சமீபத்திய பதிவுகள்

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும்:அத்வானி அழைப்பு

>> Saturday, October 4, 2008

 

 
 
lankasri.comதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அழைப்பு விடுத்துள்ளார்.தில்லியில் உள்ள அத்வானியின் இல்லத்தில் வியாழக்கிழமை ஜோத்பூர் தலைமைக் காஜி அயூப் சாகிப் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவினர் அவரைச் சந்தித்துப் பேசினர்.

பாஜகவின் மற்றொரு தலைவர் நஜ்மா ஹெப்துல்லாவும் அவர்களுடன் சென்றிருந்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியது:

முஸ்லிம் மக்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கரங்களை இணைத்துப் போராட வேண்டும் என்று அத்வானி கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். முஸ்லிம் மதத்தில் உள்ள ஒரு சில தீய நபர்கள் அந்த மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர். இதற்கு வறுமை, வேலைவாய்ப்பு இன்மையும் முக்கியக் காரணமாகிறது. மத்தியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்தான் இதற்குப் பொறுப்பு என்ற நஜ்மா ஹெப்துல்லா குற்றம்சாட்டினார்.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP