''பாவம் போக்க வந்தீர்களா..?''
>> Wednesday, November 11, 2009
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரி நிருபமா ராஜபக்ஷேவும் அவரது கணவர் திருக்குமரன் நடேசனும் கடந்த 7-ம் தேதி இரவு திருச் செந்தூர் வந்திருந்தனர். மறுநாள் ராமேஸ்வரம் டிரிப். இந்தத் தகவல் தெரிந்து அங்கு திரண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், திருக் குமரன் தம்பதி இருந்த இடத்தில் கறுப்புக்கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருவரும் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றபோது, அங்கேயும் சிலர் கறுப்புக் கொடி காட்டினார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் சேர்த்து 18 பேரைக் கைது செய்தது காவல் துறை. ராமேஸ்வரத்தில் நிருபர் ஒருவர், ''இலங்கையில் தமிழினத்தை அழித்த பாவத்தைப் போக்கத்தான் ராமேஸ்வரம் வந்தீர்களா..?'' என்று கேட்டு விட... சட்டென்று சூடாகிப் போன திருக்குமரன், ''முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்...'' என்று சொல்லி விட்டு விருட்டென கிளம்பிவிட்டார். source:vikatan
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment