புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க சிங்கள படையுடன் இணைந்து தேடும் இந்திய உளவு படை
>> Monday, January 26, 2009
|
முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க சிங்கள படைகளுடன் இணைந்து கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நிறைந்த முல்லைத்தீவு வீழ்ந்து விட்டது என சிங்கள ராணுவம் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து புலிகள் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ் ஈழம் மலர்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்த கருணா என்ற முரளீதரன் இந்த தகவலை சிங்கள இராணுவத்திடம் கூறியுள்ளார் என்றும், அந்த காட்டுப் பகுதிகளையும் அடையாளம் காட்டி கருணா இனத் துரோகம் செய்துள்ளார் என்றும் புலிகளின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இதன் அடிப்படையில் சிங்கள இராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள் முல்லைத்தீவு காட்டை முற்றுகையிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளிடம் உள்ள குட்டி விமானங்களை கண்டு பிடித்து கைப்பற்ற முன்னுரிமை கொடுத்து, அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க இந்தியாவும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், பிரபாகரன் இருக்கும் இரகசிய இடத்தை கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பிரபாகரன் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இது தவிர இலங்கையை சுற்றி இந்திய கடற்படை கப்பல் வளையம் போல நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கை இராணுவ கப்பல்களுடன், இந்திய கடற்படை கப்பல்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இலங்கையின் எந்த பகுதியிலும் விடுதலைப்புலிகள் வலுவாக இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறது. |
0 கருத்துரைகள்:
Post a Comment