சவூதி அரேபியாவில் இரு இலங்கையர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றம்
>> Thursday, November 5, 2009
சவூதி அரேபியாவில் கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு இலங்கையர்களுக்கும் ஒரு இந்தியருக்கும் சிரச்சேதம் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையர்களில் ஒருவர் பெண் என்பதும் ஜெட்டாவின் செங்கடல் நகரில் இவர்கள் மூவரின் தலைகளும் வாளால் துண்டாக்கப்பட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சர் கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த பார்மில் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பந்தர் நிகார் ஆகிய இருவரும் சவூதி பெண்மணியான மரியம் ஹுசைன் வீட்டுக்குள் சென்று அவரை மூச்சுமுட்டச் செய்து கொலை செய்ததோடு அங்கிருந்த நகைகளையும் திருடியுள்ளனர்,
மேற்படி இருவரும் சவூதி பெண்மணியில் வீட்டில் வேலைக்கிருந்த இலங்கைப் பெண்மணியின் உதவியுடன் அங்கு சென்றுள்ளமையும் உறுதியானதாலேயே மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மூவரின் மரண தண்டனைகளுடன் சேர்த்து இந்த ஆண்டு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை 59 ஆகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இது 102 ஆக இருந்தது.
1 கருத்துரைகள்:
அதனால் தான் குற்றம் குறைவாக உள்ளது இல்லையென்ரால் கொலை கற்பலிப்பு என்று மறனிப்பவர் என்னிக்கை எங்கோ சென்றிர்கும் பகிர்வுக்கு நன்றி
Post a Comment