சமீபத்திய பதிவுகள்

ஒரிசா,கர்நாடகத்தில் மதக் கலவரம்:விரிவான அறிக்கைதர பிரதமர் உத்தரவு

>> Friday, October 3, 2008

 
lankasri.comஒரிசா மற்றும் கர்நாடகத்தில் அண்மையில் ஏற்பட்ட மதக் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்குமாறு உள்துறை அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இரு மாநிலங்களிலும் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் இங்கு நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விரு மாநிலங்களிலும் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது. அதற்கு வசதியாக ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பி.ஆர். தாஸ்முன்ஷி கூறினார்.

ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்று கேட்டதற்கு, அரசியல் சட்ட விதிகளுக்கு உள்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக முன்ஷி பதிலளித்தார்

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP