சுவிட்சர்லாந்தில் அவசரகால ஒன்றுகூடல் - (மரணத்தின் வாசலில் ஜநாவை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி)
>> Monday, January 19, 2009
|
|
மரணத்தின் வாசலில் உன் இனம் இதை தடுத்திட எழுந்து வா தமிழனே அழுதது போதும் உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்! |
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும். இதில் · தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும் · போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜநா உட்பட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு எமது மகளின் அவலங்களை இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம் வரலாற்றில் இதுவரையில் இல்லாத மாபெரும் மனித அவலங்களை எமது இனம் எம் சொந்த பூமியில் சந்தித்து வருகின்றது. விரைந்து செயல்பட்டு எமது மக்களின் வாழ்வை மீட்டெடுப்பது எமது கடமை. அனைத்து மாநிலங்களிலும் போக்கு வரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. |
http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dZj0q0ecGG7X3b4F9Ei4d2g2h3cc2DpY2d436QV3b02ZLu3e
0 கருத்துரைகள்:
Post a Comment