|
சமீபத்திய பதிவுகள்
தமிழக முதல்வரை ஏமாற்றிய சிறிலங்கா விமானப்படை
நேற்று, சிறிலங்காவிலிருந்து தமிழகத்திற்கு பயிற்சிக்காக வந்த 8 சிங்கள விமானப்படையைச் சேர்ந்த சிப்பாய்கள் தமிழக முதலவரின் தலையீட்டையடுத்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வந்தது.
இவர்கள் அனைவதும், தாம்பரம் பயிற்சி முகாமில் மூன்று மாத பயிற்சிக்காக இவர்கள் வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
இதனையடுத்து எட்டு சிறிலங்கா விமானப்படையினரும் உடனடியாக அங்கிருந்து மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பியனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால், இந்த எட்டு சிங்கள விமானப்படை சிப்பாய்களும் தற்பொழுது, பெங்களூரிலுள்ள ஏலங்கா இந்திய விமானப்படை தளத்தில் இறக்கப்பட்டுள்ளதாய் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை அடுத்து, பெங்களூரிலுள்ள தமிழின உணர்வார்கள், ஏலங்கா விமானப்படை தளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த எண்ணியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment