சமீபத்திய பதிவுகள்

வெற்றிகரமாக தரை இறங்கியது...

>> Thursday, June 26, 2008


   
 
 
பூமியில் இருந்து 67 கோடியே 90 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு உள்ளது. இதன்பலனாக செவ்வாய் கிரகத்தின் துருவப்பிரதேசங்களில் தண்ணீர் உறைநிலையில் இருப்பதை விஞ்ஞானிகள் கடந்த 2002-ம் ஆண்டு கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் முழுப்பகுதியையும் ஆராய்வதற்காக ராக்கெட் மூலம் `பீனிக்ஸ்' என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பியது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி இந்த விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்டது. அது மணிக்கு 21 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.

கிட்டத்தட்ட 10 மாத பயணத்துக்கு பிறகு மே 26-ந் தேதியன்று லண்டன் நேரம் இரவு 11.53 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் உறை பாலைவனத்தில் அது தரை இறங்கியது. அது செவ்வாய் கிரகத்தில் தரைஇறங்கியதற்கான சிக்னல் கிடைத்ததும் அமெரிக்காவில் பசடெனா நகரில் உள்ள தரைக்கட்டுப்பாடு நிலையத்தில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 

 

 
http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=6/21/2008&secid=93

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP