சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !
>> Thursday, August 18, 2011
ஈழத் தமிழர்களுக்கு சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !
முதல்வர் ஜெயலலிதா நேற்று(16.08.2011) தலைமைச் செயலகத்தில் வைத்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும்,
சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார் என அதிர்வு இணையம் அறிகிறது. (புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது)
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment