போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. (தமிழீழ தேசியத் தலைவர்.)
>> Monday, June 22, 2009
தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம்.
தமிழன் தன் தாய் மண்ணையும், பல மாவீரர்களையும் இழந்திருக்கும் நிலையில் இருக்க!
உலகமோ, அழிக்கும் பௌத்த அரசின் பின்னால் நிற்க!
காந்தீயம் காசு நோட்டில் மட்டும் இருந்து சிரிக்க!
புலம் பெயர் நாடுகளிலெல்லாம் உண்ணாவிரதங்களும் வழி மறிப்புப் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்க!
சில மனிதர்கள் மட்டும் தாங்கள் ஏதோ வேற்றுக்கிரக மனிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.
தமிழனுக்கு 2009ம் ஆண்டே ஒரு துக்க ஆண்டாகத்தான் இருக்கவேண்டும்.
சிறிலங்கா அரசால் படு கொலைசெய்யப்பட்ட உடலங்கள் எரிக்கப்படவோ தாக்கப்படவோ இல்லாமல் அழுகிக் கொண்டிருக்க,
இப்படியான சூழ் நிலையில் எப்படி உங்களால் தேர் இழுக்க முடிகிறது புலம் பெயர் தேசத்தில்!
ஏதோ மனச்சாந்தி, இறந்தவர் ஆத்ம சாந்தி என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே காரணம் சொல்லிக் கொள்ளலாம்.
என்ன இனம் இந்த இனம் என்று எண்ணமாட்டானா?
போர் முடிந்தது என்ற எண்ணிவிட்டோமா? அல்லது ஈழம் தான் கிடைத்துவிட்டது என்று எண்ணிவிட்டோமா?
இப்படி எதுவுமே வெளிவராமல் இருக்க எப்படி எம்மால் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது.
உறவுகளே அழும் காலமல்ல இது?
நீங்கள் அழுது அழுது உங்கள் துயரங்களை ஆற்றிக் கொள்ள வேண்டாம்.
"அந்நியன்"; என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி.
அந்நிய மண்ணில் நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அதை, எதிரி எடுத்துக் காட்டும் உதாரணமாகவும் மாறக் கூடும்.
0 கருத்துரைகள்:
Post a Comment