சமீபத்திய பதிவுகள்

சொல்வது ஒன்று செய்வது ஒன்று - அதன் பெயர்தான் இஸ்லாம்!

>> Thursday, July 3, 2008

சொல்வது ஒன்று செய்வது ஒன்று - அதன் பெயர்தான் இஸ்லாம்!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று - அதன் பெயர்தான் இஸ்லாம்!





"குர்ஆன் வசனங்களை நீங்கள் தவறாக மேற்கோள் காட்டுகின்றீர்கள்"


குரானின் வன்முறை வசனங்கள் எந்தச் சூழலில் சொல்லப்பட்டது என்று பார்க்க வேண்டும் என்று தக்கியா செய்வது (தக்கியா = கடவுளுக்காக பொய் பேசுவது). அதே சமயம், குரான் 'என்றைக்குமான உலகத் திருமுறை', அது 'எல்லாக் காலத்திற்கும் பொருந்தும், அதன் படி நடக்க வேண்டும்' என்று சொல்வது.



"முஹமது அன்றைக்கு செய்தவை, அன்றைய சூழலின் தேவைகள்"

முஹம்மது அன்றைக்கு செய்த செயல்களை இன்றைக்கு நிலவும் சூழலோடு பொருத்தி மதிப்பிடக் கூடாது என்பது (உதாரணம் தன்னை கடவுளின் தூதன் என்று நம்பிய நண்பனின் ஆறு வயது மகளை கடவுள் சொன்னார் என்று நம்பவைத்து கல்யாணம் செய்து கொண்டது, பல பெண்களின் கணவர்களைக் கொன்று அவர்களை அடைந்தது, தன்னை கடவுளின் தூதன் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களை கொடூரமாக சித்தரவதை செய்து கொன்றது). இன்னொரு புறம், முஹம்மது நபி உலகிற்கான 'அழகிய எடுத்துக் காட்டு' என்று வாதிடுவது. முஹம்மதைப் போலவே இன்றும் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசுவது.



"இஸ்லாம் என்பது அமைதி மார்க்கம்"

இஸ்லாம் 'அமைதி மார்க்கம்' என்று பிரச்சாரம் செய்வது. ஆனால், இஸ்லாத்தை முஹமது துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எந்த இஸ்லாமிய சமூகமும் அமைதியாக வாழ்ந்ததில்லை; அமைதியாக வாழ்ந்த மற்ற சமூகங்களின் அமைதியை அழித்தது இஸ்லாம் தான் என்ற உண்மையை ஏற்க மறுப்பது.



இஸ்லாத்தை தோற்றுவித்த முஹமது விஷத்தால் செத்துப்போனார். அவரது மகள் பாத்திமா, மருமகன் அலி, பேரன் ஹூசைன், அவரைத் தொடர்ந்த கலீஃபாக்கள் (உமர், அலீ) போன்றவர்கள் எல்லோரும் இந்த வன்முறை மார்க்கத்தின் வன்முறையினால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை பார்க்க மறுப்பது.






"அந்தக் காலத்தில் நிகழ்ந்தவைகளை இன்றைக்கு சுட்டிக் காட்டக் கூடாது"



வந்தேறி முஸ்லீம் மன்னர்கள் செய்த தவறுக்கு இஸ்லாத்தைப் பொறுப்பாக்கக் கூடாது, 'முஸ்லீம் பெயர் தாங்கி தீவிரவாதிகள்' செய்வதை வைத்து அதுதான் இஸ்லாம் என்று சொல்லக் கூடாது என்று வாதிடுவது. ஆனால், அதற்கு நேர் மாறாக செயல்பட்டவர்களைக் கொண்டாடுவது (பாகிஸ்தான் தனது ஏவுகனைகளுக்கு கோரி, கஜினி, திப்பு பெயர்களை வைத்து சந்தோஷப்படுவது. கோயம்புத்தூரில் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு பணம் கொடுப்பது, அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வது, அவர்களுக்காக முஸ்லீம் அரசியல் அமைப்புகள் போராட்டம் நடத்துவது, மதானியின் விடுதலைக்கு மசூதியில் பிரார்த்தனை நடத்துவது).



சுருக்கமாகச் சொன்னால், அன்றைக்கு முஹமதுவும், கலீஃபாக்களும், முஸ்லீம் மன்னர்களும் செய்த அதே செயல்களை இன்றைக்கு உலகெங்கும் முஸ்லீம் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளும் செய்கின்றன, அவற்றிற்கு இஸ்லாமிய சமூகம் ஆதரவு தந்து அதே செயல்கள் இன்றும் தொடர்வதை ஆதரிக்கின்றன என்ற உண்மையை ஏற்க மறுப்பது.



"அவரவர் மார்க்கம் அவரவர்க்கு, மற்ற தெய்வங்களை நிந்திக்காதீர்கள் என்றெல்லாம் குரான் சொல்கிறது"

இஸ்லாம் 'அவரவர் மார்க்கம் அவரவர்க்கு', 'மற்ற தெய்வங்களை நிந்திக்காதீர்கள்' என்று சொல்கிறது என்று தக்கியா செய்வது. ஆனால், முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் அவர்கள் மீது ஜிஹாது தொடுத்து மதம் மாறாதவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது (பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர்), அவர்களது கோவில்களை இடிப்பது (http://www.flex.com/~jai/satyamevajayate/temple1.html), இன அழிப்பை நடத்துவது (http://www.hindunet.org/hindu_history/modern/hindu_bangla.html), அவர்களை அவர்களது பூர்வீக நிலங்களை விட்டு விரட்டுவது.

'அவரவர் மார்க்கம் அவரவர்க்கு' என்றால் ஏன் அரேபியா முழுவதும் யூதர்கள் விரட்டப்பட்டார்கள், கிறித்துவர்கள் (அரேபியாவின் பூர்வீக அரபி கிறித்துவர்கள்) ஏன் தொடர்ந்து அழித்தொழிக்கப் படுகின்றார்கள். இஸ்லாம் தோன்றியபோது அரேபியாவெங்கும் இருந்த யூத, கிறித்துவ, ஏனைய மதங்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு என்ன நேர்ந்தது – இஸ்லாத்தை தோற்றுவித்த முஹமதுவே அரேபியாவில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லியுள்ளாரே, அவரைத் தொடர்ந்து 'சரியாக வழிநடத்தப்பட்ட' கலீஃபாக்களுள் ஒருவரான உமர் (இவர் முஹமதின் நண்பர் மற்றும் மாமனார் ஆவார்) இந்த முஹமதின் வாசகத்தை அடியொட்டி யூதர்களையெல்லாம் விரட்டினாரே சவுதி அரேபியாவில் இருந்து என்ற கேள்வியை கேட்டால் பதில் சொல்லாமல் விடுவது.



"இஸ்லாமே சத்திய மார்க்கம்"

இஸ்லாமே 'சத்திய மார்க்கம்' என்று பிரச்சாரம் செய்வது. வாதுக்கு வாருங்கள் என்று அழைப்பது. ஆனால், எதைச் சொன்னாலும் அவதூறு செய்கிறார்கள் என்று கலவரத்தில் ஈடுபடுவது(சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ர்ரீன், அயான் ஹிர்ஸி அலி, ஹெச்.ஜி.ரசூல்). அவதூறு சட்டம் என்று முஸ்லீம் நாடுகளில் இயற்றி, சத்திய மார்க்கத்தைப் பற்றிய வெளிப்படையான விவாதத்தை தடுப்பது.



இஸ்லாம் சத்திய மார்க்கம் என்றால், அந்த மார்க்கத்தைப் பற்றிய வெளிப்படையான விவாதங்களை இஸ்லாம் ஏன் தடுக்கிறது? சவுதி அரேபியாவில் கிறித்துவர்களை அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதுதானே? இந்து மத நிகழ்சிகளை சவுதி அரேபியாவில் நடத்த அனுமதி தருவதுதானே? மாறாக, மற்ற எந்த மதங்களின் நூல்களை வைத்திருந்தாலோ அல்லது வழிபாட்டில் ஈடுபட்டாலோ, சவுதியின் முத்தாவாக்கள் என்ற இஸ்லாமிய மத காவலாளிகள் வந்து பிடித்துக் கொண்டு போய் சிறையில் அடைத்துவிடுவார்கள் – இதுதான் இஸ்லாத்தின் உண்மையான போதனை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுப்பது.



"சவுதியில் இருப்பது அவர்கள் நாட்டு சட்டம் - எங்களை கேட்காதீர்கள்"

சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் இருப்பது அவர்கள் நாட்டு சட்டம் என்று சொல்வது. ஆனால், அது ஷரீய்யா சட்டம் என்பதை சொல்லாமல் விட்டு, இந்தியாவிலும் ஷரீய்யா சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராட்டம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது.



"பெண்களுக்கு இஸ்லாம் ஏராளமான உரிமைகளை தருகிறது"

பெண்களுக்கு இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே சம உரிமை, சொத்துரிமை தந்தது என்று பிரச்சாரம் செய்வது. 'அட, இன்று என்ன நிலை' என்று யாராவது கேட்டால், பெண்களுக்கு அவர்களின் 'இயல்புக்குத் தக்க உரிமைகளை அல்லாஹ் 1425 ஆண்டுகளுக்கு முன்பே தந்துவிட்டார்' என்று சொல்லி, சம உரிமை என்பது சைத்தானின் தூண்டுதல், ஆகவே பெண்கள் சவுதி அரேபியாவில் (ஷரீஅத்து சட்டப்படி) இருப்பது போல தலைமுதல் கால்வரை போர்வை போர்த்தி நடமாடவேண்டும், ஆண் துணை இல்லாமல் செல்லக் கூடாது, தனியே வேலைக்கு போகக் கூடாது, அந்நிய ஆண்களுடன் பேசக் கூடாது என்று சொல்வது.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் இருந்தது போன்று முழுக்க முக்காடு போட்டுக் கொள்வதுதான் உண்மையான பெண் சுதந்திரம் என்று வாதிடுவது, நாலு பெண்களை கட்டிக் கொள்வது அல்லாஹ் ஆண்களை 'ஒழுக்கமாக வைத்திருக்க', 'பெண்களை விபச்சாரத்திலிருந்து காப்பாற்ற' என்று சொல்வது, பெண்களை 'லேசாக' அடிக்கத்தான் கடவுள் சொல்லியிருக்கிறார் அதனால் அது தப்பில்லை என்று வாதிடுவது.



இஸ்லாத்திற்கு முன்பாக பெண்களின் நிலை மோசமாக இருந்தது என்று சொல்வது. ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது – முஹமதின் முதல் மனைவி கதீஜா பெரிய வியாபார நிறுவனத்தை தன்னந்தனியாக நடத்தினார், தான் விரும்பிய இளைஞரான முஹமதுவை தனது தந்தையின் விருப்பத்திற்கெதிராக மணந்து கொண்டார் – அப்போதெல்லாம் இஸ்லாம் இல்லை, இஸ்லாம் வந்தபின்பே பெண்கள் வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்டனர் அங்கே, முழுப்போர்வை போர்த்திக் கொள்கிற 'உரிமை', இயந்திரம் போல குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கும் 'உரிமை', ஆடு மாடுகளைப் போன்று பணத்திற்காக(மஹர்) அறுபது வயது கிழவனுக்கு தந்தையால் தள்ளப்படும் படும் 'உரிமை' போன்ற அடிமைத்தனத்திற்கான உரிமைகளையே இஸ்லாம் உரிமை என்ற பெயரில் கொடுத்தது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது.



"ஜிஹாது என்றால் 'முயற்சித்தல்' - அது உள்மனப் போராட்டம், அதில் வன்முறை கிடையாது"

ஜிஹாது என்றால் 'முயற்சித்தல்' - அது உள்மனப் போராட்டம், பேனாவால் எழுதுவது, பேசுவது, இணையத்தில் வாதிடுவது என்று சொல்வது. அதே சமயம், இந்தியாவை அழிக்க வேண்டும் என்று சொன்ன மதுரை இமாம் அலியை ஷஹீது (ஜிஹாதில் இறந்த இறைப் போராளி) என்று கொண்டாடுவது, போஸ்டர் ஒட்டுவது, பழனி பாபா (என்ற தீவிரவாதிக்கு) நினைவு நாள் அனுஷ்டிப்பது. அவர்களே உண்மையான இஸ்லாமியர் என்று பிரச்சாரம் செய்வது.



ஜிஹாது என்ற பெயரில் முஹமதின் காலத்திலேயே கொள்ளையடித்தார்கள், கொலை செய்தார்கள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் – இன்றும் ஜிஹாது என்ற போர் அறிவிப்பை செய்யுமிடமெல்லாம் இதெல்லாம் நிகழ்கிறது என்ற உண்மையை ஏற்க மறுப்பது.



"குரானில் அறிவியல் உண்மைகள் மலிந்திருக்கின்றன"

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் குரானில் அன்றே சொல்லப் பட்டுள்ளன என்று பிரச்சாரம் செய்வது. எங்கே என்று கேட்டால், தலையும் வாலும் இல்லாத குரான் வசனத்தைக் காண்பித்து இதுதான் அது என்று வாதிடுவது அல்லது 'இறைவனே நன்கறிந்தவன்' என்று ஒரே வார்த்தையில் எல்லாவற்றுக்கும் விடை சொல்லிவிடுவது.








"பாபர் மசூதியை மீட்டுக் கொடுங்கள்"

இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த இடத்திலேயே அரசு எங்களுக்கு மசூதி கட்டித் தரவேண்டும் என்று சொல்வது. அதே சமயம் 1947லிருந்து இதுவரை இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேசங்களான பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப் பட்டுள்ளதையும், இன்றும் பாகிஸ்தானில் புத்தர் சிலைகள் இடிக்கப்படுவதையும் (SWAT Region) பற்றி எவ்வித கண்டனமும் தெரிவிக்காதது. அப்படியே கண்டனம் என்ற பெயரில் ஒன்றை ஒப்புக்கு சொல்லிவிட்டு, அந்த இடங்களில் கோவில்களை மீண்டும் கட்டிக் கொடுக்காதது, சவுதி அரேபியாவில் இன்றிருக்கும் காபா என்ற இஸ்லாமிய ஆலயமே முன்பிருந்த கோவில்/வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு கட்டப்பட்டது தான் என்ற உண்மையை பார்க்க மறுப்பது.




"மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது, மனித உரிமை பறிபோகிறது"

தமிழ்நாட்டில் கோவில் இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என்று போராடுவது , வன்முறையில் இறங்குவது (தென்காசி கலவரங்கள்), எதற்கெடுத்தாலும் மனித உரிமை பறிபோகிறது என்று மனித உரிமை ஆர்வலர்களை துணைக்கழைத்துக் கொள்வது, மத மாற்றத் தடைச் சட்டம் எங்கள் உரிமைகளைப் பறிக்கிறது என்று கூப்பாடு போடுவது. ஆனால், முஸ்லீம் நாடுகளில் மற்ற மத வழிபாட்டுத்தலங்கள் கட்ட அனுமதி மறுப்பது, பிரச்சாரம் செய்ய முயல்கிறார்கள் என்று சிறையில் அடைப்பது (சவுதி அரேபியாவில் வருடா வருடம் கிறிஸ்துவர்கள் இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் படுகிறார்கள்), மெக்கா மதீனாவில் மற்ற மதத்தவர்களை (முஸ்லீம்களில் அஹமதி போன்ற பிரிவினரைக் கூட) உள்ளே விட மறுப்பது. கேட்டால் இது அல்லாஹ்வின் கட்டளை என்பது. மதம் மாறும் முஸ்லீம்களுக்கெதிராக மரண தண்டனை விதிப்பது (ஆஃப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த சட்டம் அமலில் இருக்கிறது).



"இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கின்றது"

இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கின்றது என்பது. மற்ற சமுதாயங்களில் சமத்துவம் இல்லை என்பது. அதே சமயம், இஸ்லாமியர்களின் ஆதர்ச சமுதாயமான சவுதி அரேபியாவில் சமத்துவம் இல்லை என்பதை சுட்டிக் காட்டினால் (அங்கே ஷியாக்கள் இந்தியாவின் தலித்துக்களைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் கோர்ட்டில் ஏறி சுன்னி முஸ்லீம்களுக்கு எதிராக சாட்சி சொல்ல முடியாது. இந்திய முஸ்லீம்கள் சவுதி அரேபியப் பெண்களை மணக்க முடியாது). சூடானில் இனவெறி நிலவுவதை ஒப்புக்கொள்ள மறுப்பது. அதே சமயம், அமெரிக்காவில் கறுப்பர்களுக்கெதிராக இனவெறி இருக்கிறது, இஸ்லாமே ஒரே தீர்வு என்பது. அமெரிக்காவில் கறுப்பர் ஜனாதிபதி ஆக வாய்ப்பிருக்கும் நிலையில், ஒரு அரபு நாட்டில் கூட கறுப்பின முஸ்லீம் ஜனாதிபதி அல்லது அரசராக ஆகும் வாய்ப்பே இல்லை என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது.

இந்து மதத்தில் ஜாதிக்கொடுமை இருக்கிறது என்பது. ஆனால், இஸ்லாம் என்ற மதத்தில் மட்டுமே நிரந்தரமாக தாழ்த்தப்படுத்தும் அடிமை முறை கடவுளின் (ஷரீயத்து)சட்டமாக இருக்கிறது, இஸ்லாத்தின் அங்கம் ஜிஹாது என்றால், அடிமை முறை ஜிஹாதின் அங்கம்(1962 வரை சவுதி அரேபியாவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டபூர்வமாக அனுமதிக்கப் பட்டது. அமெரிக்க நிர்ப்பந்தத்தால் இதை அரசு நீக்கவே இஸ்லாமிய அறிஞர்கள் நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் – 2003ல் சவுதி அரேபிய தலைமை உலேமா கவுன்சிலின் முக்கிய உறுப்பினர் இது குறித்து அடிமை முறை இஸ்லாத்தின் பிரிக்க இயலா அங்கம் என்ற ஃபத்துவா கொடுத்திருக்கிறார், இன்றும் சூடானில் அடிமை முறையை அரபு முஸ்லீம்கள் பின்பற்றி கறுப்பின சூடான் முஸ்லீம்களை அடிமைகளாக வைத்திருக்கின்றனர். முஹமது அடிமைப் பெண்ணான மரியத்திடம் முறையற்ற உடலுறவு வைத்திருந்தார். அடிமைப் பெண்களை வன்புணர்ந்து அவர்கள் கர்ப்பம் தரித்தால் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்ற ஷரீயத்து சட்டம் முஹமது-மரியம் தொடர்பு அதைத் தொடர்ந்த சம்பவங்களிலிருந்தே தோன்றியது) எனவே மனிதர்களை தாழ்வாக நடத்துவது இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி என்பதையும், இன்றும் இந்த அடிமைகளின் வாரிசுகள் சவுதி அரேபியாவில் மற்ற அரபியருக்கு சமமாக நடத்தப்படுவதில்லை என்பதையும் ஏற்க மறுப்பது.



"இஸ்லாம் என்பது வெறும் மதம் அல்ல, முழுமையான வாழ்க்கை நெறி"

இஸ்லாம் என்பது வெறும் மதம் அல்ல, 'முழுமையான வாழ்க்கை நெறி' என்பது. முஸ்லீம்கள் அனைவரும் எல்லா விஷயத்திலும் இஸ்லாம் சொல்வதன் படியே நடக்க வேண்டும் என்பது. ஆனால், கவுரவக் கொலைகள், ஜாதி அமைப்பு போன்றவை முஸ்லீம்களிடத்தில் இருப்பதைக் காண்பித்தால், அது இந்த நாட்டின் கலாச்சாரத்தால் ஏற்பட்ட சீரழிவு என்பது. அதே சமயம் அஷ்ரஃப், அஜ்லஃப் முஸ்லீம் ஜாதிப் பிரிவுகள் அரேபியாவிலேயே இருக்கின்றன, இந்த வார்த்தைகளே அரபு வார்த்தைகள் என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது. அடுத்த நொடியில், முஸ்லீம்களில் பிற்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது. ஜாதியில்லை இஸ்லாத்தில் என்றால், பின்பு எப்படி இன்னமும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் இருக்கிறார்கள், ஆயிரம் வருடங்கள் ஆகியும் இந்தியாவில் இஸ்லாத்தால் ஜாதியை நீக்க முடியவில்லை என்றால், இத்தனை சமத்துவம் பேசுவது எதற்கு என்பதை சிந்திக்க மறுப்பது.



"குர்ஆன் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே வடிவத்தில் இருக்கிறது"

குர்ஆன் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே வடிவத்தில் இருக்கிறது, இஸ்லாமியர்களில் எந்த பேதமும் பிரிவும் இல்லை என்பது. அதே சமயம், ஷியாக்களின் குரான், அஹமதிக்களின் குரான் மாறியிருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது. குரானை கடவுளே காப்பாற்றுகிறார் என்பது, அப்போது மற்ற வேதங்களை ஏன் கடவுள் காப்பாற்ற மறுத்தார்* என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து, 'இறைவனே எல்லாவற்றையும் நன்கறிந்தவன்' என்று பகுத்தறிவுக்கு முரணாக பேசுவது. ஆனால், தனியாக மசூதியில் ஷியாக்கள் தவறாக கடவுளின் வார்த்தைகளை திரிக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மசூதியில் தொழும் போது குண்டு வைப்பது(பாகிஸ்தான், ஈராக்), அவர்களது ஹூசைனியத் மசூதிகளை,தர்காஹ்க்களை இடிப்பது(சவுதி அரேபியா), ஷியாக்கள், அஹமதிக்கள் காஃபிர்கள் என்று சொல்வது.



*

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இறைவன் ஏற்கெனவே இதே குரானை மற்ற நபிமார்கள் மூலம் உலகின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பினார். ஆனால், மற்றவர்கள் அதை திரித்துவிட்டார்கள். இப்படி தொடர்ந்து எல்லா இடங்களிலும் நடக்கவே, கடவுள் குரானை மட்டும் இப்படி மனிதக்கரங்கள் பாழ்படுத்துவதிலிருந்து காப்பேன் என்று உறுதி கூறியிருக்கின்றார்.




"நபிகள் நாயகம் உலகிற்கு அழகிய எடுத்துக் காட்டு"

நபிகள் நாயகம் என்ற முஹம்மதே 'உலகிற்கு அழகிய எடுத்துக்காட்டு' என்று பிரச்சாரம் செய்வது. அப்படியென்றால், அடுத்தவன் மனைவியை அபகரிப்பது (முஹமதின் வளர்ப்பு மகன் ஜைதின் மனைவியை முஹமது திருமணம் செய்து கொண்டார், கடவுள் சொன்னதாகக் கூறி), நண்பனின் ஆறு வயது மகளை அபகரிப்பது (முஹமதின் நெருங்கிய நண்பரான அபூ பக்கரின் ஆறுவயது மகளை கனவில் அல்லாஹ் கல்யாணம் செய்துவைத்துவிட்டார் என்று கூறி திருமணம் செய்துகொண்டார் முஹமது), ஒரு பெண்ணின் கணவனை, தந்தையை கொலை செய்துவிட்டு அவளை அவளது விருப்பத்திற்கு மாறாக மணந்து கொள்வது (சஃபிய்யா என்ற யூதப்பெண்ணை இப்படி முஹமது கல்யாணம் செய்து கொண்டார் - முதலில் சபியாவை வேறொரு முஸ்லீமுக்கு கொடுத்துவிட்டு, பின்பு அழகாயிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் கூப்பிட்டுப் பார்த்து தான் எடுத்துக் கொண்டார், இது போல வேறு இரண்டு பெண்களை முஹமது அடைய முயற்சிக்கும்போது முஹமதின் மனைவிகளே அந்தப் பெண்களை தப்புவித்தார்கள்), கொள்ளையடிப்பது (கஸ்வா, அன்ஃபால்), பெண்களை தனது மருமகனுக்கே அனுபவிக்கக் கொடுப்பது (முஹமது பல சமயங்களில் தனது மருமகன்களுக்கே போரில் பிடிக்கப்பட்ட பெண்களை அனுப்பி வைத்தார்) என்றெல்லாம் செய்த மனிதரை உத்தம நபி, அமைதியான நபி, கடவுளின் தூதர் என்றெல்லாம் புகழ்வது.



"பார்ப்பனர்கள் தமிழர்களின் எதிரிகள், இஸ்லாமியர்கள் தமிழ்ப் பற்றாளர்கள்"

பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தை கோவிலில் ஓதுகிறார்கள், அதனால் அவர்கள் தமிழர்களின் எதிரிகள் என்று சொல்வது, அல்லது அப்படி சொல்ல திராவிட இயக்கங்களை, அப்பாவித் தமிழர்களை தூண்டிவிடுவது.

தமிழ் தமிழ் என்று பார்ப்பவர்களை ஏமாற்றுவது. ஆனால், அதே சமயம் மசூதியில் அரபியிலேயே குரான் ஓதப்பட வேண்டும் ஏனென்றால், அதுவே கடவுளின் வார்த்தை என்பது.

இலங்கையில் தமிழ் ஈழத்தை எதிர்ப்பது தமிழ் முஸ்லீம்கள், அங்கே தங்களை தமிழர்கள் என்று அழைக்காமல் முஸ்லீம்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்புக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக இருப்பது தமிழ் முஸ்லீம்கள் தாம், தங்களை அங்கே அரேபியர்களாகவே அழைத்துக் கொள்கிறார்கள், நாளையே தமிழ்நாட்டிலும் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த நிலைப்பாட்டையே எடுப்பார்கள் – உலகெங்கும், மொழியைவிட மதத்திற்கே இஸ்லாமியர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் (பாலஸ்தீனத்தில் அரபு கிறித்துவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, பங்களாதேஷில் வங்கமொழி பேசும் இந்துக்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, காஷ்மீரில் அதே காஷ்மீரி பேசும் இந்துக்களை விரட்டியடித்தது) என்ற உண்மையை மறைப்பது.



"இஸ்லாமிய சமூகம் பின் தங்கியிருப்பது மற்றவர்களால்"

தினமும் ஐவேளை தொழ வேண்டும், எப்போதும் கடவுளின் கட்டளைகளையே நிறைவேற்ற வேண்டும், ஃபிதாயீனாக குண்டு கட்டிக் கொண்டு செத்தால் சொர்க்கம், எப்போதும் குரான் ஓதிக்கொண்டிருந்தாலே போதும், அதிலேயே எல்லா அறிவியலும் இருக்கிறது, முஸ்லீம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது மதராஸாக்களிலேயே பயில வேண்டும் என்று சொல்வது. மதராஸாக்களை, அரபி பாடசாலைகளை ஊருக்கூர் ஏற்படுத்தி சவுதி அரசு கொடுக்கும் மாணியத்தில் அவற்றை நடத்தி, அங்கே முஸ்லீம் பிள்ளைகளுக்கு இலவசமாக எல்லாவற்றையும் வழங்கி அவர்களை ஈர்ப்பது.



அதே சமயம் முஸ்லீம் சமூகங்கள் பின் தங்கி இருப்பதற்கு பார்ப்பன சதி, அமெரிக்க சதி, யூத சதி ஆகியவையே காரணம் என்று புலம்புவது. தினமும் ஐவேளை தொழுகை என்றால், எப்படி பாக்டரியில் வேலை செய்ய முடியும்? நான்கு மனைவிகள் நாற்பது குழந்தைகள் என்றால் எப்படி முன்னேற முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்டால், அதெல்லாம் கடவுளுக்கே தெரியும். அதனால் தான் எல்லா நபிமார்களும் பல மனைவியருடன் இருந்திருக்கின்றார்கள், முஹம்மது தனது சமூகம் எண்ணிக்கையில் மற்ற நபிகளின் சமூகத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார், குடும்பக் கட்டுப்பாடு கடவுளுக்கு எதிரானது என்று வாதிடுவது.



"தீவிரவாதச் செயல்களுக்கு இஸ்லாம் மீது குற்றம் சுமத்தக் கூடாது"

தீவிரவாதச் செயல்களுக்கு இஸ்லாம் மீது குற்றம் சுமத்தக் கூடாது. எல்.டி.டி.ஈ அமைப்பை மட்டும் ஏன் இந்து தீவிரவாதிகள் என்று சொல்ல மறுக்கின்றீர்கள் என்று கேட்பது. பதிலுக்கு முஸ்லீம் தீவிரவாதிகள் உலக கிலாபத்துக்காக (Islamic Caliphate), அல்லாஹ்வுக்காக ஜிஹாது செய்யும் அதே நேரத்தில், எவ்வித மதக் காரணமும், நோக்கமும் இவ்வகை அமைப்புகளுக்கு இல்லை என்பதை கவனிக்க மறுப்பது.



தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என்ற காரணத்தால் இன்றுவரை ஒரு முஸ்லீம் கூட காஃபிர் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாத்தை நவீனப்படுத்த நல்வழிப்படுத்த எந்த முஸ்லீம் முனைந்தாலும் அவர்கள் காஃபிர்கள் என்று மசூதியில் அறிவிக்கப்பட்டு சமுதாய விலக்கம் செய்யப்படுகிறார்கள்* என்ற உண்மையை ஏற்க மறுப்பது.

*தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியதற்காக காஃபிர் என்று அறிவிக்கப்பட்டு ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், கோவையில் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு மசூதிகளில் பணம் வசூல் செய்யப்பட்டு அவர்களது விடுதலைக்கு ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயமும் போராடியது.



"அமெரிக்கா சைத்தான். ஈராக்கில் கொடுமை"



அமெரிக்கா சைத்தான் என்பது. ஈராக்கில் முஸ்லீம்களை அமெரிக்கா கொன்று குவிக்கிறது என்பது.

அதே சமயம், இன்றைய சவுதி வஹாபிஸத்தின் பெரும் பாதுகாவலன் அமெரிக்கா என்ற உண்மையை ஏற்க மறுப்பது. அமெரிக்க உதவியுடன் சவுதியில், ஏனைய அரபு நாடுகளில் எண்ணையை எடுத்து, அமெரிக்க உதவியுடன் விற்று, அமெரிக்க உதவியுடன் அதை முதலீடு செய்து, அமெரிக்க தொழில் நுட்பங்களின் மூலம் வசதிகளை அனுபவிக்கும் அதே சவுதி அரச குடும்பமே இன்று உலகெங்கும் மசூதிகளையும், அரபி பாடசாலைகளையும் கட்டி பண உதவி செய்கிறார்கள், அமெரிக்க உதவியினால் பெரும் பலனடைந்தது அரபு நாடுகள் தான், இல்லையென்றால் இன்றும் பதூயீன்களாக(Bedoins) , நாடோடிகளாகத்தான் அரபிக்கள் இருந்திருப்பார்கள், இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் வஹ்ஹாபிஸமும் உலகெங்கும் பரவியிருந்திருக்காது என்ற உண்மையை ஏற்க மறுப்பது. இன்னொரு புறம், வாய்ப்பு கிடைத்தால் ஐரோப்பாவுக்கு ஓடுவது முஸ்லீம்கள் தாம், தங்கள் நாட்டில் நிலவும் மனித உரிமை இல்லா சூழலினால், அமெரிக்காவுக்கு விஸா கிடைத்தால் உடனடியாக ஓடி அங்கே செட்டில் ஆக அனைத்து முஸ்லீம்களும் விரும்புகின்றார்கள்; இந்த ஷைத்தான் நாடுகள் மீது மற்றவர்களைக் காட்டிலும் முஸ்லீம்களுக்கே அதிக பிரியம் இருக்கிறது என்ற உண்மைகளை ஏற்க மறுப்பது.



"இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முஸ்லீம்களை துன்புறுத்துகிறார்கள்"

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முஸ்லீம்களை துன்புறுத்துகிறார்கள் என்பது. அதே சமயம், இஸ்லாமிய நாடுகளில் இந்துக்களை, யூதர்களை, கிறிஸ்துவர்களை கொடுமையாக துன்புறுத்துவது, அடிப்படை உரிமைகளை தர மறுப்பது. பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷில் இருந்தும் இந்துக்களை விரட்டியடிப்பது.



"இஸ்லாம் என்பது வாளால் பரப்பப் படவில்லை"



இஸ்லாம் என்பது வாளால் பரப்பப் படவில்லை என்பது. அதே சமயம், தங்களது முன்னோர்கள் போரில் தோற்றே முஸ்லீம் ஆனார்கள், கற்பழிப்புக்கு உள்ளானார்கள், இவற்றின் காரணமாகவே மதம் மாறினார்கள்* என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது.

இன்றைக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாளின் துணையில்லாமல் இஸ்லாம் பரவுகிறது என்பது. அதே சமயம் வாள் முனையில் கடகடவென்று நூறு-இருநூறு வருடங்களிலேயே உலகம் முழுவதும் பரவிய இஸ்லாம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மென்மையான மதமாற்றாத்தால் பெரும்பான்மை மதமாகவில்லை என்ற உண்மையை ஏற்க மறுப்பது.

*முஹமது அமைதியாக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தபோது மதம் மாறியவர்கள் வெறும் சில பத்து நபர்களே. ஆனால், கொள்ளையடிக்கத் துவங்கியபின், கொலை செய்து சித்தரவதை செய்யத்துவங்கியதன் பின் அவரது மதத்தை மெக்கா, மதீனா முழுவதும் ஏற்றுக் கொண்டது. ஏற்காதவர்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டனர். அதே போல இந்தியாவில் சூஃபிக்களால் மதம் மாறியவர்களைவிட முஸ்லீம் படையெடுப்புகளின் பின் மதம் மாறியவர்களே ஏராளம். அந்த சூஃபிக்களும் இப்போது காஃபிர்கள் , உண்மையான இஸ்லாத்தை அறியாதவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.



"உங்கள் வேதத்தில் எங்கள் நபி நாயகத்தின் பெயர் இருக்கிறது"

மற்ற மத நூல்கள் எல்லாம் மனிதக் கரங்கள் பட்டுக் கறைபட்டுவிட்டன என்பது. அதே சமயம், அப்படி 'கறைபட்ட' நூல்களிலிருந்தே முஹமதுதான் இறைத்தூதன் என்பதற்கு 'ஆதாரங்களை' எடுத்து வைப்பது. இந்துக்களின் வேதத்தில் முஹமதின் வருகை குறிக்கப்பட்டுள்ளது, யூதர்களின் தோராத்து (Torah) நூல்களில் முஹமதுவின் வருகை சொல்லப்பட்டுள்ளது, பைபிளில் முஹமதுவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று சம்பந்தம் சிறிதும் இல்லாத வசனங்களை மேற்கோள் காட்டுவது.



"குரான் மற்றும் ஹதீஸ்களே இஸ்லாத்தின் அடிப்படை"



குரான் மற்றும் ஹதீஸ்களையே ஆதாரமாக எடுத்து வைத்து வாதிட வேண்டும் என்பது. அவையே இஸ்லாத்தின் அடிப்படை என்பது. ஆனால், ஹதீஸ்களில் எந்த ஹதீஸைக் காட்டினாலும் இது சரியான (சஹீ) ஹதீஸ் இல்லை என்பது. இன்னொரு புறம் அதே ஹதீஸ்களை அடிப்படையாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஷரீயத்து சட்டங்களை கடவுள் ஏழு வானங்களுக்கு அப்பால் இருந்து வகுத்துத் தந்தது என்று வாதிடுவது.




"இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம்"

இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் கிடையாது, பேய் பிசாசு மாந்திரிகம் பில்லி சூனியம் எல்லாம் கிடையவே கிடையாது என்பது. ஆனால், அதே பேய் - பிசாசு விஷயங்களை மலக், ஜின், காஃபிர் ஜின்கள், மலக் கொண்டு வந்த கல், ஜின்கள் கட்டிய மாளிகை, சூனியம் வைப்பவருக்கு தண்டனை என்பதெல்லாம் 'இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்' என்பதை ஏற்க மறுப்பது.



சிவலிங்கம் போன்றிருக்கும் கறுப்புக் கல்லை (இதை பூமிக்கு கொண்டு வந்தது ஜிப்ரீல் எனும் மலக்காம்) முத்தமிடுவது, காபா கோவிலை ஏழு முறை சுற்றி வருவது, சஃபா மர்வா போன்ற மலைகளை புனித யாத்திரையின் போது நடந்து கடப்பது, கடவுளுக்காக ஒட்டகத்தை (முஹமது பலி கொடுத்தது போன்று) பலி கொடுப்பது, சைத்தானை கல்லால் அடிப்பது, ஜம்ஜம் புனிதத்தீர்த்ததை அருந்துவது - இதெல்லாம் பகுத்தறிவு மார்க்கமா என்று கேட்டால், முஹமது செய்தார் சொன்னார் அதனால் செய்கிறோம் என்று பகுத்தறிவுக்கு புறம்பாக பேசுவது.



"ஒழுக்கத்தை கட்டிக் காக்கும் மதம் இஸ்லாம்"

ஓரினச் சேர்க்கை கடவுளுக்கு எதிரானது, இது ஒழுக்கமான மார்க்கம், பெண்களை பார்க்கும்போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று முஹமது சொன்னார் என்றெல்லாம் சொல்வது. அதே சமயம், உண்மையான முஸ்லீம்களுக்கு (மற்றவர்களை குண்டு வைத்துக் கொன்று, தானும் செத்து போகும் முஸ்லீம்கள்) சொர்க்கத்தில் உண்மையான முஸ்லீம்களுக்கு கடவுள் 'முத்து போன்ற சிறுவர்களை'யும், ஏராளமான கன்னிப் பெண்களையும், முஹமதைப் போன்று இருமடங்கு செக்ஸ் வலிமையையும் தருவார் என்று நம்புவது.
 
http://islaamicinfo.blogspot.com/2008/06/blog-post_20.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP