போரை நிறுத்த பாப்பரசர் வேண்டுகோள்: அரசியல் தீர்வு காணவும் வலியுறுத்தல்
>> Sunday, January 11, 2009
சிறிலங்காவில் போர் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
போரினால் பொதுமக்கள் கொல்லப்படுவதனையிட்டும் அவர் கவலையும் வேதனையும் தெரிவித்துள்ளார். வத்திக்கானில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இருந்து சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டபோதே பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்தி உடனடியாக சமாதான பேச்சை தொடங்க வேண்டும் வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், கூடிய விரைவில் சமாதானம் ஏற்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். |
0 கருத்துரைகள்:
Post a Comment