ப.சிதம்பரத்தை காணவில்லை: பரபரப்பு
>> Thursday, April 1, 2010
ப.சிதம்பரத்தை காணவில்லை: ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட இந்த துண்டு சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்கள் சார்பில் நேற்று (31.03.2010) ஆலங்குடியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் இந்த துண்டு சீட்டை ஒட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வடகாடு விஜய் ஆனந்த் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். நாங்கள் இந்த துண்டு சீட்டை ஒட்டவில்லை. அப்படி நாங்கள் ஒட்டியிருந்தால் எங்கள் பெயரையும் சேர்த்து ஒட்டியிருப்போம் என்று விஜய் ஆனந்த் போலீசாரிடம் கூறியுள்ளார். source:nakkheean
துண்டு சீட்டை யார் ஒட்டியது என்று தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
--
www.thamilislam.co.cc
1 கருத்துரைகள்:
அட போப்பா ... நல்ல செய்தி சொன்னியேன்னு உள்ள வந்து பாத்தா...........பொசுக்குன்னு ஆக்கிட்டே.. உன் பேச்சி டூ கா..........
Post a Comment