
சேலையூர் மற்றும் பள்ளிக் கரணையில் மூன்று பெட்ரோல் பங்குகளில் இப்படி கள்ளத்தானமாக பெட்ரோல் விற்கப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடங்களுக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கள்ள வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment