சமீபத்திய பதிவுகள்

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக 14 வயது சிறுவன்; ராணுவத்திடம் சிக்கினான்

>> Wednesday, June 11, 2008

 

காபூல், ஜுன் 11-

ஆப்கானிஸ்தானில் தலி பான் தீவிரவாதிகள் ஒன்றும் அறியாத சிறுவர்களை கூட மூளை சலைவை செய்து மனித வெடி குண்டாக பயன்படுத்தி வந்தார்கள்.

அப்படி அனுப்பப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் ராணுவத்திடம் சிக்கி இருக் கிறான். அவனது பெயர் சாகிருல்லா யாசின் அலி.

பாகிஸ்தான் வர்சிஸ்தான் பகுதியில் உள்ள தொண் டாலா கிராமத்தை சேர்ந்த வன். அவனை 2 தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து சென்று மனித குண்டாக பயன்படுத்த முயற்சித்துள்ளனர்.

இவன் மூலம் கார் வெடி குண்டை வெடிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவனுக்கு கார் ஓட்ட பயிற்சியும் அளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் ஒரு வீட்டில் அவனை அடைத்து வைத்து இருந்தனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க கூட்டு படையினர் அவனை கண்டு பிடித்து மீட்டனர்.

தற்போது அவனை ஆப்கானிஸ்தான் ஜெயிலில் அடைத்துள்ளனர். மனித வெடி குண்டாக மாறியது குறித்து சாகிருல்லா யாசின் அலி நிருபர்களிடம் கூறிய தாவது:-

நான் ஊரில் இருந்த போது முல்லா சலேப் என்ற தீவிரவாதியும் மற்றும் ஒரு வரும் என்னை சந்தித்தனர்.

அவர்கள் என்னிடம் நீ கடவுளுக்கு சேவை செய்யும் நேரம் வந்து விட்டது. வெளி நாட்டுக்காரர்கள் கடவுளுக்கு எதிரிகள். அமெரிக்கர் மற்றும் இங்கிலாந்து காரர்களை கொன்று மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அவர்களை குண்டு வைத்து கொல்வதன் மூலம் நீதியை வழங்கலாம். நீ அதற்கு தயாராக வேண்டும் நீ செய்யும் செயலுக்காக உன் குடும்பத்துக்கு நாங்கள் உதவி செய்வோம்.

கடவுளுக்கு சேவை செய்வது உன் கடமை. அதில் இருந்து தவறக் கூடாது. உன்னை கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி னார்கள்.

அதை நம்பி அவர்களுடன் சென்றேன். எனக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்து மனித குண்டாக பயன்படுத்த முயற் சித்தார்கள்.

குண்டு வெடித்தால் நான் செத்து போவேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

இவ்வாறு அவன் கூறினான்.
 
 
 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP