ஆந்திராவில் 2 லட்சம் பேரிடம் தங்ககாசு மோசடி: 32 கிளைகள் மூடப்பட்டன- நிர்வாகிகள் தப்பிஓட்டம்
>> Wednesday, May 7, 2008
ஆந்திராவில் 2 லட்சம் பேரிடம் தங்ககாசு மோசடி: 32 கிளைகள் மூடப்பட்டன- நிர்வாகிகள் தப்பிஓட்டம்
நகரி, மே.7-
சென்னையில் உள்ள குவெஸ்ட்நெட் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்ககாசு மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழகம் முழுவதிலும் ஏராளமானோர் இந்நிறுவ னத்தில் பணம் கட்டி ஏமாந் துள்ளனர். இதே போல ஆந்தி ராவிலும் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தில் 2 லட்சத்திற் கும் மேற்பட்டோர் தங்ககாசு வாங்கி ஏமாந்துள்ளனர். அதிலும் ஐதராபாத்தில் தான் அதிக அளவில் இந்த மோசடி நடந்துள்ளது.
அங்குள்ள ஹிமாயித் நகரில் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இதன் கீழ் நகர் முழுவதிலும் 32 கிளைகள் செயல்பட்டு வந்தன.
இங்கு லட்சக்கணக்கா னோர் ரூ.33 ஆயிரம் கட்டி தங்க காசை வாங்கியுள்ளனர். தங்ககாசு விற்பனையில் அங்குள்ள அரசியல்வாதிகள் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
சென்னையில் தங்ககாசு மோசடி நடந்ததை அறிந் ததும் ஐதராபாத்தில் உள்ள பொதுமக்கள் அந் நிறுவனத்தை முற்றுகை யிட்டனர். இதனால் பயந்து போன நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் நிறுவனங்களை மூடிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அங்கு பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பலர் கடன் வாங்கி தங்க காசுகளை வாங்கியுள்ளனர்.
அவர்கள் ஐதராபாத் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதையடுத்து தப்பிஓடிய கோல்டு குவெஸ்ட் நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.http://www.maalaimalar.com/
0 கருத்துரைகள்:
Post a Comment