சூரியனுக்கும்,காற்றுக்கும் குழந்தை -விஞ்ஞானிகள் அதிர்ச்சி?
>> Wednesday, April 9, 2008
பீமன் மகாபாரதத்தில் வரும் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பார்பாரிகன் இவரது பேரன்.
தர்மன் மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.
சகாதேவன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
கர்ணன் சூரியனால் குந்தி தேவிக்கு பிறந்தவர். ஆகையால் பஞ்ச பாண்டவர்களுக்கு மூத்தவர் ஆகிறார். பிறந்தவுடன் கர்ணனை தொட்டிலிட்டு ஆற்றுடன் அனுப்பி விடுகிறார் குந்தி. அதிரதன் என்ற தேரோட்டி இவரை வளர்க்கிறார். அதிரதனின் மனைவி ராதை. பிறக்கும் போதே காதில் குண்டலமும் கவசமும் தரித்து கர்ணன் பிறந்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment