ஃபோட்டூன்
>> Tuesday, February 16, 2010
செம்மொழி மாநாட்டுக்காக வெளிக் கிரகங்கள்லேர்ந்து வர்றவங்களை வரவேற்கிற குழுவில உங்களைப் போடலாம்னு இருக்கேன்... என்ன சொல்றீங்க...?
என்னது, ஒங்கூர்ல இவ்ளோ சின்ன சிலிண்டரா தர்றாங்களா...? எங்கூருக்கு வாங்க... இத விடப் பெரிய சிலிண்டர இலவசமாவே தாரோம்... இந்தச் சின்ன விசயத்துக்குப் போயி எதுக்கு இம்புட்டுப் பெரிய ஆர்ப்பாட்டம்...?
ஐயா, நீங்க கிரிக்கெட் விளையாட பிராக்டிஸ் பண்றீங்களா இல்லை அரசியல்ல நுழையறதுக்கா... பல்டியெல்லாம் பலமா இருக்கு...
பூக்களைப் பறிக்காதீர்கள்னு போர்டு போட்டுட்டு நீங்களே பறிச்சா எப்படி மேடம்...?
கடவுள் மிகப் பெரியவன்னு எல்லாரும் சொன்னப்போ எனக்கு சரியாப் புரியலை... ஆனா இப்போ நல்லாப் புரியுது...
ஸ்பெக்ட்ரம் பிரச்னைதான் முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டேனே... அப்புறம் யாருய்யா அதப்பத்திக் கேக்கறது...? அதையெல்லாம் தாண்டி எங்கேயோ போயாச்சு, இன்னும் பழசையே கிளறிக்கிட்டு...
குழந்தைத் தொழிலாளர்களா...? நாங்களா...?? சேச்சே, காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிக்காகப் பயிற்சி எடுக்கிறோம்... அவ்வளவுதான்...
ஏன்யா, தாகமா இருக்குன்னு சொன்னா பாத்திரத்தில பச்சத் தண்ணியக் கொண்டு வர்றீங்களே... பெப்சி, கோக்னு கூல் டிரிங்க் எதுவும் இல்லையா இந்த ஜூவுல...?
ஆட்சி மாறிட்டா, உடனே 'பாசத்தலைவிக்கு' அப்படின்னு போட்டு இதே மாதிரி போட்டோவுக்கு போஸ் கொடுக்க அங்கே ஓடிட மாட்டீங்களா என்ன...? அரசியல்ல உங்களை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்...?
ஏம்மா இந்த அவஸ்தை...? ஒழுங்கா கை வெச்ச சட்டை போட்டிருந்தா இந்த மாதிரி சங்கடமெல்லாம் வந்திருக்காது இல்லியா...?
source:dinamani
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment