|
சமீபத்திய பதிவுகள்
விடுதலைபுலிகளுடனான போர் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை போர் நீடிக்கும் என்று இலங்கை பிரதமர் விக்ரமநாயக்கே தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை இந்து பத்திரிக்கை இன்று(9.3.2009) வெளியிட்டு உள்ளது.
புலிகளை முற்றாக அழித்து வருகிறோம்,இன்னும் 45 கிலோ மிற்றர் மட்டுமே புலிகளிடம் எஞ்சியுள்ளது என்று பொய் பரப்புரையாற்றி வந்த மஹிந்தா கொலைகாரக்கூட்டத்துக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுதியிருக்கும்.
முன்னுக்கு பின் முரணான செய்திகளை பரப்பி மனதளவிலான வெற்றியை எப்படியும் பற்றி பிடித்துவிட அவர்கள் போட்டுள்ள கணக்கு தவிடு பொடியாக வன்னிக் களம் மற்றி வருகிறது.
இந்த நிலையில் எதிர்வரு 72 மணி நேரம் மிகப்பெரிய முடிவுக்கு வழிநடத்திச்செல்லும் என்று படைத்தரப்பு அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புலிகள் பாரிய ஊடறுப்புத்தாக்குதலை நடத்தி வரும் நிலையில் பலத்த சேதத்தை அடைத்துள்ள ராணுவத்தில் பல அணிகள் நிலைகுலைந்தே உள்ளது என்பது நமக்கு அறியத் தரப்படாத விடயமே.
இன்னும் ஒரு சில நாட்களில் களமுனையில் போராளிகளில் உச்சக்கட்ட தாக்குதலுக்கான சமரை எதிர்பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment