Breaking News:தமிழீழ தேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களின் உடைந்த பாகங்கள்
>> Friday, February 20, 2009
The wreckage of the LTTE aircraft shot down near the Katunayake airforce base- , and the parts of the wreckage of the aircraft crashed on to the Inland Revenue Department Building, being taken away by police officers. Pix by Pradeep Dilrukshana , Daminda Harsha Perera and Manoj Ratnayake |
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=41258
2 கருத்துரைகள்:
�தற்கொலைப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா?�
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தையும், சிங்கள அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்திய வான் புலிகள் படைப் பிரிவின் கரும்புலிகள் விமானங்களை இலக்குகளின் மீது வெற்றிகரமாக மோதவிட்டு வீரமரணமடைந்துள்ளார்கள்.
தற்கொலைப்படை தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்வதா என புலிகள் தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புலிகள் தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலும், ஈழ மக்களுக்கு விமானத் தாக்குதல் மூலம் பெரும் துயரை விளைவித்த இலங்கை விமானப் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தும் பொருட்டே இந்த தற்கொலைத் தாக்குதலை வான்புலிகளின் கரும்புலிகள் பிரிவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இலங்கை ராணுவம், இந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறிக் கொள்கிறது.
விமானத் தாக்குதல் நடந்து முடிந்த முதல் 3 மணி நேரங்கள் என்ன நடந்தது என்பதே தெரியாமல், செய்திச் சேனல்களுக்கு, வாய்க்கு வந்ததையெல்லாம் செய்திகளாகக் கூறிக் கொண்டிருந்தனர் கேகலிய ரம்புக்வெலவும், உதய நாணயக்கராவும்.
இந்தத் தாக்குதல் குறித்து எந்த செய்தியும் வெளியில் கசியக் கூடாது என்றும் ராணுவம் அனுமதிக்கும் செய்திகள் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
பிறகுதான், கட்டுநாயக விமான தளம் அருகே புலிகளின் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுக் கிடந்ததாகவும், அதிலிருந்த விமான ஓட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது. சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட விமானத்திலிருந்தவர் உடல் எந்தவித காயமும் படாமல், போட்டிருந்த யூனிபார்ம் கூட கசங்காமல் காட்சி தந்தது குறிப்பிடத்தக்கது!
மிளகாய்க்கு வெங்காயத்தின் பதில்,
அந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப் படவில்லை.அது வான் கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் .
அதைப் புலிகளே அறிவுத்து விட்டார்கள்.
அவர்கள் ஸ்ரீலங்காவின் வான் படைத் தலைமையகத்தையும் வான் படைத் தளத்தையும் தான் குறி வைத்து உள்ளார்கள்.
இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் பெரும்பாலும் வான் படையைச் சேர்ந்தவர்களே ஒழிய சிங்களப் பொதுமக்கள் அல்ல.
உலகத்தால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு நாடு வேண்டுமென்றே தமிழ் பொதுமக்கள் மீது குண்டுகள் போடுகிறது.
ஒரு அங்க்கீகரிக்கப் படாத இயக்கம் பொதுமக்களைக் குறி வைக்காமல் தாக்குதல் நடத்துகிறது.
யார் பயங்கர வாதிகள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
Post a Comment