இலங்கை இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் பனிப்போர்
>> Wednesday, June 17, 2009
இந்த அதிகாரி குறிப்பிட்ட ஊடகவியலாளர்களை பழிவாங்க முனையும் முன்னர், வசந்த கருணாகொடவுடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக நேவி சம்பத் என்பவர் தலைமறைவானார். இதனையடுத்து வசந்த கருணகொட நேவி சம்பத் ஒரு தேசத் துரோகி என்றும், புலிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், இரகசியப் போலீசாரிடம் கூறி அவரை கைதுசெய்யுமாறு பரிந்துரைத்துள்ளார். இரகசிய போலீசார் நேவி சம்பத்தை கைதுசெய்து, விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது. சாட்சியாக மாறியுள்ள நேவி சம்பத்தின் வாக்குமூலத்தினால் திடுக்குற்ற சரத்பொன்சேகா மேற்குறிப்பிட்ட அந்த 5 ஊடகவியலாளருக்கும் உடனடியாக இராணுவ அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்கியுள்ளார். நேவி சம்பத் தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில், போர்ப் பகுதிகளில் இருந்து செய்திகளைச் சேகரித்து அனுப்பிய ஆசியப் பத்திரிகை தொடர்பாளரும், Bottom Line பத்திரிகை எழுத்தாளருமான ருவான் வீரக்கோன் தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த முறுகல் நிலை காரணமாக ஜனாதிபதியும் கோத்தபாயவும், அதிர்ச்சியடைந்துள்ளதாக உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. கடற்படைத் தளபதி வசந்த கருணகொடவுக்கு கட்டாய பதவி ஓய்வுகொடுத்து ஏதாவது ஒரு வெளி நாட்டுத் தூதுவராக நியமிக்க கோத்தபாய விரும்புவதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வு நிருபரிடம் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment