வன்னி மனித பேரவலத்தை இருட்டடிப்புச் செய்யும் கொழும்பு ஊடகங்கள்
>> Friday, January 23, 2009
வன்னி மனித பேரவலத்தை இருட்டடிப்புச் செய்யும் கொழும்பு ஊடகங்கள் |
|
வன்னியில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திவரும் உக்கிரமான தமிழின அழிப்புப் படையெடுப்பில் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள-ஆங்கில ஊடகங்கள் செய்திகள் எதனையும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. |
சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கின்ற செய்திகளுக்கு மாத்திரமே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறிப்பாக ஆங்கில ஊடகங்களில் விடுதலை புலிகளின் தலைவர் வே பிரபாகரன் நாட்டை விட்டு வெளியேறுவார் என்பது தொடர்பாகவும் அவரது உடல் நிலை குறித்தும் கற்பனை கலந்த விமர்சனங்களுடன் செய்திகள் வெளியிடுகின்றன. அத்துடன், ஊடக பண்புகளுக்கு மாறான செய்திகளும் வரையறை இன்றி விடுதலைப் புலிகளை மட்டும் விமர்சிக்கும் கேலிச்சித்திரங்களும் வெளியிடப்படுகின்றன. நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்பட்ட "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடும் அவ்வாறான செய்திகளையே பிரசுரித்து வருகின்றது. மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் என்பதற்கு அப்பால் சிறிலங்காவின் சிங்கள தேசியம் என்ற உணர்வுகளின் அடிப்படையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. அதேவேளை, சில ஆங்கில-சிங்கள ஊடகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமவை ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் அதற்கு ஏற்ப போரில் படைகளுக்கு ஏற்படுகின்ற இழப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாகவே சில சிங்கள-ஆங்கில ஊடகவியலாளர்கள் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுகின்றனர். இதேபோன்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒருசில தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளும் வன்னியில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்ற செய்திகள் தொடர்பாக இருட்டடிப்புச் செய்வதுடன் சிறிலங்கா அரசாங்கம் வெளியிடும் செய்திளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. |
http://www.puthinam.com/full.php?2bWOqJe0d1c1K0ecRD413b4BcIg4d2l4l3cc2HsV4d438WS2b026St3e
0 கருத்துரைகள்:
Post a Comment