வெற்றிக் களிப்பில் இலங்கை: -அவலத்தில் தமிழ் மக்கள்-விசேட படங்களுடன்
>> Wednesday, June 3, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்ற இராணுவ வெற்றியை ஒருவார விழாவாக கொண்டாடுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இலங்கை அரசு. அதன் நிறைவு விழா பிரமாண்டமான விழாவாக துறைமுக நகரான கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் மூன்று மணி நேர விழாவாக நடந்து.
முன்னர் மனைவியுடன் இந்த விழாவுக்கு சென்ற ராஜபக்ஸ பௌத்த மதகுருவுக்கு பரிகாரம் செய்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் நடந்த விழாவில் முப்படைத் தளபதிகளுக்கும் போர் முடிந்து விட்டது. புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். நாடு சுதந்திரமடைந்து விட்டது என்ற அறிவிப்போலையை அதிகாரபூர்வமாக வழங்கினார்.
கடற்கரை நகரம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் சிங்கள மக்கள் பெரும் வெற்றிக் கழிப்பில் மிதந்தனர். அங்கு புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் சிங்கள மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினரின் வீர தீரங்களைப் போற்றிப் புகழும் பாடல்களுக்கு மாணவ மாணவிகள் நடனமிட, இலங்கையின் முப்படைகளும் அணிவகுப்பு சாகச நிகழ்ச்சியை மக்களுக்கு நிகழ்த்திக்காட்ட் இறுதியாக கௌரவ ஏற்பு உறையை நிகழ்த்திய ராஜபக்ஸ போர் முடிந்து விட்டது. இது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. இங்கு தமிழ் மக்கள் அச்சமின்றி ஒன்று பட்டு வாழ வழியேற்படுத்தும் பொறுப்பு பாசத்துக்குரிய இராணுவத்தினரான உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்றார்.
source:http://www.globaltamilnews.net
0 கருத்துரைகள்:
Post a Comment