இராக்கில் மசூதி அருகே குண்டு வெடித்து 22 பேர் சாவு
>> Thursday, October 2, 2008
|
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
|
|
இன்று தேசமே காந்தியடிகளாரின் பிறந்த நாளை கொண்டாடிகொண்டு இருக்கிறது. நாட்டிற்கு சுதந்திரம் அகிம்சை முறையில் பெற்று தந்த மகானின் பிறந்த இன்நன்நாளில் எல்லா இந்தியர்களும் வெட்கபடும் அளவிற்கு ஒரிசாவில் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது.
சமுதாய சேவைக்காக கடந்து சென்றுள்ள அன்னை தெரசா மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திர்க்கு நேர்ந்த கொடுமை நிச்சயம் மனித நேய ஆர்வலர்கள் அனைவருக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகும். செப்டம்பர் 30ந் தேதியிட்ட தி ஹிந்து நாளிதலின் முதல் பக்கத்தில் வந்த செய்தியே அது. இது போல் நடந்த சம்பவம் வெளியே வராமல் இருந்தது எத்தனையோ கடவுளே அறிவார்.
28வயது மதிக்கதக்க இறைபணியாற்றும் அருட்சகோதரியை மதவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு கும்பல் (மன்னிக்கவும் இதை மதவாத இயக்கம் என்பதை இனி இந்து மத தீவிரவாதிகள் என சொல்வதுதான் சரியாக இருக்கும்) இழுத்து வந்து அவருடைய ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த அருட்சகோதரி காவல்துறையினரின் காலைபிடித்து காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என அவர்களே இந்த கும்பலிடம் ஒப்படைத்துவிட்டனர்.
மேலும் அருட்பணீயாற்றும் சகோதரரையும் அவருடைய ஆடைகளை களைந்து இந்த சகோதரியிடம் தவறாக நடக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரையும் காவல் துறையினரின் முன்னிலையிலேயே அடித்து துன்புறுத்தபட்டுளார். இது ஒரிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் பெலிகூடா பகுதியில் நடந்துள்ளது.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல. இந்துமத தீவிரவாதிகளே உங்களுக்கு உடன்பிறந்து சகோதரிகள் இல்லையா? உங்களை பெற்றதும் ஒரு பெண்தானே? அவர்களை விட எவ்விதத்தில் இவர்கள் குறைந்து போனவர்கள் இல்லை. இப்படி கடினமான பகுதிக்கு வ்ந்து சேவை செய்ய மருத்துவ வசதியில்லாத சாலைவசதியில்லாத படிப்பறிவில்லாத மேம்பாடு அடையாத பகுதிக்கு வந்து சமுதாய சேவை செய்யவேண்டும் என்பது என்ன அவர்கள் தலையெழுத்தா? ஏன் ஏன் கிறிஸ்துவின் அன்பினாலே நெருக்கப்பட்டவர்களாக எப்படியாயினும் இப்படிப்பட்ட மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சென்றுள்ள சகோதரியை இப்படி கற்பழித்த கயவர்களே இந்துமத தீவிரவாதிகளே ஒன்று கேளுங்கள். கிறிஸ்தவர்களூம் இஸ்லாமிய சகோதரர்கள் மாதிரி பதிலுக்கு பதில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று கூவிப்பதற்காக வெகுண்டு எழுவார்கள் என நினைக்கவேண்டாம். மாறாக இன்னும் நாங்கள் மனிதர்களை நேசிக்கதான் செய்வோம். சமுதாய சேவை செய்யதான் போறோம். ஆனால் ஒன்று நிச்சயம். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். என்பதுபோல நிச்சயம் இறைவன் நீதி செய்வான்.
. அவருடைய நீதீ நியாயமாயிருக்கும். இதிலிருந்து ஒருவனும் தப்ப முடியாது.
Source from the Hindu : http://www.hindu.com/2008/09/30/stories/2008093058040100.htm
புதுடெல்லி, அக்.2-
இன்று முதல் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்களில் புகை பிடிக்க தடை
உலகில் புகையிலை பழக்கத்தால் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். மேலும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மே மாதம் 30-ந் தேதி வெளியிட்டது. பொது இடங்களில் புகை பிடிக்க வகை செய்யும் இந்த சட்டம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இன்று முதல் அமல்
இதை எதிர்த்து இந்திய புகையிலை நிறுவனம், இந்திய ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்த அனுமதி அளிக்க கோரியும், இந்த எல்லா ரிட் மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு பிறப்பித்த சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது.
எனவே பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
ரூ.200 அபராதம்
ஆகவே இன்று முதல் பஸ் நிறுத்தம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் யார்-யார்? என்பது பற்றிய விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
மத்திய மந்திரி கடிதம்
பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்டு உள்ள சட்டத்தை அமல்படுத்துமாறு கோரி மத்திய சுகாதார துறை மந்திரி டாக்டர் அன்புமணி அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மூலம் வசூலாகும் பணத்தை மாநில அரசுகள் புகையிலை தடுப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் இல்லையேல் அரசு கருவூலத்தில் செலுத்தலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.
ஜார்கண்ட், டெல்லி, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து அந்த மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளன. ஆனால் பீகார், மராட்டியம் போன்ற சில மாநில அரசுகள் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிப்பது தங்களால் இயலாத காரியம் என்று கூறி இருக்கின்றன.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442160&disdate=10/2/2008
Attacks
See the movie Fitna
தமிழ்வின் |
நிதர்சனம் |
தமிழ்நாதம் |
முரசம் |
தமிழ்ஓசை |
பதிவு |
சுவிஸ்தமிழ் |
சங்கதி |
அதிர்வு |
யாழ் |
|
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP