சவுதி இளவரசரின் கோபம் : காட்டிக் கொடுத்தது கேமரா
>> Wednesday, October 6, 2010
லண்டன் : லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த சவுதி இளவரசர், தனது உதவியாளரை கடுமையாக தாக்கியது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த உதவியாளர் இறந்துவிட்டார். சவுதி அரேபிய மன்னரின் சகோதரரின் பேரன் அப்துல் அஜிஸ் பின் நாசர்(34). இவர் கடந்த பிப்ரவரி மாதம், லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இவருடைய உதவியாளரும் இவரது அறையில் தங்கியிருந்தார். ஆனால், பிப்ரவரி 15ம்தேதி உதவியாளர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உதவியாளரின் கன்னத்தில் காயம் இருந்தது. எனவே, இந்த கொலை பாலியல் தொடர்பானதாக இருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்தது தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாது, என முதலில் மறுத்திருந்தார் அப்துல் அஜிஸ். ஓட்டல் படிகட்டில் தனது உதவியாளரை சவுதி இளவரசர் கடுமையாக தாக்கியது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. உதவியாளரை தாக்கியதை ஒப்புக்கொண்ட இளவரசர் இந்த கொலையை செய்யவில்லை, என மறுப்பு தெரிவித்துள்ளார். source:dinamalar
--
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment