சிறுநீர் கழித்தவருக்கு $1,000 அபராதம்
>> Thursday, February 26, 2009
சிறுநீர் கழித்தவருக்கு $1,000 அபராதம்
பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால், டாக்ஸி ஓட்டுநர் யாங் டென்ங் ஹுவாட்டுக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றத்திற்கு விதிக்கப்படும் அபராதங்களில் இதுவே ஆக அதிகமாகும். யாங் டென்ங் ஹுவாட், பாசிர் பாஞ்சாங் சாலையில் கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி சிறுநீர் கழித்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தன் டாக்ஸியிலிருந்து இறங்கிய யாங், ஒரு மின்சார பெட்டியின் பின்புறத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அப்பக்கமாக காரில் சென்ற மற்றொரு ஆடவரும் அவரின் உறவினரும், கத்தினர்.
ஆனால் அவர்களை யாங் பொருட்படுத்தவில்லை.
டாக்ஸி எண்ணை எழுதிக்கொண்ட அந்த ஆடவர், மூன்று நாட்கள் கழித்து, நில போக்குவரத்து வாரியத்திடம் புகார் செய்தார்.
இந்த புகார், தேசிய சுற்றுப்புற முகவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment