‘முகவரி அல்ல முகம்’ கட்டுரைத் தொடர் – கண்மணி
>> Sunday, July 5, 2009
நாளைய விடியலை
ஈழத்தில் எழுத
நீளும் கதிர்களில்
நிச்சயம் உமது
உயிரின் சூடும்
ஒன்றித்திருக்கும்.
துரோகத் தூசுப் படலத்தை
உயிரின் சுவாலையால்
பொசுக்கிய புலிகளே!
ஈழத் தமிழர்க்குக்
கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர்
கரங்கள் நீளுக…
ஈழத் தமிழர்க்குத்
தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள்
தளங்கள் ஆகுக…
ஈழத் தமிழர்க்கு
ஆயுதம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ஆயுதம் செய்க…
ஈழத் தமிழர்க்கு
ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ரத்தம் பாய்க!…
என்சொல் பழகிய
செவிகள் கேட்கட்டும்
உன்னை மறுப்பது
என்னை மறுப்பது.
சிறகு விரித்து
விதையொன்று அலையும்
முளைக்க ஒருபிடி
மண்தேடி.
தமிழ் கவிஞர் இன்குலாப்
0 கருத்துரைகள்:
Post a Comment