தீர்க்கதரிசிகளின் போதனையாகிய "தேவன் பிதாவாக இருக்கிறார்" என்பதை இஸ்லாம் நிராகரிக்கிறது.
>> Wednesday, April 9, 2008
மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.
2. தீர்க்கதரிசிகளின் போதனையாகிய "தேவன் பிதாவாக இருக்கிறார்" என்பதை இஸ்லாம் நிராகரிக்கிறது.
தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார் என்பதை யுதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் "தேவன் பிதாவாக இருப்பதாக" நாம் பல விவரங்களைக் காணலாம். படிக்க: http://www.muslimhope.com/FatherhoodOfGod.htm
அதாவது, சரீர பிரகாரமாக தேவன் நமக்கு தந்தையாக இல்லை, அதற்கு பதிலாக எல்லா விசுவாசிகளையும் அவர் தன் பிள்ளைகளாக கருதுகிறார் மற்றும் முக்கியமாக இயேசுவை அவர் உலகதோற்றத்திற்கு முன்பே தன் பிள்ளையாக பெற்றார். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த வேத பிரதிகளிலும் "தேவன் நமக்கு தந்தையாக" இருக்கிறார் என்பதை தெளிவாக காணமுடியும். படிக்க: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm
http://unmaiadiyann.blogspot.com/2008/04/19.html
2 கருத்துரைகள்:
என்ன திடிர்மாற்றம் தெய்வமகன்
அவர்களே
//என்ன திடிர்மாற்றம் தெய்வமகன்
அவர்களே//
எந்த மாற்றத்தை கேட்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? சென்னை குரல் அவர்களே
Post a Comment