சமீபத்திய பதிவுகள்

விடுதலைபுலிகள் அதிரடி: 19 சிங்கள வீரர்கள் பலி- முகாமை ராணுவம் கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

>> Friday, June 13, 2008

 

கொழும்பு, ஜுன். 12-

இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைபுலிகளுக்கும் சண்டை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் கை ஓங்கி வருகிறது. விடுதலைப்புலிகள் புதிய உத்தியை கையாண்டு அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே எருக்கலம் பிட்டி கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த கடற்படை தளம் அழிக்கப்பட்டதுடன் 3 சிங்கள வீரர்கள் பலியானார்கள்.

வவுனியா மாவட்டம் குஞ்சும் குளம் பகுதியில் உள்ள விடுதலைபுலிகளின் முகாமை பிடிக்க ராணுவம் முன்னோக்கி நகர்ந்து வந்தது. விடுதலைப்புலிகள் நாலாபுறமும் ராணுவத் தினரை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

மாலை 6 மணிக்கு தொடங் கிய இந்த தாக்குதல் பல மணி நேரம் நீடித்தது. சரமாரியாக விடுதலைபுலிகள் ராக்கெட்டு களை வீசினார்கள்.

இந்த அதிரடி தாக்குதலில் 19 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். 23 சிங்கள ராணுவத்தினர் காயம் அடைந்தனர். விடுதலைப்புலிகளின் முகாமை ராணுவம் பிடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP