|
சமீபத்திய பதிவுகள்
மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன
மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டு அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன
சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இராணு ஆக்கிரமிப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்களை மனிதக் கேடமான முன்னகர்த்தியவாறு படையினர் மேற்கொண்ட படை நகர்வுகளின் போது படையினரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குறி சூட்டு அணியினர் நடத்திய குறி சூட்டுத் தாக்குதல்களினால் அவை முறியடிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு நகர்வுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போதும் அவை விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதல்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதானல் படையினரின் நகர்வுகள் காலதாமதமாகி வருகின்றன.
மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தும் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மக்களை பச்சைப்புல்மோட்டைப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். அங்கிருந்தவாறே நகர்வுகள் மேற்கொள்ளப்படும் முன்னணி நிலைக்கு மக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கமல்,ரஜினியை சீண்டு முடியும் தினமலர் பத்திரிக்கையின் சின்னத்தனம்
திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக்கும் இடையே சீண்டு முடியும் தன்னுடைய சின்னப்புத்தியை தொடங்கியுள்ளது.
ஈழப்போராட்டத்தை வேரோடு வெட்டியெறிய துணிந்துள்ள மத்திய அரசின் கயமைத்தனத்தை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட பத்மஸரீ விருதை திரும்ப கொடுக்க ஆயத்தமாகியுள்ள பாரதிராஜாவுக்கும்,கமல்,ரஜினி போன்ற முன்னனி நட்சத்திரங்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கி ஈழ உணர்வை திரைப்பபடத்துறையில் இருந்து முற்றாக அழித்துவிட தினமலர் களம் இறங்கியுள்ளது.
தினமலரின் கயமைத்தனத்தை எத்தனையோ முறை அறிந்துகொண்டுள்ள நாம் இதனை சரியாக எடுத்துச்சொல்லவேண்டியுள்ளது.
கீழே உள்ள படத்தை பெரிதாக்கி அதில் அடிக்கோடு போடப்பட்டுள்ள வார்த்தை பிரயோகங்கள் எந்த விதமான பலனை எதிர்பார்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தினமலர் கட்டுரையை முழுமையாக படிக்க